Jump to content

தமிழ் சினிமா: பாலியல் குற்றங்களை தடுக்க நடிகர் சங்கம் எடுத்துள்ள புதிய நடவடிக்கைகள் என்ன?


ஏராளன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ் சினிமா, பெண்கள், பாலியல் குற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், விஷ்ணு ஸ்வரூப் & நித்யா பாண்டியன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

மலையாள சினிமாவை உலுக்கிய நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையின் தாக்கம் தமிழ் சினிமாவிலும் எதிரொலிக்கிறது. தமிழ் திரைத் துறையிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் சுரண்டல், பாலியல் துன்புறுத்தல்கள் ஆகியவை நடப்பதாக விவாதங்கள் கிளம்பியுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 8ஆம் தேதி) நடந்த தமிழ் சினிமா நடிகர்களின் கூட்டமைப்பான தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் 68வது பேரவைக் கூட்டத்தில், பெண்களுக்கு எதிரான புகார்களை விசாரிப்பதற்கான குழு பற்றி அறிவிக்கப்பட்டது.

இந்தக் குழு தமிழ் திரைத்துறையில், பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் மற்றும் துன்புறுத்தல்களுக்கு ஒரு தீர்வைக் கொண்டு வருமா?

சங்கத்தின் உறுப்பினர்கள், மூத்த சினிமா பத்திரிகையாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட நடிகர்கள் என்ன சொல்கிறார்கள்?

நடிகர் சங்கம் என்ன செய்துள்ளது?

தமிழ் சினிமா, பெண்கள், பாலியல் குற்றம்

பட மூலாதாரம்,NADIGAR-SANGAM.ORG

படக்குறிப்பு, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் பூச்சி எஸ். முருகன்

நடிகர் சங்கத்தில் ஏற்கெனவே 2019ஆம் ஆண்டு விசாகா கமிட்டி அமைக்கப்பட்டதாகவும், தற்போது அந்தக் குழுவில் வழக்கறிஞர்கள், பெண்களுக்கான தன்னார்வ அமைப்புகள், ஆகியோரை இணைக்க முடிவு செய்து, அக்குழுவுக்கென ஒரு மின்னஞ்சல் முகவரியையும் உருவாக்கியிருப்பதாகத் தெரிவிக்கின்றனர் நடிகர் சங்க நிர்வாகிகள்.

மேலும் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் அக்குழுவின் தலைவரான நடிகர் ரோகிணி விசாகா கமிட்டியை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தனர்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவரான பூச்சி S. முருகன், கடந்த 2019ஆம் ஆண்டே தென்னிந்திய நடிகர் சங்கத்தில், பாலியல் புகார்களை விசாரிக்க விசாகா கமிட்டி அமைக்கப்பட்டதாகவும், செப்டம்பர் 8ஆம் தேதி நடந்த சங்கத்தின் பேரவைக் கூட்டத்தில் அதுபற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

“நடிகர் சங்கத்தில் ஏற்கெனவே இருந்த குழுவில் 5 பேர் இருந்தனர். தற்போது அக்குழுவில், ஒரு பெண் வழக்கறிஞர், பெண்களுக்கான ஒரு தன்னார்வ அமைப்பு ஆகியோரை இணைத்து அக்குழு புதுப்பிக்கப்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது,” என்றார்.

மேலும், இந்தக் குழுவில் புகாரளிக்க ஏற்கெனவே ஒரு தொலைபேசி எண் இருந்ததாகவும், தற்போது அந்த எண்ணோடு சேர்த்து, புகாரளிக்க ஒரு புதிய மினனஞ்சல் முகவரியையும் சங்கம் உருவாக்கி இருப்பதாகவும் பூச்சி முருகன் தெரிவித்தார்.

புகார்கள் வரும் பட்சத்தில், அதை இந்தக் குழு விசாரித்து, அது உண்மையெனில் அதற்கு நடவடிக்கை எடுக்கும், தேவைப்படும் பட்சத்தில் காவல்துறையிடமும் அக்குழு புகார் அளிக்கும் என்றார் அவர்.

