Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பூர்வீகத் தேசிய இனத்துக்கான உரிமைகள் தமிழருக்கு உண்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-08-12

பூர்வீகத் தேசிய இனத்துக்கான உரிமைகள் தமிழருக்கு உண்டு

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்கக்கோரி, பிரிட்டனின் நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளினதும் பிரதிநிதி களுக்கும் அமெரிக்காவின் கலிபோர்ணிய மாநிலத்தைச் சேர்ந்த மனித உரிமைகள் சட்டத்தரணியான கரன் பாக்கர் மனு ஒன்றை - அனுப்பிவைத்திருக்கின்றார். அந்த மனுவில் அவர் சுட்டிக்காட்டியுள்ள காத்திர மான விடயங்கள் கவனிக்கத்தக்கவை.

அமெரிக்காவும், இலங்கை அரசும் தூண்டியதன் விளைவாகவோ புலிகள் மீது தடை விதிக்கும் செயற் பாட்டை பிரிட்டனும், ஐரோப்பிய ஒன்றியமும் மேற்கொண்டன என்று சுட்டிக்காட்டும் அவர், இந்த நடவடிக்கை சமாதானப் பேச்சுகள் தடைப்பட்டமைக்கும் தமிழ் மக்களுக்கு எதிரான இன ஒழிப்பு நடவடிக்கை தற்போது தீவிரமடைவதற்கும் காரணம் என்றும் குற்றம் சுமத்துகின்றார்.

இவ்வாறு புலிகளுக்கு எதிராகத் தடை விதிக்க முயல்வது சமாதான முயற்சிகளுக்குக் குந்தகத்தை ஏற்படுத்தும் என்பதை ஆரம்பத்திலேயே சுட்டிக்காட்டி வந்தோம். அப்படியேயாகி உள்ளது என்பதையும் வெளிப்படுத்தி வந்துள்ளோம்.

இலங்கை அரசுடன் சமதரப்பு என்ற அந்தஸ்துடன் - பேச்சுக்களில் பங்குபற்ற விடுதலைப்புலிகள் முன் வந்தனர். ஆனால் புலிகள் மீது சில முக்கிய சர்வதேச நாடுகள் விதித்த தடையானது புலிகளின் சமதரப்பு அந்தஸ்தைச் சீர்குலைய, சமாதான முயற்சிகளும் சீர் குலைந்தன.

எனவே இவ்விடயத்தின் கள யதார்த்த விளைவுகளைச் சீர்தூக்கிப் பார்த்து அதன் அடிப்படையில் - புலிகள் மீதான தடையை முக்கிய சர்வதேச நாடுகள் விலக்கிக் கொள்வது, மீண்டும் சமாதான முற்சிகளுக்கு உயிரூட்ட - உதவும் என்கிறார் கரன் பாக்கர்.

அதேசமயம், கொசோவோ மக்களுக்கு விடுதலை வேண்டும் என வற்புறுத்தும் பிரிட்டன், அந்த மக்களை - விட சுயநிர்ணய உரிமை அதிகம் உள்ள ஈழத் தமிழர் குறித்து கண்மூடித்தனமாக இருக்கின்றமை குறித்தும் அவர் விசனம் தெரிவித்திருக்கின்றார்.

இலங்கைத் தீவில் ஈழத்தமிழ் மக்கள் ஆகக் குறைந் தது சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்று வேரோடல்களைக் கொண்டவர்கள். தனியான வாழிடப் பிரதேசத்தைக் கொண்ட தாயகம், தனியான இனம், தனியான பண்பாடு, தனியான வாழ்க்கை முறை என்று தனித்துவத்தோடு வாழ்ந்து வருபவர்கள்.

அதுமாத்திரம் அல்ல, பிரிட்டனின் - ஆட்சி அதிகாரம் இலங்கைத் தீவிலிருந்து விலக்கப்பட்டு, அது பெரும்பான்மையினரான பௌத்த - சிங்களத் தலை மைகளிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் ஈழத் தமிழ் மக்கள் அனுபவித்தமை போன்ற இன ஒடுக்குமுறையையோ, அட்டூழியங்களையோ, படுகொலைகளையோ, வாழ்வியல் உரிமை மறுப்புகளையோ கொசோவோ மக்கள் எதிர்கொள்ளவே இல்லை என்றும் சட்டத்தரணி கரன் பாக்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விடுதலைக்கான போராட்டத்தில் ஈழத்தமிழர்கள் அளவுக்கு சுதந்திர உரிமையோ, அதைப் பெறுவதற் கான பாதையில் தமிழர்கள் அளவுக்கு இழப்புக் களையோ கொண்டிராத கொசோவோவுக்காகக் குரல் எழுப்பும் பிரிட்டன் ஈழத்தமிழர் விடயத்தில் தலை கீழாகச் செயற்படுவது ஏன் என்றும் கரன் பாக்கர் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.

இன்னொரு விடயத்தையும் அவர் தெளிவுபடுத்தி இருக்கின்றார். இலங்கையில் நடைபெறுகின்ற உள் நாட்டு யுத்தம் இலங்கை அரசைக் கைப்பற்ற நடக்கின்ற போர் அல்ல. முழு நாட்டின் அதிகாரத்தையும் கைப்பற்றும் நோக்கில் நிக்கரகுவாவிலும் எல்சல்வ டோரிலும் நடைபெற்றதைப் போன்றதல்ல இந்த யுத் தம். சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து தமிழ் மக் களை விடுவிப்பதற்கான போராட்டமே இலங்கைத் தீவில் நடைபெறுகின்றது. பங்களாதேஷ் தனி நாடாக மாறுவதற்கு பாகிஸ்தானிலிருந்து கிழக்குப் பாகிஸ் தானை விடுவிப்பதற்காக நடந்தது போன்ற யுத்தம் இது. அதேபோல பல்வேறு சுதந்திர அரசுகள் உருவாக யூகோஸ்லேவியாவில் இடம்பெற்றது போன்ற யுத்தம் இது என்கிறார் அவர்.

ஈழத்தமிழ் சாகியம் இலங்கையில் வெறும் தேசிய இனம் மட்டுமல்ல வரலாற்றுக் காலம் வரை வேரோடிச் செல்லும் தொன்மையான பண்பியல்புகளையும் தாயக உரிமையையும் கொண்ட பூர்வீகத் தேசிய இன மாகும். அதன் மறுக்கமுடியாத வரலாற்று உரிமைக் கான போராட்டத்தை வெறும் 'பயங்கரவாதமாக' சித் திரித்து அதற்குள் அடக்கிவிடமுடியாது என்பதை பிரிட்டன் உட்பட மேற்கு நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும்.

uthayan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.