Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொருளாதார நெருக்கடிகளை தற்காலிகமாகச் சமாளிக்கும் உத்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-08-14

பொருளாதார நெருக்கடிகளை தற்காலிகமாகச் சமாளிக்கும் உத்தி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தைத் தொடர்ந்து தக்கவைத்திருக்குமா என்பது குறித்த சந்தேகம் பரவலாக எழ ஆரம்பித்துள்ள பின்புலத்தில், ஜே. வி. பி. முக்கிய கருத்து ஒன்றை நாடாளுமன்றத்தில் உரைத்திருக்கின்றது.

"அரசுக்கு ஆபத்து ஏற்படும் போதெல்லாம் ஜே. வி. பி. வந்து அரசைக் காப்பாற்றும் என்று அரசு இனி கனவிலும் எதிர்பார்க்கக் கூடாது. அந்தக் காலம் இப்போது மலையேறிவிட்டது. மக்களைப்பற்றி சிறிதளவேனும் கவலைப்படாமல் வன்முறையில் ஈடுபட்டிருக்கும் இந்த அரசிற்கு நாம் எப்போதும் ஆதரவு தரமாட்டோம்.'' - என்று ஜே. வி. பியின் மூத்த உறுப்பினர் விஜித ஹேரத் சபையில் அறிவித்திருக்கின்றார்.

அவசரகாலச் சட்டத்தை இந்த அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என்பதில் தொடங்கி, அரசு வன்முறையில் இறங்கியுள்ளது, ஆட்கடத்தல்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பிலிருந்து விலகிவிட்டது என்பதுவரை பல்வேறு குற்றச்சாட்டுகளை அரசுக்கு எதிராக முன்வைக்கவும் - வரிசையாக அடுக்கவும் - அவர் தவறவில்லை.

ஒருபுறம் தான் தீவிரமாக முன்னெடுக்கும் யுத்தத்தினால் எழுந்துள்ள கடும் பொருளாதார நெருக்கடி, மறுபுறத்தில் நாடாளுமன்றத்தில் தனது அரசு எதிர்கொள்ளும் ஸ்திரமின்மை - இவை இரண்டுக்கும் நடுவில் தமது அரசியல், இராணுவத் தந்திரோபாயக் காய் நகர்த்தல்களைச் செய்யவேண்டியவராகக் கஷ்டப்படுகின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் அமைச்சுக்களை உருவாக்கி, அமைச்சர்களை நியமித்த அரசுத் தலைமை, அதுபோல பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் வரிசைக் கிரமமாக அறிவித்துவிட்டு, அவற்றைச் செயற்படுத்த நிதியின்றித் தள்ளாடிப் பரிதவிக்கின்றது.

அரசின் நாடாளுமன்றப் பெரும்பான்மை, அரசியல் ஸ்திரமின்மை காரணமாகத் தள்ளாடுவதால், எந்தச் சமயத்திலும் நாடாளுமன்றைக் கலைத்து பொதுத்தேர்தல் ஒன்றை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குத் தாம் ஆளாகலாம் என்ற யதார்த்தமும் அரசுத் தலைவருக்கு நன்கு தெரியும்.

அப்படித் தேர்தலை எதிர்கொள்வதாயின் நாட்டில் பொருளாதார மேம்பாடு இருப்பது போன்ற ஒரு மாயையையாவது - தோற்றத்தையாவது - ஏற்படுத்த வேண்டும். இல்லையேல் - தற்போதைய விலைவாசி உயர்வு போன்ற மோசமான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தேர்தலை எதிர்கொள்ள வேண்டி நேர்ந்தால் - அது தமது தரப்புக்குப் பேரிடியாக - பேரடியாக - வந்து வீழ்ந்துவிடும் என்பதும் ஜனாதிபதி மஹிந்தருக்குத் தெரியும்.

யுத்தத்துக்குப் பெருமளவு நிதியை வழங்கவேண்டியிருப்பதால் நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கின்றது. அடுத்த வரவு - செலவுத்திட்டத்துக்கு இன்னும் பத்து வாரங்கள் கூட இல்லை. அதற்கு முன்னர் ஒவ்வொரு அமைச்சுகளுக்குமான உத்தேச ஒதுக்கீடுகளை அறிவிக்க வேண்டும். அதையெல்லாம் செய்ய முடியாத இக்கட்டுக்குள் அரசைத் தள்ளியிருக்கிறது பொருளாதார - நிதி - நெருக்கடி.

கடந்த வரவு - செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில் ஐம்பது சதவீதமானவை இன்னமும் பல அமைச்சுகளுக்கும் திணைக்களங்களுக்கும் கிடைக்கவேயில்லை என்ற மோச நிலைமை காணப்படும்போது அடுத்த வரவு - செலவுத்திட்டத்துக்கு புதிதாக ஒதுக்கீடுகளைச் செய்வது எங்ஙனம்?