பேரவைக் கூட்டத்திற்கு முன்னர் ஒரு வாரமாக சங்கத்தில் ஆலோசிக்கப்பட்டு, விசாகா குழுவில் இந்தப் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், புத்துயிர் கொடுக்கப்பட்டிருக்கும் விசாகா கமிட்டி, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களான பெண் நடிகர்கள் கொடுக்கும் புகார்களை மட்டும் விசாரித்தாலும், உறுப்பினர்கள் அல்லாத பெண் நடிகர்களுக்கு இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால், அவர்களுக்கும் வழிகாட்டுதலும் தார்மீக ஆதரவும் கொடுக்கும் என்றார் பூச்சி முருகன்.

இதோடு, நடிகர் சங்கத்தின் பேரவைக் கூட்டத் தீர்மானத்தில், பெண் நடிகர்களுக்கு ‘படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் தரமான உடை மாற்றும் அறை வசதி, கழிவறை வசதி மற்றும் உரிய பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய, தயாரிப்பாளர்களோடு பேசி ஆவன செய்யத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விசாகா கமிட்டியினர் சொல்வது என்ன?

தமிழ் சினிமா, பெண்கள், பாலியல் குற்றம்

பட மூலாதாரம்,NADIGAR-SANGAM.ORG

படக்குறிப்பு, நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும், மூத்த நடிகருமான லதா சேதுபதி

செப்டம்பர் 8ஆம் தேதி நடந்த நடிகர் சங்கத்தின் பேரவைக் கூட்டத்தில், விசாகா குழுவின் தலைவரான நடிகை ரோகிணி, அக்குழுவைப் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் பேசினார்.

அப்போது அவர், பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் பெண் நடிகர்கள் விசாகா குழுவை அணுகிப் புகார் கொடுக்க வேண்டும் என்றும், அப்படிக் கொடுக்கப்படும் புகார் உறுதியானால், அதில் ஈடுபட்ட நபருக்கு 5 ஆண்டுகள் நடிக்கத் தடை விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

நடிகர் சங்கத்தின் விசாகா கமிட்டியை பற்றி மேலும் அறிந்துகொள்ள பிபிசி தமிழ் ரோகிணியைத் தொடர்பு கொண்டது. அப்போது அவர், இந்தக் குழுவில், வழக்கறிஞர்கள், தன்னார்வ அமைப்புகள், பாலினம் சார்ந்த மனநல ஆலோசகர்கள் ஆகியோரை இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்ததோடு, அதற்கு மேல் அதுபற்றி எதுவும் பேச மறுத்துவிட்டார்.

இதுகுறித்து நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும், மூத்த நடிகையுமான லதா சேதுபதியிடம் பிபிசி தமிழ் பேசியது.

நடிகர் சங்கத்தில், 2019லேயே விசாகா கமிட்டி இருந்தபோதும், அது அதிகமாகச் செயல்பாடில்லாமல் இருந்ததாகத் தெரிவித்தார். தற்போது “புகார்களை விசாரிக்க ஏதுவாக, கமிட்டியில் ஒரு ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியை இணைப்பதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டது,” என்றார் அவர்.

இந்தக் குழுவின் நோக்கமே, பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் பெண் நடிகர்கள், உடனடியாக, துணிவாக முன்வந்து புகாரளிக்க வேண்டும் என்பதுதான்,” என்றார் லதா.

 

‘வரவேற்கத்தக்க மாற்றம்தான், ஆனால்…’

தமிழ் சினிமா, பெண்கள், பாலியல் குற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சினிமா துறை, ஒரு முறையான கட்டமைப்புடன் கூடிய துறை இல்லை, அதனால் பெண்களுக்கு எதிரான இத்தகைய விஷயங்களுக்கு இத்தனை நாளாகத் தீர்வு காண்பதில் சிக்கல் இருந்தது என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்

தமிழ்த் திரைத்துறையில் இதுபோன்ற ஒரு மாற்றம் வந்திருப்பது குறித்து, மூத்த சினிமா பத்திரிகையாளரான அனுபமா சுப்ரமணியனிடம் பிபிசி தமிழ் பேசியது.

