Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெருக்கடியின் சுமையைத் தணித்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நெருக்கடியின் சுமையைத் தணித்தல்

 

 

 
 

விக்டர் ஐவன்

***********

புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்புடைய பல அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் பிரதேசங்களை அவர்களின் ஆதரவுடன் அபிவிருத்தி செய்ய அனுமதிக்க வேண்டும். இது நாட்டிற்கு அந்நிய செலாவணியின் முக்கிய ஆதாரமாக மாறும். அதேவேளை, வடக்கு, கிழக்கு மக்களிடம் இருந்து பாதுகாப்புப் படையினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகள் அனைத்தும் அவற்றின் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்கப்பட வேண்டும். எனவே, அந்தப் பிரதேசங்களில் சிறப்பான அபிவிருத்தி ஏற்படுமாயின் அது வடக்கு, கிழக்கில் வாழும் மக்களுக்கு மாத்திரமல்ல முழு நாட்டுக்கும் நன்மை பயக்கும் என்பதை நாட்டின் ஏனைய மக்களும் உணர வேண்டும்.

*******************************

இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடி தற்போது ஒரு தீர்க்கமான  கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் அதனை முறையாகமுகாமைத்துவப்படுத்தா விட்டால் நாடு இப்போது இருப்பதை விட மிக மோசமான படுகுழியில் விழும் அபாயம் உள்ளது. ஏதோ ஒரு காரணத்தால், அது படுகுழியின் அடுத்த கட்டத்தில் விழுந்தால், இலங்கை ஒருஆதிகாலம் போன்ற   கட்டத்தில் நீண்ட காலத்துக்கு  வாழ வேண்டிய நிர்ப்பந்தம்  கூட ஏற்படலாம். இலங்கை தற்போது முக்கியமாகக் கருத வேண்டியது, நாட்டை இந்த நிலைக்குத் தள்ளியதாகக் கூறப்படும் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்களைத் தண்டிப்பது அல்ல, ஆனால் தற்போதைய இக்கட்டான நிலையை  அடுத்த கட்டத்திற்குச் செல்லாமல் தடுப்பதன் மூலம் அதைதாண்டி செல்வதற்கு பொருத்தமான வழியைக் கண்டுபிடிப்பதாகும்.
 
இந்த நெருக்கடியை சமாளிக்கும் முயற்சியில், மக்களும் அரசியல் கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் செயற் பட வேண்டிய தற்கான பொதுவான தளமொன்றிற்கு கொண்டு வரப்படுவது முக்கியம். ஆனால், இதுவரை அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் புதிய கட்சியோ, புதிய தலைவரோ உருவாகவில்லை. எனவே, இத்தருணத்தில் மக்களை ஒரு பொது முன்னணியில் ஒன்றிணைப்பதற்கான சிறந்த வழி, பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து, அனைத்துக் கட்சி அரசாங்கமாக ஒன்றிணைந்து செயற்படுவதற்கு அவர்களை ஊக்குவிப்பதாகும். ஊழலற்ற, மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய தலைவர்களைக் கொண்ட புதிய அரசாங்கத்தை அமைப்பதே இந்த நெருக்கடியைச் சமாளிப்பதற்கான சிறந்த வழியாகக் கருதப்படலாம், ஆனால் அது களத்தில் நிலவும் யதார்த்தத்திற்கு முரணானதாகும் .
 
ஆளும் கட்சியை அகற்ற வேண்டும் என்றால், அது அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் இடம்பெற  வேண்டும். எனவே “மறுசீரமைப்புகளுக்கான  மக்கள் இயக்கம்”, தற்போதைய ஆளும் கட்சியைப் பற்றி விரைவாக முடிவெடுக்கும் உரிமையை மக்களுக்கு வழங்குவதற்கான மறுசீரமைப்பு  திட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் முன்கூட்டியே தேர்தலைநடத்துவதை  சேர்த்துள்ளது. எவ்வாறாயினும், அரசியலமைப்பிற்கு முரணான முறையில் ஆளும் கட்சியை கவிழ்க்கும் எந்தவொரு முயற்சியும் நெருக்கடியைத் தீர்க்கும் நாட்டின் ஆற்ற லை சீர்குலைக்கக்கூடும் என்பதையும், அது நாட்டை மோசமான வகையிலான  அராஜக நிலைக்கு தள்ளக்கூடும் என்பதையும் வலியுறுத்த வேண்டும்.
 
இந்த அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு, நாட்டின் நலனுக்காக,நெருக்கடியை சமாளிக்க அனைத்துக் கட்சி அரசாங்கத்தை உருவாக்குவதும், முறைமையில்  ஆழமான மாற்றத்தைக் கொண்டுவரும் மறுசீரமைப்புத்  திட்டத்தை நோக்கி நாட்டைக் கொண்டுசெல் வதற்கு மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்வதே சிறந்த தேர்வாக இருக்கும்.
 