இந்த நெருக்கடியிலிருந்து மீளுவதற்காக - குறுகிய கால அரசியல் லாபத்துடன் கூடிய - தூர நோக்கற்ற - திட்டம் ஒன்றில் அரசுத் தலைமை இறங்கியிருக்கின்றது என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியிருக்கின்றன.

நான்கு, ஐந்து ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தப்படும் என்ற உறுதியுடன் சுமார் ஐம்பது கோடி அமெரிக்க டொலர் (சுமார் ஐயாயிரத்து 600 கோடி ரூபா) பெறுமதியான சர்வதேச பண முறிகளை (international bond) அபிவிருத்தித் திட்டங்களுக்கான அறவீடு என்ற பெயரில் வெளிநாடுகளில்தனியார் தரப்புகளிடம் இருந்து - உயர்ந்த வட்டிக் கட்டணத்துடன் - பெற்றுக்கொள்ள அரசு முடிவு செய்திருக்கின்றது.

அபிவிருத்தி மற்றும் கட்டுமானத் திட்டங்களுக்கு அல்லாமல், அன்றாடச் செலவின நெருக்கடியைச் சமாளிப்பதற்காக -வழமையான முறைகளுக்கு மாறாக - தனியார் தரப்புகளிடமிருந்தும், பெரும் வர்த்தக வங்கிகளிடமிருந்தும் இத்தகைய குறுகிய கால மீள் செலுத்துகைக்கான உறுதி மொழியுடன், அரசு கடன் பெற்றுக்கொள்வது மிக மோசமான பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்துவதோடு தூர சிந்தனையற்ற நடவடிக்கையாகவும் அமையும் என்று எதிர்க்கட்சிகள் சீறுகின்றன.

தன்னுடைய மோசமான அரசியல், இராணுவ, பொருளாதார செயற்பாடுகளால் நாட்டைக் குட்டிச்சுவராக்கியுள்ள இந்த அரசுத்தலைமை, குறுகிய காலக் கடன்களை முறையற்ற விதத்தில் அறவிட்டு, தனது இப்போதைய நெருக்கடிகளைத் தற்காலிகமாகச் சமாளித்து விட்டு, பொதுத்தேர்தல் ஒன்றின் பின்னர் வரக்கூடிய அடுத்த அரசின் மீதும், மக்களின் மீதும் பெருஞ்சுமையை சுமத்தி, தான் நழுவிக் கொள்ளப்பார்க்கின்றது என்றும் எதிரணிகள் குற்றம் சுமத்துகின்றன.

தன்னுடைய அரசின் திறமை பற்றிய உண்மையான 'பொட்டுக்கேடு' இவ்வளவு சீக்கிரத்தில் - இரண்டு வருடத்துக்குள் - அம்பலமாவதைத் தவிர்த்து, இன்றைய நெருக்கடியை இன்னும் சில வருடங்களுக்குப் பின்னால் தள்ளிப்போடும் எத்தனமாகவே இந்த முயற்சியை ஜனாதிபதி மஹிந்தரின் நிர்வாகம் மேற்கொள்கின்றது என்றும் அவதானிகள் கூறுகின்றனர்.

இவ்வாறு இந்த அரசு முறையற்ற விதத்தில் அறவிடும் கடன்களை அடுத்த பத்தாண்டுக்குள் (அதாவது தற்போது முதல் 2017 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள்) ஆட்சிக்கு வரக்கூடிய ஐ.தே.கட்சி அரசுகள் எவையும் மீளச் செலுத்தா என்று ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இவ்வாறு கடன் கொடுக்கக்கூடிய தனியார் தரப்புகளுக்கு எழுத்துமூலம் அறிவிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.

அந்த அறிவிப்பு செல்லுபடியாகுமா, இனி வரக்கூடிய புதிய அரசு எதுவும், முன்னைய அரசின் சர்வதேச நிதிக் கடப்பாடுகளை நிறைவேற்றாமல் அந்தப் பொறுப்பிலிருந்து தன்னை விலக்கி - விடுவித்து - கொள்ளும் சட்ட, நியாய வாய்ப்பு உள்ளதா என்பவையெல்லாம் கேள்விக்குரியவையே.

எனினும் போர்த்தீவிர முனைப்பால் பொருளாதாரத்தைக் கோட்டை விட்டுள்ள இந்த அரசு, அதன் விபரீதங்களை எதிர்கொள்ளத் தொடங்கிவிட்டது என்பது மட்டும் உறுதி.

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.