Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரத்தின் குரூரப்பார்வை இப்போது தமிழ்ப்பாடசாலைகளின் பக்கம் திரும்பியிருக்கிறது. எங்கெல்லாம் உரிமைக்கும், உணர்வுக்குமான குரல்கள் எழத்தொடங்குகின்றனவோ அங்கெல்லாம் நுழைந்து, அந்தக் குரல்களை நசுக்குவதையே ஆட்சியாளர்கள் தமது முதற்கடமையாகக் கொண்டுள்ளார்கள். இல்லா விட்டால் அந்தக்குரல்களின் பரவுகை பேரெழுச்சியை உண்டாக்கி, தம் இருப்புக்கே உலை வைத்துவிடு மென்பதே ஆட்சியில் உள்ளவர்களின் அச்சமாக இருக் கின்றது. சர்வதேசச் சதியுடன், பெரும் மனிதப்பேர வலத்தை நிகழ்த்தி, குருதிச்சகதிக்கு நடுவே தமிழர்களின் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரும் சிங்கள பௌத்த பேரினவாதம் அடங்கிவிடவில்லை. எப்போது வேண்டுமானாலும் அடிபட்ட புலியாக, தமிழர்கள் திரண்டெழுந்து, பழிக்குப் பழி வாங்கக்கூடும் என்ற சந்தேகத்தோடுதான் இன்றுவரை தமிழ் மக்களை இலங்கை அரசும், படைத்தரப்பும் நோக்குகின்றன.

மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்போல, சிங்கள-பௌத்த பேரினவாதிகளின் கண் களுக்கு தமிழர்களின் சாதாரண நகர்வுகள்கூட, புலிகளை மீளுருவாக்கும் முயற்சியாகவே புலப்படுகின்றன. அத்தோடு போர் பற்றிய நினைவுகளை அழித்து, கேளிக்கை யான பாதைக்குள் இளைய சமுதாயத்தை மடைமாற்று வதனூடாக, தமிழர்களின் உரிமைப்போரை மலடாக்கி விடலாம் என்றும் எண்ணுகின்றனர். அதனாலேயே இறுதிப்போர் முடிந்த கையோடு, புலிகள் தொடர்பான அத்தனை நினைவிடங்களையும் படையினர் அத்திபாரத் தோடு பிடுங்கியெறிந்தனர். மாவீரர் துயிலுமில்லங்கள் இடித்தழிக்கப்பட்டன. முள்ளிவாய்க்கால் இனப்படு கொலை, மாவீரர்நாள் என்பவற்றை தங்கள் மன அவசங் களைத் தீர்த்துக்கொள்ளும் ஒரு கருவியாக தமிழர்கள் நினைவேந்த முற்பட்டபோது அவற்றுக்கு ஆயுதமுனை யில் தடை விதிக்கப்பட்டது. அதையும் மீறி நினைவேந்தி யவர்கள் கைது செய்யப்பட்டனர், வழக்குப் போடப்பட்டு அலைக்கழிக்கப்பட்டனர். தமிழர்களின் உரிமைக்குரல் ஒலிக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் போன்ற இடங்கள் படைப்புலனாய்வாளர்களின் கழுகுப் பார் வைக்குள் 24மணித்தியாலங்களும் கொண்டுவரப்பட்டன. அதேசமயத்தில், தமிழர் தாயகத்தில் எப்போதுமில் லாதவகையில் போதைப் பொருள் பாவனை வியாபிக்கத் தொடங்கியது. விநோதமான பெயர்களில் வாள்வெட்டுக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. சில வருடங்களுக்கு முன்னர் வரை உலக அரங்கில் தலைநிமிர்ந்து நின்ற தமிழ் இளையோர், தறிகெட்டு ஓடும் மந்தைக் கூட்டமாக மாற்றப்படத் தொடங்கினர்.

ஆனால் என்னதான் பேரினவாதிகளும், படைத் தரப்பும் பகீரதப் பிரயத்தனம் செய்து உரிமைக்கான தகிப்பை இல்லாமல் செய்ய முயன்றாலும், தமிழர்களின் மரபணுவில் அது இரண்டறக் கலந்துவிட்டதால், ஏதோ வொரு வகையில் பீறிட்டுக் கிளம்பவே செய்தது. இம்முறை பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் டாங்கி, வெடுக்குநாறிமலை ஆக்கிரமிப்பு, துயிலுமில்லம், கார்த்தி கைப்பூ என்று எங்கள் நிலத்தின் நினைவுகளை மாணவர்கள் ஆக்கவடிவில் வெளிக்கொணர்ந்திருந்தனர். போருக்குள் பிறந்த ஒரு சந்ததி, தான் கண்டு, கேட்டு, உண்டுயிர்த்து, உற்றுணர்ந்து கற்றவற்றை ஓர்ஆக்கவடிவில் வெளிப்படுத்தியதில் தவறொன்றுமில்லையே. ஆனால் பாடசாலைகளில் உயிர்கொல்லும் போதைப் பொருள் கள் விற்பதைக் கண்டும்காணாமல் ஊக்குவித்த அரசாங் கத்துக்கு இந்தப் படைப்புகள் கண்ணைக் குத்தியிருக் கின்றன. பாடசாலை முதல் வீடுவரை விசாரணைகள் நீள்கின்றன. 'குய்யோ முறையோ' என்று சிங்கள -பௌத்த பேரினவாத அமைப்புகள், மாணவர்களின் இந்தப் படைப்பாக்கங்களை பயங்கரவாத முத்திரை குத்தி கடிதங்களை எழுதித் தள்ளுகின்றன. நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்க, ஒன்றுமேயில்லாத இதுபோன்ற மாணவர் படைப்புகளை பிரச்சினையாக்க நினைப்பது அபத்தமே. ஆனால் அதைப் பேரினவாதிகளோ, இலங்கை அரசோ, அரச படைகளோ புரிந்து கொள்ளவே போவதில்லை. அப்படிப் புரிந்துகொள்ளாத வரையில் இந்த நாடு உருப்படவும் போவதில்லை.

(03.04.2024-உதயன் பத்திரிகை).

https://newuthayan.com/article/படைப்பாக்கமும்_பயங்கரவாதமா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.