மறுசீரமைப்புத்  திட்டம் மற்றும் முறைமையில்  ஆழமான மாற்றத்திற்கு அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதன் இன்றியமையாத  தேவை யானது , சீர்திருத்தத்திற்கான மக்கள் இயக்கம், அரசியல் கட்சிகளுடன் நாங்கள் நடத்திய கலந்துரையாடல்க லிருந்து  தெரிகிறது,இது தொடர்பாக  அனைவரையும் ஒருங்கிணைப்பது  எளிதான  காரியம் அல்ல.  ஆனால் அது முடியாத காரியமும் அல்ல. இது கடினமானது ஆனால் வெற்றி பெறக்கூடிய தாகும்.. நாட்டிற்குத் தேவையான மறுசீரமைப்புகள் குறித்துப் போதியளவுக்கு   உரையாடல்கள் இடம்பெற் றா லும் சென்மதி நிலுவை தொகை பிரச்சினை நிலவும் வரை நாட்டின் நெருக்கடியைச் சிறப்பாக நிர்வகிப்பதற்கான கொள்கைகளை உள்ளடக்கியபிரச்சனை தீர்க்கப்படுவைத்து தொடர்பானதொரு  தேசியத் திட்டத்தின் அவசியம் குறித்துப் போதுமான அக்கறை இல்லை, எந்த உரையாடலும் இல்லை.
அது பற்றிய எனது கருத்துக்களை பகிர்ந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்..
 
1. இந்த நெருக்கடியை சமாளிக்க என்ன செய்யலாம் என்பது பற்றி பொதுமக்கள் மிகவும் சாதகமான கருத்துக்களைக் கொண்டிருக்கலாம். பொதுமக்களின் கருத்துக்களைப் பெற அரசு உடனடியாக ஒரு பொது இணையதளத்தை தொடங்கலாம். அப்போது அரசு அதிகாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் சமர்ப்பிக்கப்படும் முன்மொழிவுகளை அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
2. புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்புடைய பல அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் பிரதேசங்களை அவர்களின் ஆதரவுடன் அபிவிருத்தி செய்ய அனுமதிக்க வேண்டும். இது நாட்டிற்கு அந்நிய செலாவணியின் முக்கிய ஆதாரமாக மாறும். அதேவேளை, வடக்கு, கிழக்கு மக்களிடம் இருந்து பாதுகாப்புப் படையினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகள் அனைத்தும் அவற்றின் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்கப்பட வேண்டும். எனவே, அந்தப் பிரதேசங்களில் சிறப்பான அபிவிருத்தி ஏற்படுமாயின் அது வடக்கு, கிழக்கில் வாழும் மக்களுக்கு மாத்திரமல்ல முழு நாட்டுக்கும் நன்மை பயக்கும் என்பதை நாட்டின் ஏனைய மக்களும் உணர வேண்டும்.
3. இந்த நெருக்கடியால்  நாடு முழுமையானவீழ்ச்சியை  நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அனைத்தும் இல்லாவிட்டாலும், அரசு மற்றும் அரசு சாராத நிறுவனங்களின் முழு முறைமையும் ,  வீழ்ச்சியடைந்த நிலையில் உள்ளது. இந்த நேரத்தில் வீழ்ச்சியின் விளிம்பில் இருக்கும் அனைத்து நிறுவனங்களையும் பாதுகாக்கும் திறன் நாட்டிற்கு இல்லை. மூலோபாய அர்த்தத்தில் செய்யக்கூடிய சிறந்த விட யம், நாட்டின் உயிர்வாழ்விற்கு அத்தியாவசியமான நிறுவனங்களை அடையாளம் கண்டு, அவற்றின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் கொள்கையை  செயற் படுவதாகும். (அ) அரச துறை மற்றும் அரை அரசு நிறுவனங்களை உள்ளடக்கிய பொதுத்துறை ஊழியர்களின் எண்ணிக்கையானது , பொதுத்துறையை பராமரிக்க தேவையான எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. இது இலங்கையின் தோல்வியில் தாக்கம் செலுத்தும் குறிப்பிடத்தக்க காரணியாகும். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையை இந்த பிழையை சரி செய்ய ஒரு வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும். இந்தச் செயற் பாட்டில் வேலையிழப்பவர்களுக்குப் பகுதி இழப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, விவசாயம் செய்ய விரும்புவோருக்கு அரசு நிலம் ஒதுக்கும் திட்டத்தைத் தொடங்கலாம். இது அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கவும், பொதுத்துறையை மேலும் உறுதி யானதாக மாற்றவும் உதவும்.
4. பெற்றோல் மற்றும் டீசல்பாவனையை  கட்டுப்படுத்தும் மற்றும் எரிபொருள் பயன்பாட்டின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் முகாமைத்துவக்  கொள்கை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். பொதுப்  போக்குவரத்தை ஊக்குவிக்கும் மற்றும் தனியார் போக்குவரத்தை ஊக்குவிக்கப்படாத  கொள்கை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். மேலும், அதிக எரிபொருள் கொண்ட சொகுசு வாகனங்களை தனியார் பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதை தடுக்கும் கொள்கை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். நுகர்வோர் பெற்ற பெற்றோ  லியப் பொருட்களின்  பயன்பாட்டின் செயற் பாட்டு  தன்மையை மதிப்பிடுவதற்கும், ஒரு வார காலத்திற்கு எரிபொருள் தேவையின் அளவைக் கணக்கிட்டு,பங்கீட்டுமுறைமையில்  அந்த அளவை வழங்குவதற்கும் ஒரு முறைமை  வகுக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யும்போது, பொது சுகாதாரம், உற்பத்தி மற்றும் விநியோகம் (விவசாயிகள், மீனவர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள்) போன்ற துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கை இருக்க வேண்டும்.

