Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 7    27 AUG, 2024 | 02:23 PM

image

கலாநிதி ஜெகான் பெரேரா

பொருளாதார நிலைவரம்,  பின்பற்றவேண்டிய பொருளாதார அபிவிருத்திப் பாதை மற்றும் தற்போதைய தருணத்தில் நாட்டுக்கு தலைமை தாங்கி வழிநடத்துவதற்கு பொருத்தமான தலைவர் யார் என்ற விடயங்களே இன்று பெருமளவுக்கு பேசப்படுகின்றன. ஆனால், நாடடின் பொருளாதாரப் பிரச்சினைக்கும் ஏனைய பிரச்சினைகளுக்கும் பங்களிப்புச் செய்ததும் தீர்வு காண்பதற்கு சிக்கலானதாக இருப்பதுமான இன்னொரு முக்கிய பிரச்சினை இந்த பேச்சுக்களுக்குள் விரைவில் ஊடுருவப் போகிறது.

ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்கள் முழுவீச்சில் முன்னெடுக்கப்படுகின்ற அதேநேரம் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரும் விரைவில் தொடங்கப்போகிறது. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களுக்கு இசைவான முறையில் இலங்கை செயற்படுகிறதா இல்லையா என்பது தொடர்பான பிரச்சினை 2009 ஆண்டில் இருந்து கிரமமாக ஆராய்வுக்கு வந்துகொண்டிருக்கிறது. 

இந்த கூட்டத்தொடரிலும் அந்த பிரச்சினை ஆராயப்படும். அந்த தீர்மானங்கள் கடந்தகால மனித உரிமை மீறல்களை இலங்கை அரசாங்கங்கள் ஒரு ஏற்புடைய முறையில் கையாளவில்லை என்ற சர்வதேச சமூகத்தின் மதிப்பீட்டின் அடிம்படையில் அமைந்தவை.

இலங்கை நிலைவரம் தொடர்பாக எடுத்திருக்கும் நிலைப்பாட்டில் சர்வதேச சமூகம் தற்போதைய தறுவாயில் ஏதாவது ஒரு வகையில் கணிசமான மாற்றத்தை செய்வதில் நாட்டம் காட்டுவதற்கான சாத்தியமில்லை. இலங்கை  செல்ல வேண்டிய புதிய திசைமார்க்கத்தை தீர்மானிக்கக்கூடிய முக்கியமான தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதுவரையில் நாடு பயணித்துக் கொண்டிருக்கும் திசைமார்க்கத்தை விடவும் சிறப்பானதாக புதிய பாதை இருக்கும் என்று நம்பப்படுகிறது. 

அதனால் செப்டெம்பரில் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் முடிவுகள் இலங்கைக்கென்று நிர்ணயிக்கப்படும் இலக்குகளை  நிறைவேற்றுவதற்கு கூடுதலான கால அவகாசத்தை வழங்கவது பெரும்பாலும் சாத்தியம். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸதானிகரின் அண்மைய அறிக்கை இலங்கைக்கு சாதகமானதாக இருக்கவில்லை. இலங்கை பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கிறது என்பதும் அதுவரை நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் மீதான ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பு தொடரும் என்பதுமே அந்த அறிக்கை மூலமான செய்தி.

"பாதிக்கப்பட்டவர்களின் துன்பங்களை ஒப்புக்கொள்வதற்கும் முழு மனித உரிமை மீறல்களையும் செய்ததில் இராணுவம் மற்றும் ஏனைய பாதுகாப்புப் படைகளின் பாத்திரத்தை ஏற்றுக்கொள்வதற்கும் கடந்த காலத்தினதும் சமகாலத்தினதும் மனித உரிமைமீறல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கும் இலங்கை அரசாங்கம் தவறியமையே சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகம் மற்றும் நல்லாட்சிக்கு" முக்கியமான ஒரு தடையாக இருந்து  வருகிறது. 

