Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தீபச்செல்வனின் "பயங்கரவாதி" நாவல்,  கதையல்ல காவியம்.

 

428146438_416795357678166_16951414056807

ஈழத்தைக் களமாகக் கொண்டு வெளிவந்துள்ள "பயங்கரவாதி" நாவல் இன்னும் புத்தக வடிவில் எனக்குக் கிடைக்கவில்லை, ஆனாலும் அமேசான் கிண்டல் தளத்தில் வாங்கிப் படிக்கும் வாய்ப்பைப் பெற்றேன். 

ஈழ மண்ணிலிருந்து இப்படி ஒரு படைப்பை, உள்ளிருந்த படைப்பாக எழுதுவது அவ்வளவு இலகுவான காரியமல்ல, அது கத்தி முனையில் நடப்பதற்குச் சமமானது. இருந்தும், தான் கொண்ட கொள்கையில் எந்த சமரசமும் செய்யாமல் 2005 - 2009 வரையான 4 ஆண்டுகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நடந்த நிகழ்வுகளை மிகவும் நேர்த்தியான முறையில் கதையாகச் சொல்லியுள்ளார்.

தீபச்செல்வன் ஒரு சிறந்த கவிஞர் என்பதைத் தாண்டி ஒரு சிறந்த யதார்த்த எழுத்தாளர் என்பதை அவரின் "நடுகல்" நாவல் படித்தவர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள். அதை இந்த நாவலின் மூலம் இன்னும் ஒரு முறை உரத்துக் கூறியிருக்கிறார். 

நான் 2000 - 2004 வரையான காலத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படித்தவன் என்றவகையில், "பொங்குதமிழ்" நிகழ்வின் ஆரம்ப காலம் பற்றியும் அதன் பின்னரான விளைவுகள் பற்றியும் பட்டுணர்ந்தவன், நன்கறிந்தவன். அதற்குப் பின்னர், இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளுடனான சமாதான ஒப்பந்தத்தைத் தன்னிச்சையாக முறித்துக்கொண்டு போரினை வலிந்து துவங்கிய 2006 இல் இருந்து போர் முடிவுற்ற 2009 வரையிலான காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குள்ளும் வெளியிலும் நடந்த அத்தனை துன்பகரமான நிகழ்வுகளையும் உள்வாங்கிக்கொண்டு "பயங்கரவாதி" நாவல் நகர்கிறது.

இந்தக் கதையைப் பற்றியோ கதையில் வரும் பாத்திரங்கள் பற்றியோ நான் அதிகம் சொல்ல விரும்பவில்லை. கதையின் நாயகன் மாறன், மலரினி, துருவன், சுதர்சன், பாரதியம்மா, மகிழன், குமணன், மற்றும் சிறு சிறு பாத்திரங்களில் வரும் அனைவரும் கதையின் உயிரோட்டமாக நின்று தொய்வில்லாமல் கதையைத் தாங்கிச் செல்கின்றனர். 

தமிழீழப் போராட்டம் வெறுமனே ஆயுதப்போராட்டம் மட்டுமல்ல அதையும் தாண்டிப் பேசப்படவேண்டிய பல விடயங்கள் உள்ளன என்பதை இந்த நாவல் நிச்சயம் உங்களுக்குச் சொல்லும். ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பங்கு என்ன என்பதையும் அன்றைய யுத்த காலத்தில் மாணவர்கள் கடந்து வந்த கடினமான நாட்களையும் தாங்கி நகர்கிறது நாவல். 

இந்த நாவல் வாசிப்புக்கிடையில் பல இடங்களில் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. நட்பு, நம்பிக்கைத் துரோகம், குழிபறிப்பு, உற்ற சொந்தங்களின் இழப்பு, வலி மிகுந்த வாழ்க்கைக்கு இடையில் ஒரு மெல்லிய காதல், பல்கலைக் கழக மாணவர்களின் வழமையான குறும்புகள் என்று நகர்கிறது கதை.

நாவலின் ஒவ்வொரு பக்கமும் படிக்கப் படிக்கக் கண்களின் முன் காவியமாய், படக் காட்சிகளாய் விரிந்து உயிர்ப்பயம் கொள்ளச் செய்கின்றன. உண்மையைச் சொல்வதானால், “பயங்கரவாதி” நாவல் வாசித்து முடித்த பின்னரும் என்மனம் பல்கலைக்கழககத்தையும் விடுதியையும் சுற்றி அலைகிறது.

அன்பான வாசகர்களே, நண்பர்களே, தயவுசெய்து ஒருமுறையாவது “பயங்கரவாதி” நாவலை வாங்கிப் படியுங்கள். என் அதிகபட்ச ஆசை என்னவென்றால், ஈழம் பற்றிய நல்ல படம் (சினிமா) எடுக்க முனையும் தென்னிந்திய சினிமா படத் தயாரிப்பாளர்கள் / இயக்குனர்களில் யாராவது ஒருவர் இக்கதையை படமாகக் கொண்டுவர முயலவேண்டும்.  

426501389_10210594541015286_236503759247

தீபச்செல்வனின் "பயங்கரவாதி" நாவல் - துரோகத்தின் கதை என்ற தலைப்பில் இந்த நாவலுக்காக வந்த முதல் விமர்சனம், 2022இல் நான் எழுதிஇருந்தேன்.

 

-தியா- 

15/03/2022

Edited by theeya

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.