இதுவொரு வரவேற்கத்தக்க விஷயம் என்று கூறும் அனுபமா, ஆனால் இது ஒரே நாளில் மாற்றத்தைக் கொண்டு வந்துவிடாது என்றார்.

இதற்கு முன்னரே நடிகர் சங்கத்தில் 2019ஆம் ஆண்டு விசாகா கமிட்டி அமைக்கப்பட்டிருந்தாலும் அது செயலிழந்துவிட்டது. அதன் பிறகு, கோவிட் பொதுமுடக்கம் வந்ததால் அது பேச்சற்றுப் போய்விட்டது. ஆனால் இப்போது இந்த விஷயம் பற்றி மிகப் பரவலாகப் பேசப்படுவதால் இத்தகைய மாற்றம் வந்திருக்கிறது,” என்கிறார் அவர்.

இது நன்கு திட்டமிடப்பட்ட முடிவு என்று கூறும் அவர், ஆனால் மாற்றம் மிக மெதுவாகவே வரும் என்றார்.

மேற்கொண்டு பேசியபோது “இந்த கமிட்டியின் தாக்கம் எந்தளவுக்கு இருக்கும் என்பது, யார்மீது புகார் கொடுக்கப்படுகிறது, அது எத்தகைய புகார் என்பதைப் பொறுத்தது. இந்தப் புகார்களின் தகவல்கள் சட்டப்படி ரகசியமாகக் காப்பாற்றப்பட வேண்டும். அதனால், ஒருவேளை ஒரு பெரிய நடிகரின் மீது கொடுக்கப்படும் புகார் நிரூபிக்கப்பட்டு அவர் நடிப்பதில் இருந்து 5 ஆண்டுகள் தடை செய்யப்பட்டால்தான் இந்த கமிட்டியின் செயல்பாடுகள் குறித்து வெளியில் தெரிய வரும்,” என்கிறார்.

தமிழ் சினிமா துறையில் நடிகைகள் பல காலமாகவே சந்தித்து வரும் சிக்கல்கள் குறித்துப் பேசிய அனுபமா, தமிழ் சினிமாவில் துணை நடிகைகள் மிக மோசமாக நடத்தப்பட்ட சம்பவங்கள் உண்டு என்றும் கூறுகிறார்.

“படப்பிடிப்புத் தளத்தில் அவர்கள் உடை மாற்றுவதற்கான அறைகூட இருக்காது. அவர்களுக்கு முறையான கழிப்பறை வசதிகள் இருக்காது. இப்போது நடிகர் சங்கத்தின் தீர்மானத்தில் அது பற்றியும் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது,” என்கிறார்.

மேலும் பேசிய அனுபமா, சினிமா துறை ஒரு முறையான கட்டமைப்புடன் கூடிய துறை இல்லை, அதனால் பெண்களுக்கு எதிரான இத்தகைய விஷயங்களுக்கு இத்தனை நாளாகத் தீர்வு காண்பதில் சிக்கல் இருந்தது என்கிறார்.

அதனால், விசாகா குழு இப்போது புதுப்பிக்கப்பட்டிருப்பதே ஒரு நல்ல மாற்றம்தான். புகார் கொடுக்கும் பெண்களின் அடையாளம் வெளியில் தெரியாமல் பாதுகாக்கப்படும் என்ற தைரியத்தோடு அவர்கள் புகார் தெரிவிக்க முன்வரலாம். இல்லையெனில், அவமானப்படுத்தப்படுவோம், வேலை கிடைக்காது என்பன போன்ற அச்சத்தால், அவர்கள் இதுபற்றிப் பேச முன்வரமாட்டார்கள்,” என்கிறார் அனுபமா.

 

‘இது வெற்று அறிவிப்பு’

தமிழ் சினிமா, பெண்கள், பாலியல் குற்றம்
படக்குறிப்பு, நீதிபதி ஹேமா கமிட்டியின் மலையள திரையுலகம் குறித்த அறிக்கை தமிழ்த் திரைத்துறையிலும் சர்ச்சையைக் கிளப்பியது

ஆனால், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் இந்தச் சமீபத்திய அறிவிப்பு, ஏற்கெனவே பாலியல் சீண்டல்களால் பாதிக்கப்பட்ட தமிழ் நடிகைகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை எனத் தெரிகிறது.