"பாரதூரமான குற்றங்களையும்  மனித உரிமை மீறல்களையும் செய்ததாக நம்பகமாக தொடர்புபடுத்தப்படும் பல கட்டமைப்புக்களும் அரச இயந்திரத்தின் கூறுகளும் இன்னமும் இயங்கிக் கொண்டிருப்பது  பொறுப்புக்கூறல் விடயத்தில் அர்த்தபுஷ்டியான  முன்னேற்றத்தை தடுக்கிறது என்பதுடன் மனித உரிமைமீறல்கள் தொடருவதற்கும் வழிவகுக்கிறது" என்று மனித உரிமைகள் உயர்ஸ்தினிகர் வொல்கர் ரேக் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

மேலும், உத்தேச உண்மை கண்டறியும் பொறிமுறை அமைக்கப்படுவதை பாதிக்கப்பட்டவர்களும் சிவில் சமூக அமைப்புக்களும் கடுமையாக எதிர்த்திருப்பதை  சுட்டிக் காட்டியிருக்கும் அவர் முதலில் அரசாங்கம் நல்லிணக்கத்துக்கு உகந்த சூழ்நிலை ஒன்றை உருவாக்குவதற்கு பிரத்தியேகமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று யோசனை கூறியிருக்கிறார்.

அரசாங்கத்தின் மறுப்பு 

ஐக்கிய நாடுகள் அறிக்கையில் உள்ள அவதானிப்புக்களை அரசாங்கம் மறுத்திருக்கிறது. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கும் ஏனைய நாடுகளுக்கும் விளக்கமளித்திருக்கும் அரசாங்கம் கிளப்பப்பட்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பிலான அதன் நிலைப்பாட்டை இராஜதந்திர குறிப்பு ஒன்றில் தெளிவு படுத்தியிருக்கிறது.

குறிப்பிட்ட நபர்களையும் நிறுவனங்களையும் இலக்குவைத்து விதிக்கப்படும் தடைகள் மற்றும் எதிர்காலப் பொறுப்புக்கூறல் செயன்முறைகள் தொடர்பிலான குறிப்புக்கள் உட்பட முடிவுகளையும் விதப்புரைகளையும் நிராகரித்திருக்கும் அரசாங்கம் அவற்றை தவறானதும் உறுதிப்படுத்தப்படாததுமான மூலங்களையும் அடிப்படையாகக் கொண்டவை என்றும் மனித உரிமைகள் பேரவையை உருவாக்கிய  ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 60/ 251  தீர்மானத்தில் குறித்துரைக்கப்பட்டிருக்கும் இயற்கை நீதிக் கோட்பாடுகள், பக்கச்சார்பின்மை மற்றும் சகலரும் சமம் என்ற கோட்பாடுகளுக்கும் முரணானது என்றும் அரசாங்கம் கூறியிருக்கிறது.

ஆனால் நாட்டில் களநிலைவரம் வேறுபட்டதாக இருக்கிறது. நாட்டின் கிழக்குப் பகுதியில் நில ஆக்கிரமிப்புகள் தொடர்பிலான நீதிமன்ற தீர்ப்புகள் மதிக்கப்படுவதில்லை. உளாளூராட்சி தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டது தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்தாததை நாட்டின் ஜனாதிபதியே நியாயப்படுத்திப் பேசுகிற அளவுக்கு சட்டங்கள் அவமதிக்கப்படுகின்றன.

மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய தீர்மானம் உட்பட பல தீர்மானங்களில் கடுமையான ஏற்பாடுகள் இருக்கின்றன. ஆனால் அவற்றை சர்வதேச சமூகம் இன்னமும் பயன்படுத்தவில்லை. அவற்றில் ஒன்று குறிப்பிட்ட சில நிறுவனங்களை அல்லது தனிநபர்களை இலக்குவைத்து தடைகளை விதிப்பதாகும். 

அதை அவர்கள் பயன்படுத்தினால் ஆழமான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் தற்போதைய தருணத்தில் இலங்கையினால் அதை தாங்கமுடியாது. விதிக்கப்பட்ட நிபந்தனைகளை இலங்கை நிறைவு செய்யவில்லையானால் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை வாபஸ் பெறப்படக்கூடும்.

அடுத்த சமாளிக்க முடியாத அச்சுறுத்தல்  சர்வதேச குற்றங்களுக்கான உலகளாவிய நீதி  நியாயாதிக்கம் தொடர்பானதாகும். உலகளாவிய நீதி்நியாயாதிக்க கோட்பாடு என்பது இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சித்திரவதை போன்ற சர்வதேச சட்டத்துக்கு எதிரான பாரதூரமான குற்றச்செயல்களுக்காக தனிநபர்கள் மீது வழக்கு தொடுப்பதற்கு அரசுகளை அல்லது சர்வதேச அமைப்புக்களை அனுமதிக்கும் ஒரு சட்டக்  கொள்கையாகும்.