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000

நாட்டின் நலனுக்காக, அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதும், நெருக்கடியைச் சமாளிப்பதற்கும்,நாட்டைமறுசீரமைப்பதை  நோக்கிச் செல்வதற்காக முறைமையில்  ஆழமான மாற்றத்தை கொண்டு வருவதற்குமான நிகழ்ச்சி த்   திட்டம்தொடர்பாக  ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்ள பொது மக்களையும் அரசியல் கட்சிகளையும் ஊக்குவிப்பதே  சிறந்த வழி.

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

மேலும், ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு ஒரு வாகனத்திற்கு மட்டுமே எரிபொருள் வழங்கும் கொள்கை இருக்க வேண்டும். இந்தியாவைப் போலவே, இலங்கையும் பயோடீசல் உற்பத்தி மற்றும் நுகர்வு கொள்கையை நோக்கி நகர வேண்டும். (பயோடீசல் உற்பத்திக்குத் தேவையான அடிப்படை மூலப்பொருட்கள் பயன்படுத்தப்படும் காய்கறி மற்றும் விலங்கு எண்ணெய்கள்,க சிப்பு மற்றும் கோ ஸ்டிக் சோடா ஆகும்). பெற் றோ லுடன் 15% எத்தனோலை கலப்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் சாத்தியமான கலவையாகும் என்பதை அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒப்புக் கொண்டுள்ளன, மேலும் அந்த நாடுகளில் கலவையானது சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எத்தனோ ல், அரிசி மற்றும் சோளத்திலிருந்தும், பூசணி அல்லது குப்பையிலிருந்தும் தயாரிக்கப்படலாம். நாட்டின் இறக்குமதி செலவில் 50% பெற் றோ லிய இறக்குமதிக்காக செலவிடப்படுகிறது.
 
சர்வதேச அளவில் இந்த விட யத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியைப் பின்பற்றி, தொழில்துறை அபிவிருத்தி  சபை மற்றும் பல்கலைக்கழகங்கள் குறைந்த முதலீட்டுச் செலவில் பயோடீசல் மற்றும் எத்தனோலை வீடுகள்  மட்டத்தில் உற்பத்தி செய்யும் முறையை உருவாக்கி, வாகனப் பயன்பாட்டுக்கான நுகர்வு முறையாக ஏற்றுக்கொள்ளலாம். இது நாட்டிற்கு செல்வத்தை உருவாக்கும் செல்வத்தின் வலுவான புதிய பொருளாதார ஆதாரமாகவும், நூறாயிரக்கணக்கான கிராமப்புற மக்களுக்கு போதுமான வருமானத்தை கொண்டு வரும் ஒரு பிரபலமான வாழ்க்கை முறையாகவும் மாற்றப்படலாம். பெற் றோ லியத்தை இறக்குமதி செய்வதற்கான செலவைக் கணிசமாகக் குறைக்கவும் இது உதவும். இதைப் பற்றி நான் ஒரு வருடத்திற்கு முன்பே எழுதினேன், ஆனால் அது அதிகாரிகளின் அல்லது புத்திஜீவிகளின் கவனத்திற்கு வரவில்லை.
 
