Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உத்தேச தேர்தல் முறை சீர்திருத்தம் - தெரிவுக் குழு யோசனையை சர்வகட்சிக் குழு நிராகரிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உத்தேச தேர்தல் முறை சீர்திருத்தம் - தெரிவுக் குழு யோசனையை சர்வகட்சிக் குழு நிராகரிப்பு

[08 - August - 2007] [Font Size - A - A - A]

-ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்-

பாராளுமன்றத் தெரிவுக் குழு முன்வைத்த உத்தேச தேர்தல் மறுசீரமைப்பு யோசனைகளை முழுமையாக நிராகரித்துள்ள சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழு, சிறுபான்மையினங்கள் உட்பட சகல சமூகங்களுக்கும் பாதிப்பில்லாத ஜேர்மன் தேர்தல் முறையை ஒத்த முறைமையினை இன நெருக்கடிக்கு தீர்வு காணும் தனது இறுதி யோசனைகளில் உள்ளடக்கியுள்ளது.

சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவானது விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையினை 50 சதவீதமும் பழைய தொகுதிவாரி பிரதிநிதித்துவ முறையினை 50 சதவீதமும் கொண்டதாக புதிய யோசனைகளை முன்வைத்திருக்கிறது. இதற்கு குழுவில் அங்கம் வகிக்கும் சிறுபான்மைச் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுடன் இடதுசாரிக் கட்சிகள் ஏகோபித்த ஆதரவைத் தெரிவித்துள்ளன.

அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தலைமையிலான பாராளுமன்ற தெரிவுக் குழு சமர்ப்பித்திருந்த தேர்தல் மறுசீரமைப்பு யோசனையானது சிறுபான்மை சமூக பிரதிநிதித்துவத்தை நிராகரிக்குமெனவும் சிறுபான்மை சமூகங்களின் பேரம் பேசும் ஆற்றலை மழுங்கடிக்குமெனவும் கூறி தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் அதனை முற்றாக நிராகரித்திருந்தன.

அத்துடன், ஐ.தே.க. மற்றும் ஜே.வி.பி. ஆகியனவும் தேர்தல் மறுசீரமைப்பு யோசனையை எதிர்த்திருந்தன.

எனினும், அரசாங்கம் பாராளுமன்ற தெரிவுக் குழுவின் தேர்தல் மறுசீரமைப்பு யோசனையை பாராளுமன்றத்திற்கு கொண்டுவந்து அதனை சட்டமூலமாக்குவதில் முனைப்பு காட்டியிருந்தது.

பாராளுமன்றத்தில் சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதித்துவத்தை அழித்தொழிக்கும் திரைமறைவு முயற்சியென இதற்கு கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.

இந்நிலையிலேயே பாராளுமன்ற தெரிவுக் குழுவின் தேர்தல் மறுசீரமைப்பு யோசனைகளை இனநெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழு நிராகரித்துள்ளது.

சர்வகட்சிப் பிரதிநிதிகளின் முக்கிய கூட்டமொன்று நேற்று முன்தினம் மாலை திங்கட்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் நடைபெற்றுள்ளது.

இச்சந்திப்பிலேயே சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு ஜேர்மன் தேர்தல் முறையினையொத்த புதிய தேர்தல் முறை யோசனையை முன்வைத்துள்ளனர். இதில் கட்சிக்கும் தொகுதிக்கும் வாக்களிக்க வாக்காளருக்கு வாய்ப்பு வழங்கப்படும். அதாவது இரட்டை வாக்குரிமை வழங்கப்பட இடமளிக்கப்படும்.

50 சதவீதம் விகிதாசார தேர்தல் முறையினையும் 50 சதவீதம் தொகுதிவாரி பிரதிநிதித்துவ முறையினையும் இத்தேர்தல் முறை கொண்டுள்ளது. இதனால் இனவிகிதாசாரம் முற்றிலும் பேணப்படும்,

மலையக முஸ்லிம் சமூகங்களின் பிரதிநிதித்துவத்தையும் இத்தேர்தல் முறை வலுவுடையதாக்கும். சிறுபான்மை பிரதிநிதித்துவத்திற்கான பாதுகாப்பு கவசமாக சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு தயாரித்துள்ள புதிய தேர்தல் முறையினை கருத முடியுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் உறுப்பினரொருவர் தெரிவித்தார்.

அத்துடன், பாராளுமன்ற தெரிவுக் குழு சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதித்துவத்திற்கு ஆப்பு வைக்கவிருந்த சமயம் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் புதிய தேர்தல் முறை சிறுபான்மை சமூகத்திற்கு பெரும் வரப்பிரசாதமெனவும் இதுவே இறுதித் தீர்வில் உள்ளடக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கும் மக்கள் ஐக்கிய முன்னணியின் பிரதிநிதியான பேராசிரியர் நளின் டீ சில்வா, பாராளுமன்ற தெரிவுக் குழுவின் தேர்தல் மறுசீரமைப்பு யோசனை நிராகரிக்கப்பட்டு சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவினர் புதிய தேர்தல் யோசனையை தயாரிப்பதற்கு தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் நேற்று செவ்வாய்க்கிழமை சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவினர் இதுவரை எட்டியுள்ள இணக்கப்பாடுகள் குறித்து கருத்துகளை கேட்டறிந்துள்ளது.

இதேசமயம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ, பேராசிரியர் திஸ்ஸ விதாரணவை அலரி மாளிகைக்கு அவசரமாக அழைத்து நேற்று செவ்வாய்க்கிழமை முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டதாகவும் அறியவருகிறது.

இந்நிலையில் இனநெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் அறிக்கை அடுத்தவாரம் அல்லது எதிர்வரும் 15 ஆம் திகதி வெளியாகலாமெனவும் இதில் சிறுபான்மையினருக்கு நன்மையளிக்கும் பலவிடயங்கள் உள்ளடங்கியிருப்பதாகவும் அறியவருகிறது.

அதேவேளை, முஸ்லிம் காங்கிரஸ் பிரதி செயலாளர் நாயகமும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான நிஷாம் காரியப்பர் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவிடம் முன்வைத்த மாகாண சபைகளுக்குரிய கொடிகளை மாகாணங்களே உருவாக்க வேண்டுமென்ற யோசனையும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அது சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தீர்வு யோசனையிலும் அரசியலமைப்பிலும் உள்ளடக்கப்பட அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அறியவருகிறது.

நன்றி - தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.