Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் சீனாவின் செல்வாக்கை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இந்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் சீனாவின் செல்வாக்கை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இந்தியா

By RAJEEBAN

18 NOV, 2022 | 11:41 AM
image

இந்தியா தனது தென்பகுதி அயல்நாட்டில் தனது மூலோபாய நோக்கிலான  பிரசன்னத்தை வலுப்படுத்துவதற்கான-சீனாவின் அதிகரித்து வரும் செல்வாக்கை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இலங்கைக்கான பொறியியல் பொருட்கள் சேவைகளை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது.

 புகையிரத இயந்திரங்கள் வண்டிகள் அல்லது புகையிர பாதையில் பயன்படுத்தப்படும் ஏனைய வாகனங்களை ஏற்றுமதி செய்வதில் இந்திய ரெயில்வேயின்  முக்கிய பிரிவாக காணப்படும் ஆலோசனை மற்றும் பொறியியல் நிறுவனமான ஆர்ஐடிஈஎஸ் நிறுவனம் இலங்கையின் முக்கிய உட்கட்டமைப்பு திட்டங்களில் தனது பிரசன்னத்தை அதிகரிக்கின்றது.

ஏற்கனவே இந்த நிறுவனம் புகையிரத சேவை தொடர்பான இயந்திரங்கள் போன்றவற்றை விநியோகித்துள்ளதுடன் ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

download__44_.jpg

இந்தியாவின் புகையிரததுறை அமைச்சை சேர்ந்த குழுவொன்று கடந்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டது எனஆர்ஐடிஈஎஸ் நிறுவனத்தின் தலைவர் ராகுல் மித்தல் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து தனது நிறுவனத்தை சேர்ந்த குழுவொன்று கடந்த வாரம் இலங்கை சென்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

துறைமுகம் பெருந்தெருக்கள் விமானநிலையங்கள் புகையிரத பாதைகள் உட்பட பல உட்கட்டமைப்பு திட்டங்கள் குறித்து ஆராய்ந்தோம் என தெரிவித்துள்ள அவர் கிடைத்துள்ள சாதகமான சமிக்ஞைகளை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது இவற்றில் சில இந்தியாவிற்கு - எங்களிற்கு கிடைக்கும் என கருதுகின்றோம் எனவும்  தெரிவித்துள்ளார்.

இலங்கை இந்திய முதலீடுகள் குறித்து மிகுந்த ஆர்வத்துடன் உள்ளது இதன் காரணமாக முக்கிய உட்கட்டமைப்பு துறைகளில் இந்தியா பங்களிப்பு செய்வதற்கும்  ரைட்ஸ் இதில் தன்னைஈடுபடுத்;திக்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என அவர் தெரிவித்துள்ளார்

ரைட்ஸ்விதேஸ் என்ற நிறுவனத்தின் மூலம் இலங்கையில் எங்களின் பிரசன்னத்தை அதிகரிக்க ஆர்வமாகவுள்ளோம் புகையிரத இயந்திரங்கள் ஏற்றுமதி மற்றும் ஆலோசனைகள் மூலம் எங்கள் பிரசன்னத்தை அதிகரிக்கவுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை  எங்களிற்கு செலுத்தவேண்டிய  கட்டணங்கள் எதுவுமில்லை அவர்கள்  செலுத்தவேண்டிய தொகையில் பெருமளவை ஏற்கனவே செலுத்திவிட்டனர் பொருளாதாரநெருக்கடி அரசியல் நெருக்கடியில் அந்த நாடு சிக்கியதால் இந்த கட்டணங்களை செலுத்துவது தாமதமாகியது எனவும் மித்தல் தெரிவித்துள்ளார்.

நிலைமையில் பெருமளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது வர்த்தக நடவடிக்கைகள் இலங்கையில் மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2017 முதல் ரைட்ஸ் நிறுவனத்திற்கு இலங்கையிலிருந்து மிகப்பெருமளவு வர்த்தக வாய்ப்புகள் கிடைத்துள்ளன,ஆனால் இவற்றில் அதிகமானவை புகையிரததுறை சார்ந்தவை.

தற்போது இந்த நிறுவனம் ஆலோசனை பெருந்தெருக்கள் விமானநிலையம் துறைமுகம் போன்றவற்றில் தன்னை இலங்கையில் விஸ்தரிக்கின்றது.

இந்தியாவின் ஆட்சேபனைக்கு மத்தியிலும்  சீனாவின் வேவுகப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்து நின்றதை தொடர்ந்து இந்தியா இலங்கையில் தனது அபிவிருத்தி நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்தியா தனது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ரைட்ஸ் நிறுவனமே ஆரம்ப கட்ட சாதனமாக விளங்கப்போகின்றது அதன் திட்டங்கள் பாரிய பிரசன்னத்திற்கு வழிவகுக்கலாம்.

https://www.virakesari.lk/article/140433

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.