Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
06 JUN, 2024 | 11:02 AM
image
 

ரோயல்பார்க் கொலை குற்றவாளிக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன வழங்கிய பொதுமன்னிப்பை உயர்நீதிமன்றம் இரத்துச்செய்துள்ளது.

ரோயல்பார்க் கொலையாளி டொன் சமந்த ஜீட் அந்தனி ஜயமஹவிற்கு ஜனாதிபதியாக பதவிவகித்த காலத்தில் மைத்திரிபாலசிறிசேன வழங்கிய பொதுமன்னிப்பு தன்னிச்சையானது சட்டத்தின் கீழ் செல்லுபடியற்றது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பு விதிகளை பின்பற்றாமைக்காக ரோயல்பார்க் கொலையாளிக்கு வழங்கப்பட்ட இரண்டு ஜனாதிபதி பொதுமன்னிப்புகளை நீக்குமாறு மூன்றுநீதிபதிகள் அடங்கிய குழாம் உத்தரவிட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேன மேற்படி பிரதிவாதிக்கு பொதுமன்னிப்பை வழங்கியவேளை மனுதாரரின் அடிப்படை உரிமைகளையும் பொதுநம்பிக்கை கோட்பாட்டையும் மீறியுள்ளார் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ரோயல் பார்க் கொலைக் குற்றவாளிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கிய முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவின் தீர்மானத்தின் சட்டபூர்வமான தன்மையை எதிர்த்து பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டு அமைப்பு இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தது.

இந்த தீர்ப்பை கருத்திற் கொண்டுஇ ஜூட் ஜயமஹாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில் சட்ட ரீதியாக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/185424

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரோயல் பார்க் கொலையாளியை உடனடியாக கண்டுபிடித்து சிறையில் அடைக்கவேண்டும் - கொல்லப்பட்ட சுவீடன் யுவதியின் குடும்பத்தினர் வேண்டுகோள்

Published By: RAJEEBAN   07 JUN, 2024 | 11:11 AM

image
 

ரோயல்பார்க் கொலையாளியை உடனடியாக கண்டுபிடித்து அவரை சிறையில் அடைக்கவேண்டும் என கொலை செய்யப்பட்ட சுவீடன் யுவதியின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்  

ரோயல் பார்க் கொலையாளிக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை இரத்துச்செய்யும் நீதிமன்றத்தின் உத்தரவை இலங்கையில் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களிற்குமான குறிப்பிடத்தக்க தீர்ப்பு என கொலை செய்யப்பட்ட சுவீடன் யுவதி இவோன் ஜோன்சனின் குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவான்ஜோன்சனின் குடும்பத்தவர்கள் சார்பில் அவரது சகோதரி கரோலின் ஜோன்சன் விடுத்துள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில்பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களுக்கும் இது ஒரு குறிப்பிடத்தக்க தீர்ப்பு என குறிப்பிட்டுள்ள அவர் தன்னிச்சையான முடிவுகளால் அவர்களின் உயிரையும் கண்ணியத்தையும் சமரசம் செய்ய முடியாது என்பதை இந்த தீர்ப்பு உறுதிப்படுத்துகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

இவான் ஜோன்சனின் கொலையாளிக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொதுமன்னிப்பு தன்னிச்சையானது சட்டத்தின்கீழ் செல்லுபடியற்றது என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆழ்ந்த நிம்மதியையும் நீதியையும் தருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவானின் துயரமான மற்றும் கொடுரமான இழப்பு எங்களின் இதயங்களில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை  ஏற்படுத்தியுள்ளது இது எங்களிற்கு மிகப்பெரிய தொடரும் வலியை ஏற்படுத்தியது என குறிப்பிட்டுள்ள கொலை செய்யப்பட்ட பெண்ணின் சகோதரி முன்னாள் ஜனாதிபதி கொலையாளிக்கு மன்னிப்பை வழங்கியது மிகப்பெரும் துரோகமிழைக்கப்பட்டுள்ளது போன்ற உணர்வை ஏற்படுத்தி எங்களின் வேதனையை மேலும் அதிகரித்தது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த தீர்ப்பு நீதிமற்றும் பொறுப்புக்கூறலின்  முக்கியத்துவத்தைமீள வலியுறுத்தியுள்ளதுடன் பொதுமன்னிப்பு போன்ற தீர்மானங்களை ஒரு தனிநபர் தனது விருப்பங்களிற்கு ஏற்ப எடுக்க முடியாது என்பதை வலியுறுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் அயராது உழைத்து இந்த விவகாரம் முழுவதும் நேர்மையைக் கடைப்பிடித்த நீதித்துறைக்கு நாங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் கொலையாளியை விரைவாக கண்டுபிடித்து சிறையில் அடைக்க வேண்டியது அவசியம். ; நீதி உண்மையாக வழங்கப்படுவதை உறுதி செய்வதில் இது முக்கியமானது.என அவர் தெரிவித்துள்ளார். 

ஒப்படைப்பு ஒப்பந்தங்களில் உள்ள பலவீனங்களை பயன்படுத்தி  நீதியைப் பின்தொடர்வதைத் தடுக்க அனுமதிக்க முடியாது. கொலையாளி எங்கு மறைந்திருந்தாலும் அவர் அவரது செயலுக்காக பொறுப்புகூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும் -இதில் எந்த பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை.என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/185511

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரோயல் பார்க் கொலையாளி சிங்கப்பூரில் இருக்கலாம் என சந்தேகம் - நாட்டிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்

Published By: RAJEEBAN   07 JUN, 2024 | 12:32 PM

image
 

நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து ரோயல்பார்க் கொலையாளி டொன்சமந்த ஜூட் அன்டனி ஜெயமகவை வெளிநாட்டிலிருந்து  நாட்டிற்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.

ரோயல்பார்க் கொலையாளி சிங்கப்பூரில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையில் நாடு கடத்தல் தொடர்பான உடன்படிக்கைகள் எதுவும் இல்லை என்பதால்  குற்றவாளியை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளில் பின்னடைவு ஏற்படலாம்.

இருநாடுகளுக்கும் இடையிலான இணக்கப்பாட்டின் அடிப்படையில் மாத்திரமே நாடு கடத்தல் தொடர்பான உடன்படிக்கை சாத்தியமாகும் ,இலங்கை வேறு பல நாடுகளுடன் இவ்வாறான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.

ரோயல்பார்க் கொலையாளி ஜெயமஹ 2019 நவம்பர் 15ம் திகதி இலங்கையிலிருந்து வெளியேறினார் என தெரிவித்துள்ள பொலிஸார் ஜனாதிபதி பொதுமன்னிப்பு நவம்பர் 13ம் திகதி வழங்கப்பட்டது அவர் உடனடியாக கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டார் எனவும் தெரிவித்துள்ளனர்.

அவர் தற்போது வெளிநாட்டில் அனேகமாக சிங்கப்பூரில்  இருக்கலாம் என தெரிவித்துள்ள பொலிஸார் குற்றவாளியை   இலங்கைக்கு கொண்டுவருவதற்காக சர்வதேச உதவியை பெறமுயல்வதாக தெரிவித்துள்ளனர்.

அவர் இலங்கையிலிருந்து உரிய முறைப்படி வெளியேறியுள்ளதால் அவர் தற்போது தேடப்படும் கைதி என தெரிவித்து அவரைநாடு கடத்த உதவுமாறு வேண்டுகோள் விடுக்க முடியும் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/185521

  • கருத்துக்கள உறவுகள்

GPcckr2aUAAnLLp?format=jpg&name=small

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.