Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அதிகரிக்கும் அக்கறை; படிப்படியாக தோன்றிவரும் சர்வதேச தலையீட்டுக்கான சூழல்

Featured Replies

கடந்த திங்கட்கிழமை (06.08.2007) அன்று அமெரிக்காவின் நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) இலங்கையின் மனித உரிமைகள் பற்றிய ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது. "போருக்கு மீளலும் மனித உரிமை மீறல்களும்" என்னும் தலைப்பில் 129 பக்கங்களில் அவ் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து 2007 ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை காலநேர புள்ளி விபரங்களுடன் எடுத்துக்காட்டியுள்ளது.

அந்த அறிக்கையில் அரசாங்கம், துணைப் படைகள், விடுதலைப்புலிகள் இயக்கம், கருணா குழு என்பன இழைத்து வந்த மனித உரிமை மீறல்களைக் குற்றச்சாட்டுக்களாகவும் கண்டனங்களாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இருப்பினும், அவ்வறிக்கையானது அரசாங்கத்தின் மீதே தனது குற்றம்சாட்டும் சுட்டு விரலை நீட்டியுள்ளது. இதனால், அரசாங்கம் கடும் விசனம் அடைந்திருப்பதுடன் மேற்படி மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு அறிக்கையை நிராகரித்தும் உள்ளது. அத்துடன், பேரினவாதக் கட்சிகளையும் அமைப்புகளையும் அவ்வறிக்கையானது ஆத்திரமடையச் செய்தும் உள்ளது.

அவ்வறிக்கையானது கடந்த ஒன்றரை வருடங்களில் வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற மனிதப் படுகொலைகள், ஆட்கடத்தல்கள், காணாமல்போதல்கள், இடப்பெயர்வுகள் ஆகியவற்றை விபரங்களுடன் எடுத்துக் கூறுகின்றது. அவற்றின் பெரும்பகுதிக்கு மகிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என்றே அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. "சிவிலியன்களின் பாதுகாப்புக் குறித்து சொற்ப கரிசனை மட்டும் காட்டிக் கொண்டு நாட்டின் வடக்கிலும் கிழக்கிலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவும் அவரது சகோதரரான கோதாபய ராஜபக்ஷவும் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்." இவ்வாறு அவ்வறிக்கை குறிப்பிடுகின்றது.

அத்துடன், 2005 டிசம்பரில் இருந்து 2007 ஏப்ரல் வரையில் யாழ். குடாநாட்டில் 800 இற்கும் மேற்பட்டோர் காணாமல் போய் உள்ளனர் என்றும் 2005 இலிருந்து இதுவரை 11 ஊடகப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் அறிக்கை கூறுகிறது. மேலும், கடந்த ஒன்றரை வருடங்களில் 2006 ஜனவரிக்கும் 2007 ஜூனுக்கும் இடையில் 4 ஆயிரத்து நூறு புதிய முறைப்பாடுகள் காணாமல் போனோர் பற்றிக் கிடைத்திருப்பதாக அவ்வறிக்கை கூறுகிறது. இக்காலப்பகுதியில் இடம்பெற்ற வடக்கு கிழக்கு இராணுவ நடவடிக்கை காரணமாக மூன்று இலட்சத்து பதினையாயிரம் பேர் இடப்பெயர்வுகளுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் பெரும்பகுதியினர் தமிழர்களும் முஸ்லிம்களுமாவர்.

இவ்வாறு இலங்கையில் குறிப்பாக, வடக்கு - கிழக்கில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களைப் பட்டியலிட்டும் கண்டனங்களைத் தெரிவித்துமுள்ள மனித உரிமை கண்காணிப்பு மையத்தின் அறிக்கையானது, அரசாங்கத்தினதும் தமிழீழ விடுதலைப்புலிகளினதும் நடவடிக்கைகள், போக்குகளில் மாற்றம் தேவை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், இதனை வலியுறுத்தி ஐ.நா. சபையில் கடுமையான பிரேரணை ஒன்றைக் கொண்டு வர முயற்சி செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளது. அதன் வழியில் ஐ.நா.வின் உத்தியோகபூர்வ மனித உரிமைகள் கண்காணிப்பு ஆணையம் ஒன்றை இலங்கையில் நிறுவவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அறிக்கை சிபாரிசு செய்திருக்கிறது.