5. வன விலங்குகளால் விவசாயத்திற்கு ஏற்படும் சேதம் 40% என்று அரசின் மதிப்பீடுகள் குறிப்பிடுகின்றன. பொதுவாக, வன விலங்குகளால் விவசாயத்துக்கு ஏற்படும் சேதம் 10%க்கு மேல் வருவதை எந்த நாடும் அனுமதிக்காது. இந்த விடயத்தில் இலங்கையின் பின்தங்கிய நிலை என்னவென்பது புரிந்துகொள்ளக்கூடியதே. விவசாயத்திற்கு தீங்கு விளைவிக்கும் காட்டு விலங்குகளை (கிளிகள், குரங்குகள், காட்டுப்பன்றிகள், மயில்கள்) வேட்டையாடும் உரிமையை விவசாயிகளுக்கு வழங்குவதன் மூலமும், இறைச்சியை வைத்திருக்கவும், கொண்டு செல்லவும், விற்கவும் அனுமதிப்பதன் மூலம் கிராமப்புற விவசாயத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் மற்றும் வேட்டையாடுவதை நல்லவருமான ஆதாரமாக வும் மாற்ற முடியும்.
6. அரசு உரிமத் திட்டத்தின் கீழ் நிலம் பெற்ற அனைவருக்கும் நிரந்தர உரிமை வழங்கவும், நிலம் பயிரிட ஆர்வமுள்ள மற்றும் நவீன விவசாயத்தில் ஈடுபட விரும்புபவர்களுக்கு நிலம் வழங்கவும் நிலச் சீர்திருத்தத் திட்டம் தொடங்கப்படும். தனியார்மயமாக்கலின் கீழ் தோட்டக் கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட காணிகளை தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் தோட்டங்களை அண்மித்த கிராமங்களில் வாழும் கிராமப்புறக் குடும்பங்களுக்கும் குத்தகைக்கு வழங்குவதற்குரிய கொள்கையொன்று ஏற்றுக்கொள்ளப்படலாம்.
7. மாட்டிறைச்சி தொழில் தொடர்பாக மட்டும் இலங்கை பின்பற்றும் கொள்கையை மாற்றுவது, அதன் வளர்ச்சிக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தடையாக இருப்பதால், கால்நடை வளர்ப்பில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன், இலங்கைக்கு தேவையான பாலை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியும். , அதை நம்பி வாழும் மக்களின் வருமானத்தை இரட்டிப்பாக்க பங்களிக்கும் போது. மாடு வளர்ப்பு பால் மற்றும் இறைச்சி ஆகிய இரண்டையும் உற்பத்தி செய்யத் தொடராத வரையில் அது பொருளாதார ரீதியாகஇ  லாபகரமானதாக இருக்காது. மாட்டிறைச்சித் தொழிலை ஊக்குவிக்கும் கொள்கையானது, பாலில் நாட்டை தன்னிறைவு அடையச் செய்வதற்கு நிச்சயமாகப் பங்களிப்பை  வழங்கும்
8. மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் அனல் மின்சாரத்தை நம்பியிருக்காமல் சூரிய சக்தியை நம்பியிருக்கும் கொள்கையை பின்பற்றாததால் இலங்கையில் நாம் செலுத்த வேண்டிய இழப்பீடு மிகப்பெரியதாகும்.. இந்த பிழை திருத்தப்பட வேண்டும். அனைத்து கோவில்கள், தேவாலயங்கள், , கோவில்கள் சூரிய சக்தியில் இயங்க வேண்டும் என்று பரிந்துரைக்கலாம். இந்த வகையைச் சேர்ந்த பல நிறுவனங்கள் அதற்குத் தேவையான நிதியைக் கொண்டுள்ளன, மேலும் போதுமான நிதி இல்லாதவர்கள் கூட தங்களுக்குத் தேவையான நிதியை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும்.
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் 200,000 வீடுகளை இலக்காகக் கொண்டு தங்கள் உள்ளூர் வீடுகளை சூரிய சக்தியில் இயங்குப வையாக மாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படலாம். ஒரு உயர்தர சூரிய மின்கல  தொகுப்பை முழுமையாகவோ அல்லது தவணையாகவோ செலுத்தக்கூடிய நியாயமான விலையில் பெறக்கூடிய ஒரு முறைமையை  அறிமுகப்படுத்த முடியும். இவ்வாறானதொரு வேலைத்திட்டத்தை பிரபலப்படுத்த முடியுமானால், அது இலங்கைக்கு தற்போது மிகவும் தேவையான டொலர்களை ஈட்டுவதற்கான ஒரு முக்கிய ஆதாரமாக அமையும், அத்துடன் மின்சாரத்திற்காக  அனல் மின்சாரத்தை நம்பியிருப்பதை பெருமளவு குறைக்கும்.
 
 பினான்சியல் டைம்ஸ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.