Jump to content

கடவுளை நம்பாதவர்கள் பிரார்த்தனை செய்தால் என்ன கிடைக்கும்? விஞ்ஞானிகள் கூறுவது என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பிரார்த்தனை செய்யும் போது அவரது மூளைக்குள் என்ன நடக்கிறது

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஒருவர் பிரார்த்தனை செய்யும் போது அவரது மூளைக்குள் என்ன நடக்கிறது என்பது குறித்து பல ஆய்வுகள் நடத்தப்பட்டன. கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரேடாக்சியான்
  • பதவி, பிபிசி நியூஸ் முண்டோ
  • 9 மணி நேரங்களுக்கு முன்னர்

நார்னியாவின் இலக்கியப் பிரபஞ்சத்தை உருவாக்கிய, புகழ்பெற்ற பிரிட்டிஷ் எழுத்தாளர் சி.எஸ். லூயி, 'பிரார்த்தனை என்றால் என்ன’ என்பதை நன்கு விவரிக்கும் ஒரு சொற்றொடரையும் உருவாக்கியதாக சொல்லப்படுகிறது.

“எனக்கு வேறு வழி இல்லாததால் நான் பிரார்த்தனை செய்கிறேன். என் இதயம் நொறுங்கியிருப்பதால், நான் பிரார்த்தனை செய்கிறேன். நான் விழித்திருந்தாலும் அல்லது தூங்கினாலும், அவ்வாறு செய்ய வேண்டிய அவசிய உணர்வு என்னிடமிருந்து பாய்வதால் நான் பிரார்த்தனை செய்கிறேன். அது (பிரார்த்தனை) கடவுளை எந்த வகையிலும் மாற்றாது. ஆனால் என்னை மாற்றுகிறது," என்று அவர் ஒரு முறை கூறினார்.

பிபிசியின் அறிவியல் நிகழ்ச்சியான Crowdscience-இன் ரசிகையான ஹிலரி, பிரார்த்தனை செய்யும்போதும் நடைப்பயிற்சிக்குச் செல்லும்போதும் இதேபோன்ற ஒன்றை உணர்வதாகக் கூறுகிறார். "நான் பிரார்த்தனை செய்யும்போது, கடவுளுடன் ஒரு தொடர்பை உணர்கிறேன். ஆனால் பிரார்த்தனையில் பல வகைகள் உள்ளன. அது ஒரு கணத்தின் அமைதியில் நிகழலாம், அது வார்த்தைகளற்றதாக இருக்கலாம். சில சமயங்களில் அது தேவாலயத்தில் ஒரு குழு பிரார்த்தனையாக இருக்கலாம்,” என்று அவர் தெரிவித்தார்.

ஆனால் சமீபகாலமாக அவர் பிரார்த்தனை செய்ய உட்காரும்போது ஒரு கேள்வி அவர் மனதில் எழுகிறது: “பிரார்த்தனை, மூளை மற்றும் மனநலம் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது?

 
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய  இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிரார்த்தனை செய்பவர்களின் மூளையில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள நிபுணர்களுடன் ஆலோசனை செய்யும் பணியை க்ரவுட்சயின்ஸ் குழு மேற்கொண்டது. இந்த வழிமுறை மத நம்பிக்கைகளுடன் தொடர்புடையதா அல்லது ஒருவேளை அது தியானம் செய்பவர்களிடமோ அல்லது ஆக்கப்பூர்வமான வாழ்க்கையை நடத்துபவர்களிடமோ உள்ளதா என்பதை கண்டறியவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

பிரார்த்தனையின் போது மூளையில் நடப்பது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஒரு செயலில் ஆழ்ந்த கவனம் செலுத்தும்போது மூளையின் முன் மடல் செயல்பட முனைகிறது

பிரார்த்தனையின் போது மூளையில் நடப்பது என்ன?

நாம் பிரார்த்தனை செய்யத் தொடங்கும்போது மூளையின் முன்மடல் (ஃப்ரண்டல் லோப்) ஒளிர்கிறது. ஆனால் ஆழ்ந்த பிரார்த்தனையில் அதன் செயல்பாடு மீண்டும் குறைகிறது.

