Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சர்வதேச சமூகத்திடம் தாய்நாட்டை காட்டிக்கொடுக்க சிலசக்திகள் முயற்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச சமூகத்திடம் தாய்நாட்டை காட்டிக்கொடுக்க சிலசக்திகள் முயற்சி

வீரகேசரி நாளேடு

சர்வதேச சமூகத்திடம் தாய்நாட்டைக் காட்டிக்கொடுக்க சில சக்திகள் முயற்சி செய்கின்றன. சிலர் அதற்கான முன்னெடுப்புகளை எடுத்துள்ளனர். ஆனாலும், தாய்நாட்டை பாதுகாக்கும் போராட்டத்தை தொடர்ந்தும் நாம் முன்னெடுப்போம். அத்துடன், ஏனைய அபிவிருத்திப் பணிகளையும் சளைக்காது தொடருவோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 1989 ஆம் ஆண்டில் இருந்ததைப் போன்றதொரு அபாயகரமான, மிக மோசமான சூழல் வடக்கிலும் கிழக்கிலும் இன்றில்லை. இந்த வருடம் சுகாதார சேவைக்காக 63 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்ததொரு பிரதேசத்தில் வாழும் மக்கள் கூட்டத்துக்காக ஒதுக்கப்படவில்லை.

முழு நாட்டு மக்களுக்கும் சம அளவிலான சுகாதர சேவையைப் பெற்றுக்கொடுக்கவே இத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் வைத்தியப் பிரிவில் புதிய சிகிச்சை நிலையத்தை திறந்துவைத்துப் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நேற்றுக்காலை நடைபெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் பேசுகையில் கூறியதாவது:

சுகாதார சேவையை ஒவ்வொரு பொதுமகனும் சுதந்திரமாக பெற்றுக்கொள்ள வழிவகைகள் செய்யப்பட வேண்டும். இது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இதனாலேயே, கூடுதலான நிதி இத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரம் இலட்சம் ரூபா செலவில் இந்த புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இது தென் பகுதி மக்களின் நண்மைகருதி உருவாக்கப்பட்டதாகும். பௌதிக வள அபிவிருத்தியோடு மனித வளத்தையும் அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் பாரிய திட்டங்களை முன்னெடுத்துவருகிறது. வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார சேவையாளர்களை உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவை உட்பட இலவசக் கல்வியையும் நாம் பாதுகாப்போம். அவற்றை கொள்ளையிட நாம் இடமளிக்க மாட்டோம். வைத்திய துறை புனிதமான தொழில். அதனை பொறுப்புடனும் தியாகத்துடனும் மேற்கொள்ள வைத்தியர்கள் அனைவரும் முன்வர வேண்டும். அமைச்சர் நிமல்இந்நிகழ்வில் கலந்துகொண்ட சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறுகையில், தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மக்கள் அபிமானத்துடன் மக்களுக்குத் தேவையானதை அறிந்து சேவை செய்துவருகிறார். இதனடிப்படையில் சுதந்திர சுகாதார சேவையை கட்டியெழுப்பவும் அவர் பாடுபடுகிறார்.

பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கும் அதேவேளை, நாட்டில் அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.இந்நிகழ்வில் தென் மாகாண ஆளுநர் குமாரி பாலசூரிய, தென் மாகாணசபை முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா, அமைச்சர்களான குணரத்ன வீரக்கோன், மஹிந்த யாப்பா அபேவர்தன, ஹேமகுமார நாணயக்கார உட்பட பலர் கலந்துகொண்டனர்.

சர்வதேச சமூகத்திடம் தாய்நாட்டை காட்டிக்கொடுக்க சிலசக்திகள் முயற்சி

செய்தித் தலைப்பிலையே "சர்வதேச சமூகத்திடம் தாய்நாட்டை காட்டிக்கொடுக்க சிலசக்திகள் முயற்சி-ராஜபக்ச புலம்பல்" எண்டதையும் இணைத்துவிடுங்கோ .

எம் தமிழ் உறவுகள் அனைவருக்கும் "தாய்நாட்டை" என்றவுடன் "தமிழீழத்தை" என்ற நினைவே பார்த்தவுடன் ஏற்படும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.