Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புனித பத்திரிசியார் கல்லூரி அபாரம்! பொன் அணிகளின் போரில் கிண்ணத்தை வென்றது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புனித பத்திரிசியார் கல்லூரி அபாரம்! பொன் அணிகளின் போரில் கிண்ணத்தை வென்றது 

26 FEB, 2023 | 11:07 AM
image

வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணக் கல்லூரிக்கு எதிராக இடம்பெற்ற 106 ஆவது பொன் அணிகளின் போரில் அபார ஆட்ட்டத்தை வெளிப்படுத்திய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணி கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.

இரு அணிகளுக்குமிடையிலான 106 ஆவது கிரிக்கெட் போட்டி யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் இடம்பெற்றது.

WhatsApp_Image_2023-02-25_at_21.34.02.jp

இப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 272 என்ற சிறந்த ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக்கொண்ட புனித பத்திரிசியார் கல்லூரி அணி இன்னிங்ஸ் மற்றும் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் யாழ்ப்பாணக் கல்லூரியை வீழ்த்தியது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்ப்பாணக் கல்லூரி அணி களத்தடுப்பை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கி துடுப்பெடுத்தாடிய புனித பத்திரிசியார் கல்லூரி அணி 74.4 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 272 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது.

பின்னர் களமிறங்கிய யாழ்ப்பாணக் கல்லூரி அணி முதல் நாள் ஆட்டநேர நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்து 33 ஓட்டங்களை பெற்றிருந்தது. 239 ஓட்டங்கள் பின்னடைவில் தங்களுடைய இன்னிங்ஸை மறுநாள் 25 ஆம் திகதி ஆரம்பித்த யாழ்ப்பாணக் கல்லூரி அணி தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

WhatsApp_Image_2023-02-25_at_21.34.03.jp

குறிப்பாக மயூரன் சௌத்ஜன் மற்றும் குமனதாசன் சாருசன் ஆகியோரின் பந்துவீச்சுக்கு முற்றுமுழுதாக தடுமாறிய யாழப்பாணக் கல்லூரி அணி வெறும் 70 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

2 ஆம் நாளான 25 ஆம் திகதி ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த சிதம்பரலிங்கம் மதுசன் 24 ஓட்டங்களையும், அந்தோனி ரித்மான் அபிநாத் 18 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க ஏனைய வீரர்கள் அனைவரும் ஒற்றையிலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். பந்துவீச்சில் மயூரன் சௌத்ஜன் மற்றும் குமனதாசன் சாருசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

IMG-20230225-WA0027.jpg

தொடர்ந்து 202 ஓட்டங்கள் பின்னடைவிலிருந்த யாழ்ப்பாணக் கல்லூரி அணி போலோ ஒன் முறையில் மீண்டும் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய யாழ்ப்பாணக் கல்லூரிக்கு சிறந்த ஆரம்பம் கிடைக்கவில்லை. ரித்மான் அபிநாத் 14 ஓட்டங்களுடனும், தனுஷ்காந்த் 14 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

IMG-20230225-WA0029.jpg

ஆரம்ப விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்ட பின்னர் அணியின் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவேண்டிய கட்டாயத்துக்கு யாழ்ப்பாணக் கல்லூரி தள்ளப்பட்டது. எனினும் துடுப்பாட்ட வீரர்கள் போதுமான பங்களிப்புகளை வழங்கவில்லை.

முதல் இன்னிங்ஸில் அதிக ஓட்டங்களை பெற்றுக்கொண்ட சிதம்பரலிங்கம் மதுசன் பொறுப்புடன் ஆடி 114 பந்துகளுக்கு 59 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தாலும், எதிர் பக்கத்திலிருந்து துடுப்பாட்ட வீரர்களின் பங்களிப்பு கிடைக்கவில்லை. சிதம்பரலிங்கம் நர்த்தனன் 22 ஓட்டங்களையும், பாபு பிருந்தன் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து போட்டியை சமப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதும், கடைசி அரை மணிநேரத்துக்கு முன்னர் யாழ்ப்பாணக் கல்லூரி தங்களுடைய அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுக்க நேரிட்டது.

IMG-20230225-WA0022.jpg

அதன்படி இறுதி அரை மணிநேரம் வரை போராடியிருந்த யாழ்ப்பாணக் கல்லூரியால் 64.4 ஓவர்கள் நிறைவில் 179 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்த நிலையில், இன்னிங்ஸ் மற்றும் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. 