நரம்பியல் விஞ்ஞானி ஆண்ட்ரூ நியூபெர்க், அமெரிக்காவில் உள்ள தாமஸ் ஜெஃபர்சன் பல்கலைக்கழகத்தில் உள்ள மார்கஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டகிரேடிவ் மெடிசனின் ஆராய்ச்சி இயக்குநர் ஆவார். தனது நோயாளிகளின் மனநலனில், பிரார்த்தனை மற்றும் பிற மத நடைமுறைகளின் விளைவுகளை ஆய்வு செய்வதில் அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.

பிரார்த்தனை செய்யும் நபரின் மூளையின் பகுதிகள் செயல்பட துவங்குவதை எம்ஆர்ஐ மூலம் அவரது குழுவால் பார்க்க முடிந்தது.

"பிரார்த்தனை செய்வதற்கான ஒரு பொதுவான வழி ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட ஜெப வரிகளை மீண்டும் மீண்டும் சொல்வதாகும். மேலும் இதுபோன்ற செயலை ஒருவர் மேற்கொள்ளும்போது மூளையின் முன்பகுதி அதாவது ஃப்ரண்டல் லோப் செயல்பட ஆரம்பிக்கிறது," என்று ஆண்ட்ரூ நியூபெர்க் பிபிசியிடம் விளக்கினார்.

இது ஆச்சரியமான விஷயம் அல்ல. ஏனென்றால் நாம் ஒரு செயலில் ஆழ்ந்த கவனம் செலுத்தும்போது மூளையின் முன் மடல் செயல்பட முனைகிறது. மக்கள் 'ஆழமான பிரார்த்தனை' என்று உணரும்போது என்ன நடக்கிறது என்பதே நியூபெர்க்கை ஆச்சரியப்படுத்தும் விஷயம்.

"பிரார்த்தனையின் ஆழம் அதிகரிப்பதாக ஒரு நபர் உணரும்போது முன் மடலின் செயல்பாடு உண்மையில் குறைகிறது. இந்த அனுபவத்தை தாங்கள் உருவாக்கவில்லை, வெளியில் இருந்து இந்த அனுபவம் தங்களுக்குள் நிகழ்கிறது என்று தனிநபர்கள் உணரும்போது இது ஏற்படுகிறது,” என்று ஆராய்ச்சியாளர் கூறினார்.

ஆழ்ந்த பிரார்த்தனை, மூளையின் பின்பகுதியில் உள்ள பரைட்டல் லோபில் செயல்பாடு குறைவதற்கு வழிவகுக்கிறது என்று நியூபெர்க் கண்டறிந்துள்ளார். இந்த பகுதி உடலில் இருந்து உணர்ச்சித் தகவலைப் பெறுகிறது மற்றும் அதன் காட்சி பிரதிநிதித்துவத்தை உருவாக்குகிறது.

பரைட்டல் லோபில் செயல்பாடு குறைவது, ஆழ்ந்த பிரார்த்தனை செய்பவர்களால் வெளிப்படுத்தப்படும் 'ஆழ்நிலை உணர்வுகளை’ விளக்குகிறது என்கிறார் நியூபெர்க்.

"இந்த பகுதியில் செயல்பாடு குறையும்போது, நாம் தனிப்பட்ட சுய உணர்வை இழக்கிறோம். மேலும் அந்த ஒற்றுமை, இணைப்பு உணர்வைப் பெறுகிறோம்" என்று அவர் குறிப்பிட்டார்.

 

'மத நம்பிக்கை'

'கடவுளுடனான உறவு'

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிரார்த்தனை செய்யும்போது தங்களைத் தாண்டிய ஏதோ ஒன்றின் அங்கமாக தாங்கள் இருப்பதாக பலரும் உணர்கிறார்கள். தியானம் செய்பவர்களும் இதையே உணர்கின்றனர்.

ஹிலரிக்கு நியூபெர்க் அளிக்கும் விளக்கம் அர்த்தமுள்ளதாக இருக்கிறது. தான் பிரார்த்தனை செய்யும்போது என்ன உணர்வுகள் ஏற்படுகின்றன என்பதுடன் அவர் அதை தொடர்புபடுத்துகிறார்.

நான் ஆழமான பிரார்த்தனையில் இருக்கும்போது, தனிப்பட்ட சுய உணர்வை இழப்பது அல்லது அந்த உணர்வை, கடவுளுடனான தொடர்பு என்று நான் கருதுகிறேன்,” என்று அவர் விளக்கினார்.

