Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1-3-7.jpg?resize=650,375

மகாவன்ச வரலாற்று நூல்கள் அடங்கிய தொகுப்பு உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிப்பு.

பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் உள்ள இலங்கையின் வரலாற்றின் முக்கிய ஆதாரமான மகாவன்ச வரலாற்று நூல்கள் அடங்கிய தொகுப்பு உலக பாரம்பரியச் சின்னமாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்த விழாவுக்கு பிரதம விருந்தினராக யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசுலே (Audrey Azoulay) கலந்து கொண்டார்.

 

யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகத்தினால் மகாவன்சத்தை உலக மரபுரிமைச் சின்னமாக பிரகடனப்படுத்துவதற்கான சான்றிதழ் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் ஜி.எச்.பீரிஸிடம் கையளிக்கப்பட்டது.

அத்துடன், பல்கலைக்கழகத்துகு்கு விஜயம் செய்ததைக் குறிக்கும் வகையில் பிரதி வேந்தர் பேராசிரியர் எம்.டி.லமவன்ச, பணிப்பாளர் நாயகத்திற்கு நினைவுச் சின்னம் ஒன்றையும்  வழங்கி வைத்தார்.

https://athavannews.com/2024/1392719

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

மகாவன்ச வரலாற்று நூல்கள் அடங்கிய தொகுப்பு உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிப்பு.

பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் உள்ள இலங்கையின் வரலாற்றின் முக்கிய ஆதாரமான மகாவன்ச வரலாற்று நூல்கள் அடங்கிய தொகுப்பு உலக பாரம்பரியச் சின்னமாக நேற்று அறிவிக்கப்பட்டது.

நூல்கள் இல்லை, அந்த நாளில் எழுதப்பட்ட ஓலைச் சுவடிகள் என்று தான் ஆங்கிலச் செய்திகளில் இருக்கின்றது. ஓலைச் சுவடிகளின் படமும் போட்டிருந்தார்கள். 

இந்த அறிவிப்பை வெளியிட இதை விட பொருத்தமான ஒரு நேரத்தை யுனெஸ்கோ தேடிக் கண்டு பிடித்திருக்க முடியாது போல.........🤣.  

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

நூல்கள் இல்லை, அந்த நாளில் எழுதப்பட்ட ஓலைச் சுவடிகள் என்று தான் ஆங்கிலச் செய்திகளில் இருக்கின்றது. ஓலைச் சுவடிகளின் படமும் போட்டிருந்தார்கள். 

 ஓலைச் சுவடிகளில் உள்ள ஓட்டைகளை நூல் கொண்டு இணைப்பதனால் ‘நூல்’ என்றும் குறிப்பிடுவார்கள் என்று எங்கேயோ வாசித்திருக்கிறேன்.

அடுத்தவன் சேர்த்து வைத்ததெல்லாவற்றையும் எரித்து நாசம் செய்வார்கள். தங்களுடையதை பாரம்பரியமானது என்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kavi arunasalam said:

 ஓலைச் சுவடிகளில் உள்ள ஓட்டைகளை நூல் கொண்டு இணைப்பதனால் ‘நூல்’ என்றும் குறிப்பிடுவார்கள் என்று எங்கேயோ வாசித்திருக்கிறேன்.

அடுத்தவன் சேர்த்து வைத்ததெல்லாவற்றையும் எரித்து நாசம் செய்வார்கள். தங்களுடையதை பாரம்பரியமானது என்பார்கள்.

👍.....

சரியாகவே இருக்கும் என்று தான் நினைக்கின்றேன். புத்தகங்களை அதனால் தான் அப்படியே நூல்கள் என்று அச்சுத் தொழில்நுட்பம் வந்த பின்பும் சொல்லியிருக்கின்றார்கள் போல.........👍.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.