குற்றச் செயல்கள் எங்கு இடம்பெற்றன என்பதையோ, குற்றச்செயல்களைச் செய்தவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதையோ அல்லது அந்த விவகாரம் வேறு எந்த நீதி நியாயாதிகத் தொடர்புகளைக் கொண்டது என்பதையோ பொருட்படுத்தாமல் அந்த கொள்கையை பிரயோகிக்கமுடியும்.

இலங்கையின் பின்புலத்தில் நோக்கும்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பல தீர்மானங்கள் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களை குறப்பாக 2009 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த நீண்ட உள்நாட்டுப் போருடன் தொடர்புடைய மீறல்களைக் கையாள்வதில் கவனத்தைச் செலுத்தியிருக்கின்றன. 

உலகளாவிய நியாயாதிக்கம் (Universal Jursdiction ) பாரதூரமான மனித உரிமை மீறல்களைச் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் இலங்கையர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு வெளிநாட்டு நீதிமன்றங்களுக்கு அல்லது சர்வதேச விசாரணை மன்றங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. இதன் அர்த்தம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களில் குறிப்பிடப்படும் தனிநபர்கள் இலங்கையின் நியயாதிக்கத்துக்கு வெளியில் விசாரணைகளை எதிர்நோக்கவேண்டிய நிலை ஏற்படுவதற்கான சாத்தியம் இருக்ககிறது.

ஆனால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைச் செயன்முறையை தொடருவது குறித்து சர்வதேச சமூகத்திற்குள் மீள்மதிப்பீடு ஒன்று இடம்பெறுகிறது போன்று தெரிகிறது. இலங்கை மோதலின் மோசமான கட்டம் 15 வருடங்களுக்கும் அதிகமான காலத்துக்கு முன்னர் போரின் முடிவுடன் முடிவுக்கு வந்துவிட்டது. உலகின் வேறு பகுதிகளில் நடைபெறுகின்றவற்றுடன் ஒப்பிடும்போது இலங்கையின் இன்றைய நிலைவரம் பெருமளவுக்கு மேம்பட்டதாக இருக்கிறது.

முறைமை மாற்றம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சனத்தொகையின் சகல பிரிவுகளினதும் ஆதரவைப் பெறுவதில் பிரதான அரசியல் சக்திகளின் அக்கறைகள் சங்கமிக்கின்றதன் விளைவாக இலங்கையில் தற்போதைய காலகட்டம் தேசிய நல்லிணக்கத்துக்கு கூடுதலான அளவுக்கு அனுகூலமானதாக இருக்கிறது.

சிறுபான்மைச் சமூகங்கள் தனக்கு ஆதரவாக வாக்களிப்பதை உறுதிசெய்வதற்காக அவர்களை தன்பக்கம் இழுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முழு அளவிலான முயற்சிகளில் ஈடுபட்டவருகின்றார். இன, மத சிறுபான்மைச் சமூகங்கள் இலங்கையின் வாக்காளர் தொகையில் மூன்றில் ஒரு பங்கினராக இருப்பதால் இறுக்கமான மும்முனைப் போட்டி ஒன்றில்  வெற்றி பெறுவதற்கு அந்த சமூகங்களின் ஆதரவைப் பெறுவது அவசியமாகும்.

மூன்று பிரதான வேட்பாளர்களான ஜனாதிபதி விக்கிரமசிங்கவும்  எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்கவும் சிறுபான்மைச் சமூகங்களின் பிரச்சினைகளை கையாளுவது தொடர்பிலும் இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பது தொடர்பிலும் ஒப்பீட்டளவில் அறிவுத் தெளிவுடனான நிலைப்பாடுகளை எடுத்திருக்கிறார்கள்.  அளிக்கின்ற வாக்குறுதிகளை தாங்கள் நடைமுறைப்படுத்துவார்கள் என்று மக்களுக்கு அவர்கள் நம்பிக்கையை ஏற்படுத்தவும் வேண்டும்.

