Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையின் பொருளாதார நெருக்கடி வேகமாக சுகாதார நெருக்கடியாக மாறுகின்றது - உலக சுகாதார ஸ்தாபனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் பொருளாதார நெருக்கடி வேகமாக சுகாதார நெருக்கடியாக மாறுகின்றது - உலக சுகாதார ஸ்தாபனம்

By RAJEEBAN

25 JAN, 2023 | 12:29 PM
image

இலங்கை முன்னொருபோதும் இல்லாத சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது மிகவும் அவசியமான மருந்துகள் குறைந்தளவிலேயே உள்ளன என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி சுகாதார துறையை மோசமாக பாதிப்பதால் பல இலங்கையர்கள் மருத்;துவசேவையை பெறும் வாய்ப்பை இழக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கையின் அபிவிருத்தி சகாக்கள் நிதிஉதவி செய்பவர்களுடன் இணைந்து இலங்கையின்  மருந்து மற்றும் மருத்துவ பொருள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதில் விரைவான ஒத்திசைவான பதில்களை உறுதி செய்ய முயல்வதாக குறிப்பிட்டுள்ளது.

மருந்துகள் மற்றும் மருந்துப்பொருட்களின் அதிகரித்துவரும் தட்டுப்பாடு காரணமாக இலங்கையின் பொருளாதார நெருக்கடி துரிதமாக சுகாதார நெருக்கடியாக மாறிவருகின்றது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

மருந்துகள் மற்றும் சத்திரகிசிச்சை உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கான வருடாந்த வரவு செலவுதிட்ட மதிப்பீடு 300 மில்லியன் டொலர்கள் என தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் 2023 இல் இதுவரை இலங்கைக்கு உதவி வழங்கும் சமூகத்தின் மூலம் 80 மில்லியன்  டொலர்களே கிடைத்துள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளது.

அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு இலங்கைக்கு இன்னமும் 220 மில்லியன் அமெரிக்க டொலர் தேவையாகவுள்ளது இலங்கையின் சகாக்களுடன் இந்த இடைவெளியை அவசரமாக நிரப்பவேண்டிய தேவையுள்ளது எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

பொருளதார நெருக்கடிகள் சுகாதார துறைக்கு பல சவால்களை அளித்த என தெரிவித்துள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன மருந்துகள் மற்றும் மருந்துப்பொருட்களின் விநியோகத்தை வலுப்படுத்துவதற்கும்சமூகம் நெருக்கடியான நிலையை எதிர்கொள்வதற்கு உதவுவதற்கும் நாங்கள் சகாக்களின் உதவியை பெறவேண்டியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் சுகாதார நெருக்கடிக்கு பதிலளிக்கும் விதத்தில் உலக சுகாதார ஸ்தாபனம் அனைவருக்கும் முக்கிய உயிர்காக்கும் மருந்துகள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதற்காக அத்தியாவசிய மருந்துகள் மற்றும் விநியோகங்கள் கிடைப்பதை உறுதி செய்வதாகவும் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/146653

புற்றுநோயாளிகளிற்கான 43 மருந்துகள் உட்பட 140 மருந்துகளிற்கு தட்டுப்பாடு

By RAJEEBAN

25 JAN, 2023 | 04:25 PM
image

இலங்கை 140 மருந்துகளிற்கான தட்டுப்பாட்டை எதிர்கொள்கின்றது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

புற்றுநோயாளர்களிற்கான 43 மருந்துகள் உட்பட 140 மருந்துகளிற்கான தட்டுப்பாட்டை நாட்டின் சுகாதார அமைப்பு முறை எதிர்கொள்கின்றது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மருந்து தட்டுப்பாடு சுகாதார சேவைகளை முடக்கியுள்ளது நோயாளர்களிற்கு கடும் சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது.

தட்டுப்பாடாக உள்ள மருந்துகளை பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்;டுள்ள போதிலும் கொடுப்பனவுகள் தொடர்பில் பிரச்சினைகள் உள்ளன என சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் புற்றுநோயாளர்களிற்கான 43 மருந்துகளை பெற்றுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன அவை விரைவில் நாட்டை வந்தடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏனைய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான அவசியமான நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/146674

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மருந்து தட்டுப்பாடு குறித்து அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அவசரசெய்தி

By RAJEEBAN

27 JAN, 2023 | 10:49 AM
image

இலங்கை எதிர்கொண்டுள்ள மருந்துதட்டுப்பாட்டை நீக்குவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் தலையிடவேண்டும் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் அவசரவேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கைக்கு பொருட்கள் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதன் மூலம் மருந்துப்பொருட்கள் உபகரணங்கள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளிற்கு உலக சுகாதார ஸ்தாபனம் தீர்வை வழங்கவேண்டும் என  அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சுகாதார அமைச்சு உட்பட அதிகாரிகளிற்கு அவசியமான அழுத்தங்களை உலக சுகாதார ஸ்தாபனம் கொடுக்கவேண்டும் எனவும் அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடுகள் காரணமாக மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடி குறித்து நாங்கள் தொடர்;ச்சியாக ஜனாதிபதிக்கும் சுகாதார அமைச்சருக்கும் தெரிவித்துவந்துள்ளோம் என  அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.உலக சுகாதார ஸ்தாபனத்திற்கான வேண்டுகோளை கையளித்த பின்னர் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

தாங்க முடியாத அளவிற்கு மருந்துப்பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன மருந்துகளை கொள்வனவு செய்வதில் பல முறைகேடுகள் ஊழல்கள் இடம்பெறுகின்றன என தெரிவித்துள்ள அவர் அதிகாரிகளிடம் இது குறித்து வேண்டுகோள் விடுத்துள்ள போதிலும் சாதகமான பதில் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

நோயாளிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளிற்கு உரிய அதிகாரிகளிற்கு தெரிவிப்பதன் மூலம் தீர்வை காணமுடியாது என்பதை அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் உணர்ந்துள்ளது இதன் காரணமாகவே உலக சுகாதார ஸ்தாபனத்தை நாட தீர்மானித்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/146807

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.