ஆனால் பிரார்த்தனை என்பது ஒரு தனிப்பட்ட அனுபவம். ஹிலரிக்கு அது ஏதேனும் அமைதியான இடத்தில் உட்காரும்போது அல்லது இயற்கை சூழலில் நடக்கும்போது அது ஏற்படுமானால், மற்றவர்களுக்கு அது கடவுளுடன் உரத்த உரையாடலாக இருக்கலாம். முழுமையான மௌனம் அல்லது ஜெப வரிகளை மீண்டும் மீண்டும் சொல்வதால் இது நிகழலாம்.

எந்த மத அடிப்படையும் இல்லாமல் செய்யப்படும் பிரார்த்தனை போன்ற நடைமுறைகள், ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்கள் உணரும் அதே விளைவுகளை ஏற்படுத்த முடியுமா?

நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களுடன் பணிபுரிந்துள்ள, தியானம் மற்றும் ஒருமுகப்படுத்தல் நடைமுறைகளில் நிபுணரான டெஸ்ஸா வாட், ’நிகழ்காலம் மற்றும் நாம் அனுபவிக்கும் உணர்வுகளில் கவனம் செலுத்துவதன் மூலம் இந்த நிலையை அடைய முடியும்’ என்று குறிப்பிடுகிறார்.

'கடவுளுடனான உறவு'

பட மூலாதாரம்,GETTY IMAGES

"பிரார்த்தனை மற்றும் ஒருமுகப்படுத்தல் ஆகிய இரண்டும் ஒரு நபரை அமைதிப்படுத்த உதவுகின்றன என்று நான் நினைக்கிறேன். இதன் காரணமாக அவர்களுக்கு தங்களுக்கென அதிக நேரம் கிடைக்கும் மற்றும் பாராசிம்பேடிக் நரம்பு மண்டலத்தையும் அவர்கள் செயல்படுத்துகிறார்கள்" என்று வாட் விளக்குகிறார்.

நரம்பு மண்டலம் இரண்டு தனித்துவமான தன்னியக்க அமைப்புகளால் ஆனது. அவை உடலின் பெரும்பாலான தானியங்கி பதில்வினைகளை கட்டுப்படுத்துகின்றன.

ஓர் அச்சுறுத்தலை எதிர்கொள்ள உடலில் இருந்து விரைவான எதிர்வினைகள் தேவைப்படுகின்றன. அதை ஓர் அமைப்பு கட்டுப்படுத்துகிறது. மறுபுறம், உடலின் 'ஓய்வு மற்றும் செரிமானம்' தொடர்பான பணிகள் பாராசிம்பேடிக் அமைப்பால் மேற்கொள்ளப்படுகின்றன.

"இதன் பொருள் என்னவென்றால், ஆழ்ந்து பயிற்சி செய்வதன் மூலம் பதில் வினைகளை அமைதிப்படுத்த நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள். உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் திறமையுள்ளவர்களாக ஆகிறீர்கள்" என்று வாட் தெரிவித்தார்.

 
'கடவுளுடனான உறவு'

பட மூலாதாரம்,GETTY IMAGES

'கடவுளுடனான உறவு'

நமது பராமரிப்பாளர்களுடனான உறவு, கடவுளுடன் நாம் வைத்திருக்கும் (அல்லது இல்லாத) உறவுகள் உட்பட பிற உறவுகளை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சில வல்லுநர்கள் கூறுகின்றனர்.

வலுவான மதச் சூழலில் வளரும் சிலருக்கு கடவுளுடனான உறவு, அவர்களைச் சுற்றியுள்ள மற்றவர்களுடன் அவர்கள் வைத்திருக்கும் உணர்ச்சிபூர்வமான உறவுகளைப் பிரதிபலிக்கும் என்று கலிஃபோர்னியாவில் உள்ள வெஸ்ட்மாண்ட் கல்லூரியின் சமூகவியலாளர் பிளேக் விக்டர் கென்ட் பிபிசியிடம் கூறினார்.

"பிரார்த்தனை பலனளிக்கும். ஆனால் நீங்கள் வெவ்வேறு காரணிகளை குறிப்பாக நீங்கள் உணர்ச்சிப்பூர்வமாக கடவுளுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறீர்கள் போன்றவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்." என்கிறார்.