படப்பிடிப்பின் போது மிக மோசமான முறையில் நடத்தப்பட்டதாகவும், பாலியல் ரீதியான சீண்டல்களுக்கு உள்ளானதாகவும் கூறும் குணச்சித்திர நடிகை ஒருவர், இது வெறும் அறிவிப்பாகத்தான் இருக்கும் என்கிறார்.

தமிழ் திரைத்துறையில் இருக்கும் பெண்கள் புகார் தெரிவிப்பதற்கென அவசர உதவி மையம் மற்றும் இ-மெயில் முகவரி ஆகியவை அறிமுகம் செய்யப்பட இருப்பது குறித்துப் பேசிய அவர், "ஏற்கெனவே விசாகா கமிட்டி இருக்கிறது. ஆனால் பெண் கலைஞர்கள் என்ன மாற்றங்களையும், மேம்பாட்டையும் கண்டார்கள்? விசாகா கமிட்டி அவர்களுக்கு எந்த வகையில் உதவியது?" என்ற கேள்வியை எழுப்புகிறார்.

"இங்கே இருக்கும் விசாகா கமிட்டியும், நடிகர் சங்கமும் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கவில்லை என்பதுதான் உண்மை. இத்தகைய சூழலில், இதுபோன்ற புதிய அறிவிப்புகள் வெறும் அறிவிப்பாகவேதான் இருக்குமே அன்றி, அதனால் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் ஏற்படாது. ஏற்கெனவே கொடுக்கப்பட்டிருக்கும் புகார்களுக்கு முதலில் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிறகு புதிய பிரச்னைகள் பற்றிக் கவலைப்படலாம்," என்றும் அவர் கூறுகிறார்.

