Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்ஃப்ளூவன்ஸா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதனால், கொவிட் -19 தொற்றின் போது கடைப்பிடிக்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்கள் மத்தியில் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்து காணப்படுவதாக குழந்தை நல மருத்துவ ஆலோசகர் வைத்தியர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் முகக்கவசங்களை அணிய வேண்டும் எனவும் கை சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் குறிப்பாக பொது போக்குவரத்து மற்றும் சமூக கூட்டங்களின் போது சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

மேலும் பாடசாலைகள், குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களில் இந்த வைரஸ் பரவுவதற்கான சூழ்நிலைகள் அதிகமாக காணப்படுவதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் உடல்நிலை தொடர்பில் எப்போதும் அவதானமாக இருக்குமாறும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு ஏதேனும் நோய் அறிகுறிகள் தென்பட்டால் அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதை தவிர்க்குமாறும் வைத்தியர் பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/307059

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான்கு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிப்பவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

சிறுவர்கள் மத்தியில் இன்புளுவன்சா நோய் அறிகுறிகள் மற்றும் வைரஸ் காய்ச்சல் தொற்று அதிகரித்துள்ளமையினால் குழந்தைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார்.

03 அல்லது 04 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக இரத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்றும் வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் வாந்தி தொடர்ந்தால், வைரஸ் தடுப்பு மருந்துகள் வழங்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நான்கு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிப்பவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் | Blood Test If Fever Persists For More Than 04 Days

வைரஸ் நோய்களின் அறிகுறிகள்

இந்த வைரஸ் நோய்களின் அறிகுறிகளாக தலைவலி, இருமல், சளி, தும்மல், உடல்வலி ஆகியவற்றுடன் கூடிய காய்ச்சல் இருக்கும் என்றும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.

இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், அறிகுறி உள்ள குழந்தைகளை வீட்டிலேயே தங்க வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், குழந்தைகளுக்கு இயற்கையான திரவ உணவு மற்றும் சரியான அளவு பாரசிட்டமால் மாத்திரைகளை வழங்குமாறும் வைத்தியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நான்கு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிப்பவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் | Blood Test If Fever Persists For More Than 04 Days

02 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள், நாற்பட்ட சுவாச நோய்கள் உள்ளவர்கள், நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த வைரஸ் தீவிரமாக பரவும் தன்மை கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே 03 அல்லது 04 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால்  உடனbahடிக இரத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது என வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.