பிளேக் முன்பு ஒரு போதகராக இருந்தார். மக்களின் வாழ்க்கையில் மதம் ஏற்படுத்தும் தாக்கத்தை இப்போது அவர் ஆய்வு செய்து வருகிறார்.

"மற்றவர்களை நம்புவதில் சிரமம் உள்ள சூழலில் இருந்து நீங்கள் வந்திருந்தால் பிரார்த்தனை செய்வது உங்களுக்கு கடினமாக இருக்கும்," என்று அவர் குறிப்பிட்டார்.

பிளேக் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள, உளவியலில் உள்ள இணைப்புக் கோட்பாட்டைப் பற்றி நாம் பேச வேண்டும்: மனிதர்கள் தங்கள் ஆரம்பகால பராமரிப்பாளர்களுடன் (பெற்றோர் உள்பட) வைத்திருக்கும் உறவு எதிர்காலத்தில் அவர்கள் கொண்டிருக்கும் உறவுகளின் வகையை வரையறுக்கிறது.

நீங்கள் ஒரு குழந்தையாக இருக்கும் போது நம்பகமான, நல்ல கவனிப்பை அளிக்கும் பராமரிப்பாளர் இருந்திருந்தால், நீங்கள் வயது வந்தவராக ஆகும்போது 'உறுதியான' உறவுப் பிணைப்புகளை உருவாக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் சீரற்ற முறையிலான பராமரிப்பாளர் இருந்திருந்தால், நீங்கள் வளரும்போது நம்பிக்கையை வளர்ப்பது கடினம்.

நம்பிக்கை என்பது நிச்சயமாக மதநம்பிக்கைக்கு முக்கியமானது. எனவே கடவுளுடன் நெருக்கமான உறவை உருவாக்குவது சிலருக்கு மிகவும் கடினமாக இருக்கும். மேலும் அவர்கள் மிகவும் அதிகமான மதச்சூழலில் வாழ்ந்திருந்தால், அதை வளர்த்துக் கொள்ள முடியாத குற்ற உணர்ச்சியை அவர்கள் உணரலாம்.

'கடவுளுடனான உறவு'

பட மூலாதாரம்,GETTY IMAGES

"என்னைப் பொறுத்தவரை பிரார்த்தனை என்பது வெறுமையாகவும், ஆபத்தானதாகவும், நிச்சயமற்றதாகவும் இருப்பதாக உணர்கிறேன்" என்று பிளேக் கூறுகிறார்.

பிளேக் தன்னை 'கவலையுடன் கூடிய உறவுகளை’ ஏற்படுத்திக்கொண்ட நபராக விவரிக்கிறார். தான் பிரார்த்தனை செய்யும் போது ஏதோ சரியாகச் செய்யவில்லை என்ற உணர்வு போதகராக இருந்தபோது அவருக்கு ஏற்பட்டது.

"மதச்சபைகளில் உள்ள பலருக்கு இது நடக்கும் என்று நான் நினைக்கிறேன். அது அவர்கள் ஏதோ தவறு செய்கிறார்கள் அல்லது கடவுள் அவர்கள் மீது வருத்தமாக இருப்பதாக உணர வைக்கிறது. அவர்கள் பிரார்த்தனை செய்யும்போது அவர்களைச் சுற்றி உள்ளவர்களுக்கு கிடைக்கும் பலன்கள் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று அவர்கள் வருத்தமடைகிறார்கள்.” என்கிறார் பிளேக்.

கடவுளுடன் உறுதியற்ற உறவை வைத்திருப்பது தீங்கு விளைவிக்கும் என்றாலும் அந்த பாதுகாப்பின்மை எங்கிருந்து வருகிறது என்பதைப் புரிந்துகொள்வது அதை கடந்துவர உதவும் என்று பிளேக் கூறுகிறார்.

கூடுதலாக உளவியல் சிகிச்சை மூலம் உறவுகளின் நிலையை மாற்றியமைக்க முடியும். இது ஒட்டுமொத்த மன ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

 

'படைப்பாற்றல், பலருக்கு ஆழ்ந்த ஆன்மீக பயிற்சியாக இருக்கலாம்'

படைப்பாற்றல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இசையானது மூளையின் முன் மடலில் செயல்பாட்டைக் குறைக்கிறது என்பதை சில ஆய்வுகள் காட்டுகின்றன.

