Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் மீண்டும் கொரோனா !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
COVID.jpg

ஜே.என்-1 ஒமிக்ரோன் வகை புதிய கொரோனா வைரஸ் திரிபானது இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தன புர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் ஆய்வுகூட தலைவரான சந்திம ஜீவந்திர தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் அவர் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.

கொவிட்-19 சோதனைகள் தற்போது குறைந்தளவிலேயே முன்னெடுக்கப்படுவதால், அதன் உண்மையான தரவுகளை பெற முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், கொரோனா வைரஸுக்கு எதிரான நோயெதிர்ப்பு தடுப்பூசிகள் இன்னும் வழங்கப்படுகின்றன. அதிக பாதிப்பினை எதிர்கொள்ளும் தரப்பினர் பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெறுவது முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு காய்ச்சலும் பரவும் நிலையில், தொடர்ச்சியான காய்ச்சல் காணப்படுமானால், அது தொடர்பில், பொதுமக்கள் உரிய மருத்துவரை அணுகி ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/285588

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜே.என்.1 கொவிட்  இலங்கையிலும் பரவியுள்ளதாக சந்தேகிக்கும் உயிரியல் துறை பணிப்பாளர்!

Published By: VISHNU   22 DEC, 2023 | 03:30 PM

image
 

(எம்.மனோசித்ரா)

ஒமிக்ரோன் பிரழ்வின் துணை வகையான ஜே.என்.1 என்ற புதிய கொரோனா வைரஸ் மாறுபாட்டின் பரவல் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சந்திம ஜீவந்தர டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டு இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இந்த வைரஸ் ஏற்கனவே சமூகத்திற்குள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் கொச்சி பிரதேசத்தில் இன்ஃப்ளுவன்ஸா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்ட அனைத்து நோயாளிகளிலும் 30 வீதமானோருக்கு சுமார் 24 மணி நேரத்தில் கொவிட் தொற்று இனங்காணப்பட்டுள்ளது. இதற்கு ஒமிக்ரோன் பிறழ்வின் ஜே.என்.1 துணை மாறுபாட்டின் காரணம் என சோதனை செய்யப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் சுகாதார அமைப்பு ஆபத்தில் இல்லை. ஏனெனில் அவர்கள் முந்தைய அலைகளை வெற்றிகரமாக நிர்வகித்துள்ளனர் மற்றும் தொற்றாளர்கள் அதிகரித்தால் அதனை எதிர்கொள்ள நாடு தயாராக உள்ளது. எவ்வாறிருப்பினும் தற்போது இலங்கையில் பரிசோதனை மிகவும் குறைவாக உள்ளது அல்லது பூஜ்ஜியத்தை நெருங்குவதால், வயதானவர்கள் அல்லது எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் முகக் கவசம் அணிவதைத் தொடங்குமாறும் வைத்தியர் ஜீவந்தர அறிவுறுத்தியுள்ளார்.

'தற்போது எந்த நிலைமையில் இருக்கின்றோம் என்பது தெரியவில்லை. ஆனால் கடந்த காலத்தைப் போலவே இந்த ஜே.என்.1 துணை மாறுபாடு வெளிப்படக் கூடும். இது ஏற்கனவே சமூகத்தில் இருக்கிறது என்பது என் யூகம். எனவே மக்கள் அனைவரும் காற்றோட்டம் அற்ற மூடிய, நெரிசலான சூழலில் இருந்தால், முகக்கவசத்தை அணிவது பாதுகாப்பானது, என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜே.என்.1 இன் அறிகுறிகள் காய்ச்சல், இருமல், வாசனை உணர்வின்மை,  சுவை உணர்வு இழப்பு, தொடர்ந்து அதிக காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம், சோர்வு, சாப்பிட இயலாமை மற்றும் வாந்தியெடுக்கும் போக்கு ஆகியவையாகும்.  உலகின் சில பகுதிகளில் இது அவதானிக்கப்பட்டுள்ளது.

அறிகுறிகள் உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு வலியுறுத்துகின்றேன். தடுப்பூசிகள் இன்னும் செயல்படுகின்றன, மேலும் மக்களுக்கு குறிப்பாக ஆபத்தில் உள்ளவர்களுக்கு பூஸ்டர்கள் தேவைப்படலாம் என்றும் வைத்தியர் சந்திம ஜீவந்தர சுட்டிக்காட்டியுள்ளார்.

https://www.virakesari.lk/article/172283

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் முகக்கவசம் அணியுங்கள்!

covid-news.jpg

மீண்டும் முகக்கவசம் அணியுமாறு ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.

