Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரச வங்கிகள் தேசிய வளங்களாக பாதுகாக்கப்பட வேண்டுமென பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் நிறுவன பிரச்சினைகள் தொடர்பில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நிறுவனங்களின் மறுசீரமைப்பு, மாற்று முன்மொழிவுகள், நிறுவனங்களை பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல் தொடர்பான பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.

அரச வங்கிகளை தேசிய வளங்களாக பாதுகாப்பது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் எனவும், ஏதேனும் பிரச்சினைகள் மற்றும் மாற்றங்கள் தொடர்பான கருத்துக்கள் இருப்பின் ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுக்காமல் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன இதன்போது தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/292301

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி ? இந்த அரசியல்வாதிகள்தான் அரச வங்கிகளை நாசமாக்குகிறார்கள் . தங்கள் கூஜா தூக்கிகளுக்கு கோடிக்கணக்கான பணத்தை கொடுத்து விட்டு பின்னர் bad  debt என்று சொல்லி கணக்கை மூடி விடுகிறார்கள். அவர்கள் எல்லாம் கொழுத்த பணக்காரர்களாக இருந்தாலும் எந்த வித நடைமுறையும் இல்லாமல் அரசியல் செல்வாக்கில் பணத்தை பெற்று கொண்டு வங்கிகளைநாசமாக்குகிறார்கள். அணமையில்கூட பில்லியன் கணக்கில் இப்படி தள்ளுபடி செய்யப்படட ஒரு அடடவனை காணப்பட்ட்து. அனாலும் என்ன, பேச்சு பல்லக்கு தம்பி கால்நடை எண்றமாதிரிதான் இருக்குது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Cruso said:

எப்படி ? இந்த அரசியல்வாதிகள்தான் அரச வங்கிகளை நாசமாக்குகிறார்கள் . தங்கள் கூஜா தூக்கிகளுக்கு கோடிக்கணக்கான பணத்தை கொடுத்து விட்டு பின்னர் bad  debt என்று சொல்லி கணக்கை மூடி விடுகிறார்கள். அவர்கள் எல்லாம் கொழுத்த பணக்காரர்களாக இருந்தாலும் எந்த வித நடைமுறையும் இல்லாமல் அரசியல் செல்வாக்கில் பணத்தை பெற்று கொண்டு வங்கிகளைநாசமாக்குகிறார்கள். அணமையில்கூட பில்லியன் கணக்கில் இப்படி தள்ளுபடி செய்யப்படட ஒரு அடடவனை காணப்பட்ட்து. அனாலும் என்ன, பேச்சு பல்லக்கு தம்பி கால்நடை எண்றமாதிரிதான் இருக்குது. 

அரசியல்வாதிகளுக்கும் பாரிய வர்த்தகர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள கடன் பாரதூரமானது - பிரதமர்

Published By: VISHNU   18 FEB, 2024 | 06:25 PM

image

(எம்.வை.எம்.சியாம்)

அரசியல்வாதிகளுக்கும் பாரிய வர்த்தகர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள கடன் பாரதூரமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. 

அரச வங்கிகள் தேசிய வளமாக பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் சில மாற்றங்களைச் செய்வது குறித்து கலந்துரையாட வேண்டும். இல்லையென்றால் நாம் ஒருதலைப்பட்சமாக முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில்  அலரி மாளிகையில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் இதன்போது தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், நிறுவனங்களின் மறுசீரமைப்பு, மாற்று முன்மொழிவுகள், நிறுவனங்களைப் பாதுகாத்தல் மற்றும் கொண்டு நடத்தல் தொடர்பான பல விடயங்களை முன்வைத்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர், இந்த அரச வங்கிகள் தேசிய வளமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கிறோம். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் சில மாற்றங்களைச் செய்வது குறித்துக் கலந்துரையாட வேண்டும். இல்லையென்றால் நாம் ஒருதலைப்பட்சமாக முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும்.

தற்போது பொருளாதார நெருக்கடியில் இருந்து நாம் ஓரளவு மீண்டிருப்பதால் முக்கியமான வங்கிகளை எப்படியேனும் பாதுகாக்க வேண்டும். அதை எப்படி செய்வது என்பது இன்னும் விரிவாக கலந்துரையாடப்பட வேண்டும். பல பாரிய வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் தான் பாரதூரமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல்வாதிகளுக்குக் கடன் கொடுத்ததால் தான் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது. அதை தனியார் நிறுவனத்திற்கு விற்பதுதான் ஒரே வழி என்பவையெல்லாம் புனையப்பட்ட கதைகள். இது போன்ற கதைகளில் நாம் ஏமாறாமல் இந்த மூன்று வங்கிகளிலும் சிறப்பான முறையில் தலையிட வேண்டும்.

பெருந்தோட்டக் கிராமங்களை அமைப்பதில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. பெருந்தோட்டக் கிராமங்களை அமைப்பதற்கான குறிப்பிட்ட பகுதிகளை அடையாளம் காணும் பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லை. 3500 அடிக்கு மேல் உள்ள பகுதிகளில் எந்த விதத்திலும் புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படமாட்டாது. இது அரசாங்கத்தின் முடிவு. அந்தப் பகுதிகள் படிப்படியாக வனப் பாதுகாப்பிற்கு விடுவிக்கப்படும். 

தற்போது நாம் இணங்கியுள்ள சர்வதேச காலநிலை மாற்ற உடன்படிக்கையின் படி மூவாயிரம் அடிக்கு மேல் உள்ள தோட்டங்களைக் குடியிருப்பாளர்கள் இன்றியே வைத்திருக்க முடியும்.

இது போன்ற உயரமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு என்ன செய்வது என்று இந்த நாட்களில் கலந்துரையாடப்படுகிறது. பெருந் தோட்டங்களில் 143,000 வீட்டு உரிமையாளர்களே உள்ளனர். ஏனையவர்கள் தோட்டங்களில் வசிக்கவில்லை என்றார்.

https://www.virakesari.lk/article/176697

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

அரசியல்வாதிகளுக்கும் பாரிய வர்த்தகர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள கடன் பாரதூரமானது - பிரதமர்

Published By: VISHNU   18 FEB, 2024 | 06:25 PM

 

(எம்.வை.எம்.சியாம்)

அரசியல்வாதிகளுக்கும் பாரிய வர்த்தகர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள கடன் பாரதூரமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. 

https://www.virakesari.lk/article/176697

இவர் இலங்கையின் பிரதமர்தானே? இந்த அரசியல் வாதிகள் , பணக்காரர்களின் பெயர்களை இவரால் வெளியிட முடியுமா? முதலில் இவர் அதனை செய்தால் இவர் சொல்வதில் ஒரு அர்த்தம் உள்ளது. குறைந்தது அந்த கடன்களை மீள் வசூலிக்கவில்லை எனும்போது இப்படி பேசுவதால் மட்டும் ஒன்றும் நடக்க போவதில்லை. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.