இசையானது மூளையின் முன் மடலில் செயல்பாட்டைக் குறைக்கிறது என்பதை சில ஆய்வுகள் காட்டுகின்றன.

ஆழமான பிரார்த்தனையைப் போலவே நம்பமுடியாத அளவிற்கு ஒத்ததாக இருக்கும் வேறு வகையான தருணங்கள் இருப்பதை எம்ஆர்ஐ ஸ்கேன்களில் உள்ள மூளையின் படங்கள் வெளிப்படுத்தியதாக நரம்பியல் விஞ்ஞானி ஆண்ட்ரூ நியூபெர்க் பிபிசியிடம் கூறினார்.

"மிகவும் பயிற்சி பெற்ற இசைக்கலைஞர்கள் இசையின் ஆழத்திற்குள் செல்லும்போது தங்கள் மூளையின் முன் மடல்களின் செயல்பாட்டை மெதுவாக்குகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டும் மிகவும் சுவாரசியமான ஆய்வுகள் உள்ளன. மேலும் சிலர் கடவுள் தன்னிடம் வருகிறார் என்று நினைக்கும் அதே வழியில் இசை அவர்களிடம் வருகிறது,” என்றார் அவர்.

"தெய்வ நம்பிக்கை உள்ள வாழ்க்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும், படைப்பாற்றல் என்பது பலருக்கு ஆழ்ந்த ஆன்மீக பயிற்சியாக இருக்கலாம். மேலும் அவை தொடர்புடையவை என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் மூளையில் மதத்திற்காக மட்டுமே நியமிக்கப்பட்ட பகுதி இல்லை.” என்றும் அவர் கூறுகிறார்.

கடவுளுடன் பேசுவது அல்லது பீத்தோவனின் ஒன்பதாவது சிம்ஃபனியைக் கேட்பது போன்ற ஆழ்நிலை அனுபவங்கள் மூலம் நமது மூளையின் உணர்ச்சி மையங்கள் தூண்டப்படுகின்றன என்று நியூபெர்க் விளக்குகிறார்.

"மத மற்றும் ஆன்மீக நடைமுறைகளுடன் இது உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் காலம் காலமாக அவற்றை பின்பற்றுவதையும், அரசியல் மாற்றங்கள் அல்லது கலாச்சார மரபுகளுக்கு அப்பால் அவை எவ்வாறு தொடர்கின்றன என்பதையும் நீங்கள் கருத்தில் கொண்டால் இதை புரிந்துகொள்ள முடியும்.”

தனது அனுபவங்களையும், அவை ஒன்றுக்கொன்று எவ்வாறு தொடர்புள்ளதாக இருக்கிறது என்பதையும் நிபுணர்களின் கருத்துக்களைக் கேட்டபின் தன்னால் நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது என்று ஹிலரி பிபிசியிடம் தெரிவித்தார்.

"இந்த வெவ்வேறு செயல்பாடுகள் மூலம் எனக்கு ஒரே மாதிரியான ஆனால் வித்தியாசமான அனுபவம் இருப்பதை என்னால் அடையாளம் காண முடிகிறது. நான் பிரார்த்தனை செய்யும்போது எனக்கு கடவுளுடன் தொடர்பு இருக்கிறது. ஆனால் நான் பாடுகையில் அதே போன்ற உணர்வை அனுபவிக்கும்போது அது இசையுடனான தொடர்பு என்பதை புரிந்துகொண்டேன்.”

"நான் கடவுளிடம் பேசும்போதும், குழுவாகச் சேர்ந்து பாடும்போதும் அது ஒரு ஆன்மீக உணர்வாக இருக்கிறது என்று என்னால் சொல்ல முடியும்," என்கிறார் ஹிலரி.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:
“எனக்கு வேறு வழி இல்லாததால் நான் பிரார்த்தனை செய்கிறேன். என் இதயம் நொறுங்கியிருப்பதால், நான் பிரார்த்தனை செய்கிறேன். நான் விழித்திருந்தாலும் அல்லது தூங்கினாலும், அவ்வாறு செய்ய வேண்டிய அவசிய உணர்வு என்னிடமிருந்து பாய்வதால் நான் பிரார்த்தனை செய்கிறேன். அது (பிரார்த்தனை) கடவுளை எந்த வகையிலும் மாற்றாது. ஆனால் என்னை மாற்றுகிறது," என்று அவர் ஒரு முறை கூறினார்.