IMG-20230225-WA0028.jpg

புனித பத்திரிசியார் கல்லூரியின் சார்பில் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய குமனதாசன் சாருசன் 3 விக்கெட்டுகளையும், டேவிட் அபிலாஷ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

கடந்த ஆண்டு சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்திருந்த புனித பத்திரிசியார் கல்லூரி அணி, இம்முறை யாழ்ப்பாணக் கல்லூரியை அவர்களுடைய சொந்த மைதானத்தில் வீழ்த்தி கிண்ணத்தை தக்கவைத்துக்கொண்டது.

https://www.virakesari.lk/article/149155

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜன் கதிர்காமர் கிண்ண கிரிக்கெட்: ஒரு பந்து மீதமிருக்க சென் பெற்றிக்ஸுக்கு பரபரப்பான வெற்றி

04 MAR, 2023 | 11:47 PM
image

 

(என்.வீ.ஏ.)

யாழ்ப்பாணம் கல்லூரிக்கும் சென். பெற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையில் யாழ்ப்பாணம் கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை (04) நடைபெற்ற 30ஆவது வருடாந்த ஒருநாள் (50 ஓவர்) கிரிக்கெட் போட்டியில் மிகவும் பரபரப்பான முறையில் ஒரு பந்து  மீதமிருக்க 5 ஓட்டங்களால் சென் பெற்றிக்ஸ் வெற்றிபெற்று ராஜன் கதிர்காமர் கிண்ணத்தை சுவீகரித்தது.

துடுப்பாட்டத்தில் அபரிமிதமாக பிரகாசித்து அரைச் சதம் பெற்ற எம். சௌதியன், மிகவும் சாமர்த்தியமாக கடைசி ஓவரை வீசி அணியின் வெற்றியை உறுதிசெய்தார். சகல துறைகளிலும் பிரகாசித்த அவர் எவ்வித சந்தேகத்துக்கும் இடமின்றி ஆட்டநாயகனாக தெரிவானார்.

PHOTO-2023-03-04-21-28-28_1.jpg

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த சென் பெற்றிக்ஸ், ஐ. யெஸ்ரிகன், எம். சௌதியன் ஆகியோரின் சாதனைமிகு 151 ஓட்ட ஆரம்ப விக்கெட் இணைப்பாட்ட உதவியுடன் 47.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றது.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய எம். சௌதியன் 94 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 82 ஓட்டங்களையும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடிய யெஸ்ரிகன் 103 பந்துகளில் 7 பவுண்டறிகள் ஒரு சிக்ஸுடன் 47 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்கள் இருவரும் மொத்த எண்ணிக்கை 151 ஓட்டங்களாக இருந்தபோது ஆட்டம் இழந்தனர்.

அவர்களைவிட அணித் தலைவர் எஸ். கீர்த்தன் 18 ஓட்டங்களைப் பெற்றதுடன் உதிரிகளாக 26 ஓட்டங்கள் கிடைத்தன.

யாழ்ப்பாணம் கல்லூரி அணி பந்துவீச்சில் எஸ். நர்த்தனன் 48 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பி. பிருந்தன் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரி. ரொய்ஸ் ஜென்சன் 57 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

PHOTO-2023-03-04-21-28-29.jpg

226 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் கல்லூரி அணி 49.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 220 ஓட்டங்களைப் பெற்று 5 ஓட்டங்களால் கிண்ணத்தை தவறவிட்டது.

முதல் 2 விக்கெட்களை 32 ஓட்டங்களுக்கு இழந்து தடுமாற்றம் அடைந்த யாழ்ப்பாணம் கல்லூரி அணிக்கு 3ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த ரீ. டேமியன், எஸ். மதுஷன் ஆகிய இருவரும் 82 ஓட்டங்களைப் பகிர்ந்து உற்சாகம் கொடுத்தனர்.

டேமியன் 34 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் மதுஷனுடன் 4ஆவது விக்கெட்டில் இணைந்த எஸ். நர்த்தனன் 43 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

79 பந்துகளை எதிர்கொண்ட மதுஷன் 7 பவுண்டறிகள் அடங்கலாக 62 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய நர்த்தனன் 27 ஓட்டங்களையும் பி. பிரதீப் 25 ஓட்டங்களையும் பெற்றனர்.

தொடர்ந்து பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் கடைசி ஓவரில் யாழ்ப்பாணம் கல்லூரியின் வெற்றிக்கு 8 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

PHOTO-2023-03-04-21-28-35_1_-_Copy.jpg

கடைசி ஓவரை துணிச்சலுடன் சாமர்த்தியமாக வீசிய சௌதியன் 2 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்ததுடன் கடைசி விக்கெட் ரன் அவுட் முறையில் விழ சென் பெற்றிக்ஸ் அணி மிகவும் பரபரப்பான வெற்றியை ஈட்டி ராஜன் கதிர்காமர் கிண்ணத்தை சுவீகரித்தது.

சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற 2 நாள் கிரிக்கெட் போட்டியிலும் சென் பெற்றிக்ஸ் வெற்றிபெற்றிருந்தது.

இந்த இரண்டு கல்லூரிகளுக்கும் இடையிலான இருபது 20 கிரிக்கெட் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

 

விசேட விருதுகள்

ஆட்ட நாயகன் மற்றும் சிறந்த துடுப்பாட்ட வீரர்: எம். சௌதியன் (SPC), சிறந்த பந்துவீச்சாளர்: எஸ். நர்த்தனன் (JC), சிறந்த களத்தடுப்பாளர்: பி. பிரதீப் (JC), சிறந்த சகலதுறை வீரர்: எஸ். மதுஷான் (JC), சிறந்த இணைப்பாட்டம்: எம். சௌதியன் - ஐ. யெஸ்ரிகன் (SPC).

சிறப்பு விருது: ஐ. யெஸ்ரிகன் (SPC), பி. பிருந்தன் (JC).

கிரிக்கெட் ஆர்வ விருது: ரீ. டேமியன் (JC), எஸ். கீர்த்தன் (SPC),

https://www.virakesari.lk/article/149732

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். கல்லூரியை மூவகை கிரிக்கெட் போட்டிகளிலும் வெற்றிகொண்டு வரலாறு படைத்தது சென் பெற்றிக்ஸ்

Published By: DIGITAL DESK 5

08 MAR, 2023 | 12:37 PM
image

(என்.வீ.ஏ.)

பொன் அணிகளின் கிரிக்கெட் சமரில் தனது எதிரணியான யாழ்ப்பாணம் கல்லூரி அணியை  இந்த வருடம்   மூவகை கிரிக்கெட் போட்டிகளிலும் வெற்றிகொண்டதன் மூலம் சென் பெற்றிக்ஸ் கல்லூரி அணி வரலாற்றுச் சாதனை படைத்தது.

பொன் அணிகளின் சமர் இரண்டு நாள் கிரிக்கெட் போட்டியிலும் பின்னர் ராஜன் கதிர்காமர் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் யாழ்ப்பாணம் கல்லூரியை வெற்றிகொண்டிருந்த சென் பெற்றிக்ஸ், செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டி முழுமையான வெற்றியை நிறைவுசெய்தது.

இருபது 20 கிரிககெட் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் வெற்றிக் கிண்ணத்தை சென் பெற்றிக்ஸ் சுவீகரித்தது.

 

இரண்டு கல்லூரிகளுக்கும் இடையிலான இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 87 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென் பெற்றிக்ஸ் கல்லூரி அணி 10.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 87 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஆரம்ப வீரர்களில் ஒருவரான ஐ. ஜெஸ்டிகன் 2 ஓட்டங்களுடன் 3ஆவது ஓவரில் ஆட்டம் இழந்தபோது சென் பெற்றிக்ஸின் மொத்த எண்ணிக்கை 15 ஓட்டங்களாக இருந்தது.

அதன் பின்னர் மற்றைய ஆரம்ப வீரர் எம். சௌதியன்,  3ஆம் இலக்க வீரர் பற்குணம் மதுஷன் ஆகிய இருவரும் இணைந்து பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 47 பந்துகளில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்து சென் பெற்றிக்ஸ் அணியின் வெற்றியை இலகுவாக ஈட்டிக்கொடுத்தனர்.

துடுப்பாட்டத்தில் அசத்திய சௌதியன் 42 பந்துகளில் 8 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் அடங்கலாக 69 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழக்காதிருந்தார்.

பி. மதுஷன் ஆட்டம் இழக்காமல் 8 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் எஸ். மதுஷன் 18 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த யாழ்ப்பாணம் கல்லூரி அணி 19.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 86 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

பொறுப்பற்ற துடுப்பாட்டம், அவசரத் துடுக்கை ஆகியனவே யாழ்ப்பாணம் கல்லூரி அணியின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. 4 வீரர்கள் அநாவசியமாக தங்களது விக்கெட்களை ரன் அவுட் முறையில் இழந்தனர்.

துடுப்பாட்டத்தில் பி. பிருந்தன் (28), ஐ. எமெக்சன் (14), எஸ். நர்த்தனன் (10) ஆகிய மூவரே இரட்டை இலக்கை எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

திறமையாக பந்துவீசிய எஸ். சமிந்தன் 3 ஓவர்களில் 8 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகன்: எம். சௌதியன்.

IMG-20230307-WA0005.jpg

IMG-20230307-WA0004.jpg

IMG-20230307-WA0003.jpg

IMG-20230307-WA0000.jpg

IMG-20230307-WA0001.jpg

https://www.virakesari.lk/article/149944

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.