மேற்படி, அறிக்கை வெளிவந்த கையோடு ஐ.நா. வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோல்ம்ஸ் இலங்கைக்கு வந்துள்ளார். அவர் யாழ் குடாநாட்டிற்கும் கிழக்கிற்கும் சென்றுள்ளதுடன் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களையும் சந்தித்துப் பேசியுள்ளார். அவரது அவதானிப்புகளும் கருத்துரைகளும் மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் வெளியிட்ட அறிக்கையில் காணப்பட்ட விடயங்களையொட்டியே காணப்பட்டன. "மனிதாபிமானப் பணிகளுக்கும் பணியாளர்களுக்கும் உலகில் உள்ள மிகவும் ஆபத்தான இடங்களில் இலங்கை ஒன்றாக விளங்குகின்றது" என்று கூறியதுடன் "யுத்தம் தொடர்பான துஷ்பிரயோக நடவடிக்கைகள் பற்றி விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்புக் குழு நிறுவப்பட வேண்டும்" எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாரத்தில் இடம்பெற்றுள்ள இவ்விரண்டு நிகழ்வுகளும் அரசாங்கத்திற்கும் பேரினவாத சக்திகளுக்கும் கடும் விசனத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளன. அதேவேளை, அரசாங்கத்திற்கு எதிராக உள்ள சக்திகளிடையே உள்ளார்ந்த மகிழ்ச்சியையும் தோற்றுவித்துள்ளன. மனித உரிமை மீறல், மனிதாபிமான நெருக்கடி என்பன மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தன மட்டுமன்றி, மிகவும் உணர்ச்சிபூர்வமானவைகளுமாகும

  • தொடங்கியவர்

மனித நேயப் பணிகளை முன்னெடுக்க முடியாத நாடாக மாறியுள்ளது - மீண்டும் ஜ.நா

ஞாயிறு 12-08-2007 16:14 மணி தமிழீழம்

மனித நேய பணியாளர்கள் தமது கடமைகளை முன்னெடுப்பதற்கு பாதுகாப்பற்ற நாடாக இலங்கை மாறியுள்ளமையை ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் தெளிவு படுத்தியுள்ளது.

கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்த ஐநா சபையின் மனிதாபிமான பணிகளுக்கான பணிப்பாளர் ஜோன் ஹோல்ஸ் உலகில் மனிதாபிமான பணியாளர்களுக்கு அதிக அச்சுறுத்தல் இலங்கையிலேயே ஏற்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.

ஹோல்சின் இந்த கருத்து குறித்து ஸ்ரீலங்கா அரசாங்கம் கடுமையான ஆட்சேபம் தெரிவித்திருந்ததோடு ஜோன் ஹோல்சை பிரதமர் ரட்னஸ்ரீ விக்கிரமநாயக்கா பகிரங்கமாகவே விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் ஜோன் ஹோல்ஸ் இலங்கையில் மனதாபிமான பணியாளர்கள் அச்சுறுத்தல்களின் மத்தியிலேயே பணியாற்ற வேண்டியுள்ளதாக தெரிவித்த கருத்தை தவறு என்று நிரூபிப்பதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் போதிய ஆதாரங்கள் இல்லை எனற்கு கொழும்பில் உள்ள ஐநாவின் வதிவிட பிரதிநிதி வலன்ரின் தெரிவித்துள்ளார்.

தமது பணிப்பாளர் தெரிவித்த கருத்து உண்மையற்றது என்றால் அதனை நிரூபிப்பதற்கும் மனித நேய பணியாளர்கள் அச்சுறுத்தல்கள் இன்றி பணி புரிகின்றார்கள் என்தை அனைத்துலகிற்கும் ஸ்ரீலங்கா அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

-பதிவு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.