 

நம் பிரார்த்தனைகள் எல்லாம் போய்ச் சேருமிடம் என்று ஒன்று இருக்குதா என்று கூட தெரியவில்லை. ஆனாலும், பல நேரங்களில் வேறு வழி எதுவும் இருப்பதில்லை......... இந்தக் கட்டுரையில் சொல்லியிருப்பது போலவே. 

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பன்றிக்கு எப்பொழுதும் அதே நினைப்பு தான் என்று எமது ஊரில் சொல்வது சரி என்று நீங்கள் அடிக்கடி நிரூபிக்கிறீர்கள். 
    • உங்களைப் போன்று என்னையும் உங்கள் முட்டாள்கள் சங்கத்தில் உறுப்பினராக சேர்த்துக்கொள்ள முயன்றமைக்கு  நன்றி. 😁
    • பின்னர் எதுக்காக அவரை தேசியத் தலைவர் என்று பட்டியல் இடுகிறீர்கள்??? உங்கள் பட்டியல்ப்படி புலம்பெயர் தேச முட்டாளா நீங்கள்??
    • திம்புப் பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறியதன் காரணத்தை மக்களுக்கு விளக்கிய தலைவர் பிரபாகரன் தலைவர் பிரபாகரன் - 1987 தீர்வொன்று நோக்கிப் பயணிக்கலாம் என்கிற நம்பிக்கையினை தந்த திம்புப் பேச்சுவார்த்தைகள் முற்றான தோல்வியைத் தழுவியிருந்தன. எதிர்பார்த்தது போலவே ஜெயவர்த்தன அரசாங்கம் கடுமையான பிரச்சாரத்தில் இறங்கியது. பேச்சுவார்த்தைகளின் தோல்விக்கான முழுப்பொறுப்பினையும் தமிழ்ப் போராளிகளின் மீது அது சுமத்தியது. தமிழர்களை உறுதியற்றவர்கள், விட்டுக் கொடுக்காதவர்கள் என்று அது குற்றஞ்சுமத்தியது. பேச்சுக்கள் தோல்வியடைந்தமையினால், தனக்கு முன்னால் இருக்கும் ஒரே தெரிவு இராணுவ முறையில் தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதுதான் என்று அது கொக்கரித்தது. இதனையடுத்து, அதுலத் முதிலியினால் "பயங்கரவாதிகளின் இடங்கள்" என்று அழைக்கப்பட்டு வந்த தமிழர்களின் எல்லையோரக் கிராமங்களில் இருந்து தமிழர்களை முற்றாகத் துடைத்தழிக்கும் செயற்பாடுகளில் இராணுவம் இறங்கியது. இலங்கையரசாங்கத்தின் பிரச்சாரத்திற்கு மிகவும் தீர்க்கமான பதிலை பிரபாகரன் வழங்கினார். பேச்சுவார்த்தைகளில் இருந்து தாம் வெளிநடப்புச் செய்ததன் காரணத்தை விளக்கி தமிழில் அறிக்கையொன்றினை அவர் வெளியிட்டார். அவரது அறிக்கை வருமாறு. "இலங்கையில் சமாதானத்தைக் கொண்டுவருவதற்காக இதயசுத்தியுடன் முயன்ற இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தியின் முயற்சிகளுக்குத் தடையாக இருக்கக் கூடாது எனும் நோக்கத்திற்காக மட்டுமே திம்புப் பேச்சுக்களில் ஈடுபடுவது என்று நாம் முடிவெடுத்தோம். ஆனாலும், அவரின் அந்த முயற்சிகள் வெற்றிபெறப்போவதில்லை என்பதனை நாம் அறிந்தே இருந்தோம். ஏனென்றால், சர்வாதிகாரத்தனமும், அடக்குமுறையும் கொண்ட ஜெயவர்த்தனவின் அரசாங்கம் ஒருபோதுமே சமாதானத்தில் அக்கறை காட்டப்போவதில்லை என்பது எமக்கு நன்கு தெரிந்தே இருந்தது. ஆனாலும், யுத்தநிறுத்தத்தைக் கடைப்பிடித்து பேச்சுவார்த்தைகளில் பங்கெடுப்பது என்று நாம் முடிவெடுத்தோம். தமிழ் மக்கள் மீதான ஜெயவர்த்தன