JN1 OMICRON உப பிறழ்வான புதிய கொவிட் வைரஸ் திரிபு இலங்கையிலும் பரவி வருகின்றமையே இதற்கு காரணம். இதன் விளைவாக இலங்கையில் சளி போன்ற நிலைமை ஏற்படலாம். எவ்வாறாயினும் இது தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாமெனவும் பேராசிரியர் ச்சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

காய்ச்சல், இருமல், மணமின்மை மற்றும் சுவையின்மை, அதிக வெப்பம், சுவாசக் கோளாறு, உணவு தவிர்ப்பு மற்றும் வாந்தி என்பன JN1 OMICRON கொவிட் பிறழ்வின் நோய் அறிகுறிகளாக காணப்படுகின்றன. ஆகவே, இவ்வாறான நோய் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் வைத்தியரை நாடுமாறும் அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

லக்ஸம்பேர்க் இராச்சியத்தில் கண்டறியப்பட்ட இந்த JN1 OMICRON உப பிறழ்வு தற்போது இந்தியாவில் பரவி வருகின்றது. இந்த வைரஸால் இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2660 ஐ கடந்துள்ளது. இந்தியாவின் கேரள மாநிலத்தில் பரவிய இந்த உப பிறழ்வு தற்போது கோவா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களிலும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தேவையான வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு இந்திய சுகாதார அதிகாரிகள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இந்தியாவின் கேரள மாநிலத்தில் பரவி வரும் J N 1 கொரோனா பிறழ்வு கவனம் செலுத்தப்பட வேண்டிய வைரஸ் என உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/285780

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது கோவிட மரணம் நேற்று கம்போலவில் நடந்திருக்கிறது. மீண்டும் இந்த கொள்ளை நோய் வந்தால் இலங்கை தேசம் தாங்காது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் கொவிட் 19 - ஜே.என்.-1 பிறழ்வு குறித்து சுகாதார அமைச்சின் விளக்கம்

25 DEC, 2023 | 07:23 PM
image
 

(எம்.மனோசித்ரா)

உலகின் பல நாடுகளிலும் கொவிட் வைரஸின் துணை பிறழ்வான ஜே.என்.-1 பரவல் அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே இலங்கையில் இதன் நிலைமை குறித்து அறிந்து கொள்வதற்காக பிரதான வைத்தியசாலைகளிலிருந்து பெறப்பட்ட மாதிரிகள் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவற்றில் எந்த மாதிரியிலும் கொவிட் தொற்று இனங்காணப்படவில்லை என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எனவே ஜே.என்.-1 பிறழ்வினால்  ஏற்படக் கூடிய பொது சுகாதார அச்சுறுத்தல் குறைவாகவே காணப்படுவதாகவும், எவ்வாறிருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொவிட் தொற்றை இனங்காண்பதற்கான பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் கடந்த 22ஆம் திகதி கொவிட்-19 வைரஸின் மாறுபாடாக ஜே.என்.-1 பிறழ்வு அறிவிக்கப்பட்டது. இது தொடர்பில் மேலும் ஆராயப்பட வேண்டும் என்றும் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. எவ்வாறிருப்பினும் இதனால் ஏற்படக் கூடிய பொது சுகாதார அச்சுறுத்தல் குறைவாகவே காணப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறிருப்பினும் வடக்கு அரைக்கோளத்தில் குளிர்காலம் தொடங்குவதால், இந்த துணை வகை மற்றும் இன்ஃப்ளூயன்ஸா உள்ளிட்ட பிற சுவாச நோய்கள் அந்த பகுதிகளை பாதிக்கும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது. ஜே.என்.-1 பிறழ்வு இந்தியா, சீனா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற பல நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது .

தற்போதைய உலகளாவிய சூழ்நிலையை கருத்தில் கொண்டு , சுகாதார அமைச்சானது உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்காசிய பிராந்திய அலுவலகத்துடன் கலந்தாலோசித்து, 19 பிரதான மருத்துவமனைகளில் சுவாச நோய்களின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது. கொவிட் தொற்றை இனங்காண்பதற்கான பரிசோதனைகளை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஜே.என்.-1 பரவும் அபாயத்தை மதிப்பிடுவதற்கு மரபணு பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், அதற்கேற்ப மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த சில மாதங்களாக இலங்கையில் நடத்தப்பட்ட சோதனைகள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான கொவிட் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். எனினும் கடந்த சில நாட்களாக, சிறப்பு கவனம் செலுத்தி, தொழில்நுட்ப அறிவுறுத்தல்களின்படி, முக்கிய மருத்துவமனைகளில் இருந்து மாதிரிகள் பெறப்பட்டு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. எந்த மாதிரியிலும் கொவிட்-19 தொற்று அடையாளம் காணப்படவில்லை

எனவே, தற்போதைய தரவுகளின்படி, கொவிட் வைரஸின் துணை பிறழ்வான ஜே.என்.-1 இலங்கையில் தொற்றுவதற்கான ஆபத்து மிகக் குறைவாகும். நிபுணர்களின் ஆலோசனையின்படி, காய்ச்சல் மற்றும் பிற சுவாச நோய்கள் பரவுவதைத் தடுக்க , மூடிய , காற்றோட்டம் அற்ற, நெரிசலான இடங்களில் முகக்கவசங்களை அணிவது , அடிக்கடி கைகளைக் கழுவுதல் , இடைவெளியைப் பேணுதல் , இருமல் மற்றும் தும்மல் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுதல் என்பவற்றின் மூலம் நோய் பரவுவதற்கான வாய்ப்புகளை குறைத்துக் கொள்ள முடியும்.

குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டால் உடனடியாக வைத்தியர்களை அணுக வேண்டும்.

https://www.virakesari.lk/article/172468

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.