Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் திரைமறைவு முயற்சிதான் கிழக்குத் தேர்தல்: த.தே.கூ. சந்திரகாந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் திரைமறைவு முயற்சிதான் கிழக்குத் தேர்தல்: த.தே.கூ. சந்திரகாந்தன்

[வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2007, 15:58 ஈழம்] [கொழும்பு நிருபர்]

தமிழர் பிரதிநிதித்துவத்தையும் தமிழ்த் தேசியத்தையும் சிதைப்பதற்காகவே மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் கிழக்கில் தேர்தல் நடத்தப்பட உள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு தெரிவித்துள்ளார்.

வீரகேசரி நாளிதழுக்கு நேற்று வியாழக்கிழமை அவர் அளித்த நேர்காணலில் இது தொடர்பில் கூறியிருப்பதாவது:

உள்ளுராட்சி சபை, மாகாண சபைத் தேர்தல்களை அரசு திட்டமிட்டு விரைவாக நடத்துவதற்கு முற்படுவதன் காரணம் கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியத்தின் பிரதிநிதித்துவத்தினை குறைப்பதற்கான ஒரு திரை மறைவு முயற்சியே.

நியமனப்பத்திர தாக்கல் செய்ய அச்சுறுத்தல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட நியமனப் பத்திரங்களை பாராளுமன்ற திருத்த சட்டமொன்றைக் கொண்டு வந்து அவற்றை இரத்துச் செய்து தமிழ்த் தேசிய உணர்வாளர்களை போட்டியிடாதவாறு தடுத்து வட,கிழக்கு இணைப்பை முற்றாக தகர்த்தெறிவதற்கு அரசு கங்கணம் கட்டி நிற்கின்றது. எதிர்வரும் காலங்களில் புதிய நியமனப் பத்திரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் நேரடியாகச் சென்று சமர்ப்பிக்க முடியாதவாறான சூழலை துணை இராணுவக் குழுக்கள் மூலமும் ஏனைய ஆயுதக்குழுக்கள் ஊடாகவும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வைத்துள்ளது.

ஆயுதக் குழுக்களிடையே மோதல்

மேலும் தேர்தல் நெருங்கும் காலங்களில் தமிழ் ஆயுதக் குழுக்களுக்கிடையிலான மோதல்களை வலுவடையச் செய்து தமிழர்களை பல கூறுகளாக்கி தமிழ்ப் பிரதிநிதித்துவத்தினை முற்றாக குறைத்து விடவும் திட்டமிடப்படுவதாக நான் அறிகின்றேன்.

நாங்கள் பிரதேசவாதம் பேசிப்பேசியே தமிழ்த்தேசியத்தினை கூறுபோட்டு விட் டோம்.

இதன் விளைவுகளை கிழக்கில் நடக்கவிருக்கும் தேர்தல் முடிவுகள் உணர்த்தும், இதில் அப்பாவித் தமிழ் மக்கள்தான் பாவம். அவர்களுக்கு இறுதியில் என்ன நடக்கப்போகின்றது என்பதை இனிவரும் ஒவ்வொரு நாட்களும் உணர்த்தும்.

யாழில் நடந்ததுதான் இங்கும்...

கிழக்கில் அரசுக்கு பிடிக்காதவர்கள் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்த தேர்தல் களத்தினை சந்தித்தால் அவர்களது உயிர்களுக்கு உத்தரவாதம் அற்ற ஓர் நிலை ஏற்படும். அத்துடன் அவர்களது உடல்கள் தெருவோரத்திலோ அல்லது பற்றைக் காடுகளுக்குள்ளோ காணப்படும் நிலை கூடத் தோன்றலாம். ஏனெனில் அரசினால் விடுவிக்கப் பட்ட யாழ். குடாநாட்டில் இன்று என்ன நடக்கின்றது என்பதை ஒவ்வொரு நபரும் புரிந்து கொள்வார்கள். கிழக்கு விடுவிக்கப்பட்டதாக கூறப்படுவதன் விளைவுகளை யாழ். குடாநாட்டில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களையும் வைத்து இலகுவாக புரிந்து கொள்ள முடியும். இதனை நான் வெட்ட வெளிச்சமாக கூறவேண்டியதில்லை.

அரசின் இத்தேர்தல் அறிவிப்பானது கிழக்கு மக்களின் மனங்களை புண்படுத்தும் ஓர் செய்தியாகவே கருதுகின்றேன்.

ஏனெனில் கிழக்கில் ஜனநாயகத் தேர்தலுக்கு எந்த வாய்ப்பும் இருப்பதாக நான் கருதவில்லை. கிழக்கில் இத்தேர்தல் மூலம் ஜனநாயக பன்முக அதிகாரக் கூட்டமைப்பு ஏற்படுமா? எம் மக்கள் இத்தேர்தல் ஊடாக சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியுமா? நிச்சயமாக இல்லை. ஏனென்றால் இத்தேர்தல் கிழக்கில் தமிழ் பிரதிநிதித்துவத்தினைக் குறைத்து முழுமையாக சிங்களப் பேரினவாதமாக்குவதற்கான திட்டம் என்பதே என்னுடைய கருத்து.

போர்நிறுத்த உடன்படிக்கையானது நூறு வீதம் கடைப்பிடிக்கப்பட்டு தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாதவாறு போர்ச்சூழல் முற்றாக விலக்கப்பட்டு இயல்புத் தன்மை உருவாக்கப்பட்டதன் பின்பே தமிழ் மக்கள் தேர்தல் பற்றி சிந்திப்பார்கள். அதுவரைக்கும் பிச்சை வேண்டாம் நாயைப் பிடி. இதுவே ஒவ்வொரு தமிழ் மகனதும் எண்ணப்பாடு, இதுவே யதார்த்தமும் ஆகும் என்றார் அவர்.

நன்றி - புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.