அரசாங்கத்தின் அடக்குமுறையினையும், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நீதியானதும் நேர்மையானதுமான தீர்வொன்றினை வழங்குவதில் அவருக்கு இருக்கும் வெறுப்பினையும் உலகிற்கும், இந்தியாவிற்கும் எடுத்துக்காட்டுவதற்கான ஒரு சந்தர்ப்பமாக இப்பேச்சுவார்த்தையினைப் பயன்படுத்துவது என்று நாம் தீர்மானித்தோம். நாம் எதிர்பார்த்தவாறே, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வாக எந்தவித அடிப்படைகளையும் முன்வைக்க ஜெயவர்த்தன அரசாங்கம் தவறியிருந்தது. விடுதலைப் போராட்ட வீரர்களான எம்மை சமாதானப் பொறிக்குள் வீழ்த்துவதன் மூலம் அடிமைகளாக்குவதே ஜெயவர்த்தனவின் திட்டம். தமிழ்ப் புலிகளான நாங்கள் ஜெயாரின் வலைக்குள் வீழ்ந்திடப்போவதில்லை. தான் ஆடும் சமாதான நாடகத்தின் மூலம் தமிழர்கள் மீது தான் கட்டவிழ்த்து விட்டிருக்கும் இனக்கொலையினை இந்தியாவினதும் சர்வதேசத்தினதும் கவனத்திலிருந்து மறைத்துவிட இலங்கை முயல்கிறது. சிங்கள இனவெறியர்களின் அழிவுத் திட்டத்தை இந்தியா உணர்ந்துகொள்ளுமா என்று நாங்கள் ஆதங்கப்படுகிறோம். முன்னாள் இந்தியப் பிரதமரான இந்திரா காந்தி, ஜெயாரின் கபடத் தனத்தையும், ஏமாற்றல் முயற்சிகளையும் நன்கு அறிந்தே இருந்தார். புதிய பிரதமரான ரஜீவ் காந்தி சமாதானத்தை விரும்புகிறார். தமிழ் மக்களின் நலனில் அவர் தனியான அக்கறை கொண்டுள்ளார். தமிழ் மக்கள் கெளரவமாகவும், பாதுகாப்புடனும் வாழ்வேண்டும் என்று அவர் விரும்புகின்றார். ரஜீவின் விருப்பங்களை தான் ஆதரிப்பதாக இலங்கை அரசாங்கம் பாசாங்கம் செய்கிறது. இந்தியாவிற்கும், தமிழீழ விடுதலை அமைப்புக்களுக்கும் இடையே பகைமையினை உருவாக்க அது முயன்று வருகிறது. இலங்கையின் சூழ்ச்சியை இந்தியா விரைவில் புரிந்துகொள்ளும் என்று நாம் நம்புகிறோம்.  சுதந்திரத் தமிழீழமே எமது ஒற்றை விருப்பாகும். அதனை எவராலும் அசைக்க முடியாது. அவ்விருப்பினை அடைவதற்காக எமது உயிரையும் விலையாகக் கொடுத்துப் போராடி வருகிறோம். தமிழ் ஈழத்தைத் தவிர வேறு எந்தத் தீர்வும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது என்று நாம் முழுமையாக நம்புகிறோம். உலகில் ஒடுக்கப்படும் மக்களின் விடுதலைப் போராட்டங்களுக்கு தனது ஆதரவினை வழ‌ங்கிவரும் இந்திய நாடு, தமிழீழ மக்களினது விடுதலைப் போராட்டத்திற்கும் தனது ஆதரவினை வழங்கவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.  எமது போராட்டத்திற்கு தமது கரங்களை நீட்டி உதவுவதற்கு இந்திய மக்களுக்குச் சற்றுக் காலம் எடுக்கலாம். அதுவரை அதற்கான ஆதரவு வேண்டி நாம் போராடிக்கொண்டிருப்போம்".
    • தந்தை செல்வா முதல் தேசியத் தலைவர் பிரபாகரன் வரை இலங்கைத் தமிழர்களுக்குச் செய்த ஆக்கப்பூர்வமான செயல்களால் ஏற்பட்ட பயன்களை உங்களால் பட்டியலிட முடியுமென்றால், சம்பந்தர்  கூட்டணியால் கிடைக்கப்பெற்ற பலன்களை  என்னாலும் பட்டியலிட முடியும். 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.