Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
27 JUL, 2024 | 08:35 PM
image

(நா.தனுஜா)

தமிழ் மக்களுக்கான சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை வழங்குவது குறித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு உத்தேசித்திருக்கும் ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பேசுவதற்குத் தாமும் தயாராக இருப்பதாக தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். 

நிறைவேற்றதிகாரமுடைய 9 ஆவது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறும் எனவும், ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி ஜனாதிபதித்தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யமுடியும் எனவும் நேற்று முன்தினம் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

அதன்படி இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் வட, கிழக்கு தமிழ்மக்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது குறித்த பேச்சுவார்த்தைகள் வலுப்பெற்று, அதனை முன்னிறுத்தி சில தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு இடையிலான இணக்கப்பாட்டு உடன்படிக்கை ஒன்றும் அண்மையில் கைச்சாத்திடப்பட்டிருக்கின்றது.

அதன்பிரகாரம் பொதுவேட்பாளராக யாரைக் களமிறக்குவது என ஆராயப்பட்டாலும், இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடவுள்ள ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ, அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட பிரதான வேட்பாளர்களுடன் தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்கும், அதற்கமைய அவர்களை ஆதரிப்பதற்கும் தயாராக இருக்கின்றீர்களா? என வினவியபோதே தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு பதிலளித்தனர்.

அதற்கமைய ஜனாதிபதித்தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்கள் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தி, அவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யக்கூடியவாறான சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை வழங்குவதற்கு முன்வருவார்களாயின், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தயாராக இருப்பதாக புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். அதன் முதற்கட்டமாக மாகாணசபை முறைமை உள்ளடங்கலாக அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் தெரிவிக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இருப்பினும் கடந்தகாலங்களில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி, அதில் எவ்வித பயனும் கிட்டாததன் காரணமாகவே தற்போது தமிழ் பொதுவேட்பாளரைக் களமிறக்குவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய ரெலோவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், எனவே அதற்குரிய நடவடிக்கைகளைத் தாம் முன்னெடுத்துவருவதாகக் குறிப்பிட்டார்.

'தமிழ்மக்களுக்கான சமஷ்டி அடிப்படையிலான தீர்வு குறித்துப் பேசுவதற்கு வேட்பாளர்கள் முன்வருவார்கள் எனில், நாம் அதற்கு இடமளிப்போம். இருப்பினும் இப்பேச்சுவார்த்தைகள் வெறுமனே வாய்வழி வழங்கப்படும் உத்தரவாதங்களாக மாத்திரம் இருக்கக்கூடாது. மாறாக முன்மொழியும் தீர்வு எழுத்துமூல உடன்படிக்கையாக அமையவேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை இதுகுறித்துத் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன், 'ஜனாதிபதி வேட்பாளர்கள் எம்முடன் பேசுவதாக இருந்தால், எப்படியும் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தே பேசுவார்கள். இருப்பினும் 13 ஆவது திருத்தத்தினால் எவ்வித பயனுமில்லை' எனக் கூறினார். ஆனால் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால்சென்று, சமஷ்டி அடிப்படையிலான தீர்வை வழங்குவது குறித்து அவர்கள் பேசத்தயாராக இருந்தால் தாம் பேச்சுவார்த்தைக்கு செல்வோம் எனவும், அன்றேல் தமிழ் பொதுவேட்பாளரைக் களமிறக்குவதை முன்னிறுத்தி நடவடிக்கை எடுப்போம் எனவும் சி.வி.விக்கினேஸ்வரன் விளக்கமளித்தார்.

மேலும் பொதுவேட்பாளர் தொடர்பான இணக்கப்பாட்டு உடன்படிக்கையில் கையெழுத்திடாத போதிலும், பொதுவேட்பாளரைக் களமிறக்குவதற்குத் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், இணைந்த வட, கிழக்கில் தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையுடன்கூடிய சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை வழங்க முன்வரும் வேட்பாளர்களுடன் பேசத்தயார் என்றார். 

https://www.virakesari.lk/article/189546

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.