சிங்கள இனத்துவ தேசியவாதத்தை முன்னிறுத்தி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற கோட்டாபய ராஜபக்சவின் தீங்கான காலப்பகுதிக்கு பிறகு தற்போது பரஸ்பரம் விட்டுக்கொடுப்பு மற்றும் கருத்தொருமிப்பின் அடிப்படையில் தேசிய நல்லிணக்கத்துக்கு சார்பாக பொதுமக்களின் நிலைப்பாடுகள் வலுவானவையாக வளர்ந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. ஆனால் அதே தேசியவாத சக்திகள் ஜனாதிபதி தேர்தலுக்காக தங்களை மீள அணிதிரட்டுவதையும் காணக்கூடியதாக இருக்கிறது.

கோட்டாபயவின் பெறாமகன் நாமல் ராஜபக்ச தேர்தல் நோக்கத்துக்காக சிங்கள இனத்துவ தேசியவாதத்தின் சக்தியை திரட்டுவதில்  சிறிய தந்தையாரின் அடிச்சுவட்டை பின்பற்றுவதாக தெரிகிறது. "இந்த பௌத்த நாட்டில் சகல மதங்களையும் மதிப்பதற்கு நாம் உறுதி கொண்டிருக்கிறோம். மாகாணசபைகளுக்கு காணி அதிகாரத்தையோ பொலிஸ் அதாகாரத்தையோ நாம்  பரவலாக்கம் செய்யப் போவதில்லை. வடக்கில் உள்ள எமது தமிழ் மக்களை தவறாக வழிநடத்துவதன் மூலம் நாம் எந்த பயனையும் அடையப்போவதில்லை" என்று நாமல் கூறியிருக்கிறார்.

அவரது இந்த கூற்றில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை பரவலாக்கம் செய்யும்  அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தப்போவதில்லை என்ற நிலைப்பாட்டை  தமிழ் மக்களும் உண்மையில் சட்டத்தின் ஆட்சியில் நம்பிக்கை கொண்ட சகல மக்களும் காண்கிறார்கள்.

இத்தகைய கள யதார்ததங்களுக்கு முகங்கொடுக்கும் நிலையில் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற குடையின் கீழ் தமிழ் இனத்துவ தேசியவாத சக்திகளும் தங்களை மிள அணிதிரட்டுவதில் ஈடுபட்டிருக்கின்றன. கடந்த காலத்தில் தமிழ்த் தலைவர்களும் அவர்களது கட்சிகளும் தேர்தல்களை பகிஷ்கரித்ததுடன் சிங்களப் பெரும்பான்மையினர் மீதான நம்பிக்கையீனம் காரணமாக நாட்டுப் பிரிவினையைக் கோரினர். கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகள் மதிக்கப்படாமல் போனதற்கு இனத்துவ துருவமயமாதலே காரணமாகும். ஆனால் தற்போதைய தருணத்தில் நாட்டில் பிரதான சுலோகமும் அபிலாசையும் முறைமை மாற்றம் ஒன்றுக்கானதாகவே இருக்கிறது. 

இலங்கையில் தங்களது தலையீடுகளின் பெறுமதி பற்றி சர்வதேச சமூகத்தின் மத்தியில் இடம்பெறுகின்ற மீள்சிந்தனையும் மூன்று பிரதான ஜனாதிபதி வேட்பாளரகளும் தமிழ் வாக்காளர்களுக்கு நீட்டுகின்ற நேசக்கரமும் தமிழ் அரசியல் சமுதாயம் விலகிநிற்காமல்  தேசிய அரசியல் செயன்முறையில்  ஈடுபடுவதற்கு காலம் கனிந்திருக்கிறது என்பதன் அறிகுறியாகும்.

அதேவேளை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற விரும்புகின்றவர்களும் சட்டத்தின் ஆட்சிக்கு பாதகமாக அமைகின்றதும் இன, மத சிறுபான்மைச் சமூகங்களுக்கு பாரபட்சத்தைக் காட்டுகின்றதுமான இன்றைய நாட்டு நிலைவரங்களில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு தங்களை அர்ப்பணிக்க வேண்டியது அவசியமாகும்.

https://www.virakesari.lk/article/192111

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.