Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்குகிழக்கு மக்கள் கொடூர ஆட்சிக்குபயந்து இந்தியாவுக்கு தப்பி ஓடுகின்றனர்-கொழும்பு மாவட்ட எம்.பி. தி. மகேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்குகிழக்கு மக்கள் கொடூர ஆட்சிக்குபயந்து இந்தியாவுக்கு தப்பி ஓடுகின்றனர்

வீரகேசரி நாளேடு

தமிழர்கள் கடத்தப்படுதல், கப்பம் பெறப்படல் மற்றும் படுகொலை செய்யப்படும் சம்பவங்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். யாழ்ப்பாணத்தில் தினமும் மூன்று இளைஞர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர் என்று சபையில் ஐ.தே.க. வின் கொழும்பு மாவட்ட எம்.பி. தி. மகேஸ்வரன் தெரிவித்தார்.வடக்கு, கிழக்கு மக்கள் இந்த கொடூர ஆட்சிக்கு பயந்து இந்தியாவுக்கு தப்பி ஓடுகின்றனர். தமிழர் கடத்தப்படுதல், கப்பம் பெறப்படல் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த மௌனம் காப்பது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.அவசரகால சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தை எதிர்க்கட்சி சார்பாக நேற்று ஆரம்பித்து வைத்து உரையாற்றிய மகேஸ்வரன் எம்.பி. மேலும் கூறியதாவது:

இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கின்றது. கொழும்பிலும் புறநகர் பகுதிகளிலும் வடக்கு கிழக்கிலும் இளைஞர்கள் கடத்தப்படுகின்றனர், காணாமல் போகின்றனர். கொலை செய்யப்பட்டு சடலங்களாக மீட்கப்படுகின்றனர். இதுதான் கடந்த 14 மாதங்களாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் நாடகம்.

பல இலட்சம் மக்கள் கிழக்கிலே இடம்பெயர்ந்துள்ளனர். பல ஆயிரக்கணக்கான மக்கள் தொழில் இன்றி அவதிப்படுகின்றனர். நூற்றுக்கணக்கான பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். இந்த மனிதஉரிமை மீறல்கள் எல்லாம் ஜனாதிபதிக்கும் அமைச்சர்களுக்கும் தெரியாதா அல்லது தெரிந்தும் தெரியாதது போன்று செயற்படுகின்றனரா? அல்லது அவர்களின் கட்டளைப்படிதான் அவை நடைபெறுகின்றதா? என இந்த சபையில் கேட்கின்றேன்.

வடக்கு கிழக்கு மக்கள் இந்த கொடூர ஆட்சிக்கு பயந்து இந்தியாவுக்கு தப்பி ஓடுகின்றனர். கொழும்பிலே வந்து விசா பெறுவதற்காக இந்திய தூதரகத்திற்கு முன்பாக அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர்.இந்திய பிரதி தூதுவரை நான் சந்தித்து வேண்டுகோள் விடுத்திருந்தேன் விரைவாக விசாவை வழங்கி இந்தியாவுக்கு அனுப்பி வைக்குமாறு. அவர் அதனை ஏற்றிருந்தார். பௌத்த மதம் கொலை செய்யுமாறு கூறவில்லை. அன்பு, கருணையைத்தான் பௌத்த மதம் போதிக்கின்றது.தாய்லாந்திலும

Edited by கறுப்பி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.