முன்னர் கொடுக்கப்பட்ட புகார்கள் குறித்து பிபிசியிடம் பேசிய நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் பூச்சி முருகன், சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், நடிகர் சங்கத்தின் விசாகா குழுவிடம் இரண்டு புகார்கள் வந்ததாகவும், அவை அக்குழுவால் விசாரிக்கப்பட்டு, தீர்க்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 👍........... நீங்கள் இங்கு குறிப்பிட்டிருக்கும் இந்த வகையான நிரலையும் பார்த்திருக்கின்றேன், வசீ. இது ஒரு Power Index போல. என்னுடைய அயலவர் ஒருவர், அவர் இப்போது உயிருடன் இல்லை, முதன்முதலாக தாழப் பறக்கும் பெரிய விமானங்களை உருவாக்கும் பொறியியலாளர்களில் ஒருவராக இருந்தார். அவர் ஒரு இந்தியர், பஞ்சாபி. அவருடைய நாட்களில் இந்தியாவில் ஒரே ஒரு ஐஐடி மட்டுமே இருந்தது. கரக்பூரில் என்று நினைக்கின்றேன். அவர் அங்கு சேர்த்துக் கொள்ளப்பட்டார். அவர் பாடசாலை போனதே இல்லை. வீட்டுக் கல்வியிலிருந்து நேரடியாக ஐஐடி போனார். அங்கு முதலாம் வருடம் மிகவும் சிரமப்பட்டதாகச் சொன்னார். தென்னிந்தியர்களை தன்னால் தாண்டவே முடியாது என்று நினைத்ததாகச் சொன்னார். ஆனால் இறுதியில் அவர் அந்த வகுப்பில் இரண்டாவதாக வந்தார். இறுதிப் பரீட்சை ஒன்றில் வந்த கேள்விகள் என்ன, தான் எழுதிய பதில்கள் என்ன என்ன என்று ஒரு தடவை சொன்னார். இந்தியாவில் இருந்து ரஷ்யாவிற்கு மேல்படிப்பிற்கும், வேலைக்கும் போனார். பின்னர் இந்தியா திரும்பினார். இறுதியில் அவரை அமெரிக்கா எடுத்துக்கொண்டது. இங்கு போயிங் நிறுவனத்தில் சேர்ந்தார். B வகை விமான உருவாக்கம் பற்றி நிறையவே சொல்லியிருக்கின்றார். அவர் சொல்லுவதை எல்லாம் புரிந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு அறிவோ அல்லது அனுபவமோ இருக்கவில்லை, இன்றும் இல்லை. அவர் சொன்ன இன்னொரு விடயம் சில நாடுகளில் ராணுவமும், அதன் ஆராய்ச்சிகளும் ஒரு தலைமுறை முன்னால் போய்க் கொண்டிருக்கும் என்று. பலதும் மிக இரகசியமாகவே இருக்கும் என்றார். அவர் ரஷ்யாவையும், அமெரிக்காவையும் பார்த்தவர். இன்றைய நாளில் அமெரிக்காவும், சீனாவும் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கின்றேன். இந்த Power Index கூட இந்த இரு நாடுகளையும் சரியாக சுட்டிக் காட்டுகின்றனவா என்பது சந்தேகமே.       
    • என்ன பிரச்சனை  இந்தியாவை திட்டி கொட்ட. வேண்டுமா??? என்னால் முடியும்   விருப்பமில்லை  காரணம் எந்தவொரு பிரயோஜனமில்லை தமிழருக்கு   ஆனால் சிங்களவருக்கு நிறைய நன்மை உண்டு    இலங்கை அரசும் இந்தியாவும் ஒருபோதும் சண்டை   போர் செய்யவில்லை ஆனால்  தமிழர்களை இந்தியாவுடன் சண்டை   போர் புரிய  இலங்கை அரசாங்கம்  வைத்து உள்ளது   இதனால்  தனிநாடு கிடைக்கும் முதலே  எங்களுடன் போர் புரிந்தவர்கள். தனிநாடு கிடைத்தால்   என்ன செய்வார்கள்?? என்ற கேள்வி இந்தியாவிடம்  உண்டு”     அந்த கேள்வியை நாங்கள் மீண்டும் மீண்டும்  வழுவாக்கிக் கொண்டு வருகிறோம்   இதற்கு மாறாக  அந்த கேள்வியை ஏன் வலு இழக்க செய்யக்கூடாது  ??  நாடு இல்லாத நாங்கள்   கடலுக்காக ஏன். அடிபட வேண்டும்??    இந்த கடலில் சிங்கள கடப்படை  காவல் காக்கட்டும்.  என்றால்  வடக்கு கிழக்கு இலும்.  இலங்கை இராணுவம் இருக்கட்டும் என்று சொல்வதற்கும் சமன்  
    • உலகத்தின் மிக வேகமான இந்தியன் எனும் ஒரு படம் வெளியாகியிருந்தது, அது ஒரு நியுசிலாந்து நபரின் கதையினை கூறும் படம், அவர் அமெரிக்காவிற்கு கார்? பந்தயத்திற்காக செல்வார், அங்கு ஒரு காரை வாங்கி அதனை தவறான பாதையில் செலுத்துவார் அதனால் ஏற்பட இருந்த விபத்தினை ஒருவாறு தவிர்த்து விடுவார், அவர் தனது தவறுக்கு காரணம் வீதி முறைமை இரு நாடுகளிலும் வேறு வேறாக இருந்தது என கூற (நியுசிலாந்தில் இடது புற வாகன செலுத்தும் முரைமை) பக்கத்திலிருந்தவர் கூறுவார் நீங்கள் எந்த நாட்டிலும் எந்த முறைமையிலும் வாகனம் செலுத்தலாம் உங்கள் சாரதி இருக்கை வீதியின் மையத்தில் இருக்கவேண்டும் என கூறுவார். உல்கில் இராணுவத்தினரை வெவ்வேறு தளங்கள் வெவ்வேறு வடிவங்களில் மதிப்பிடலாம்; அளவு, பாதீட்டின் செலவீட்டின் அடிப்படையில், மொத்த சனத்தொகை விகிதாசாரத்தில் என எவ்வாறு வேண்டுமானாலும் மதிப்பிடலாம். அடிப்படையில் பெரிய இராணுவம் என்றால் எண்ணிக்கை அதனோடு இணைந்த ஆயுத தளபாடமே கணிக்கப்படும் உதாரனமாக ஒரு குறிப்பிட்ட தொகை கொண்ட இராணுவத்தில் ஒரு சிறிய அணியில் (பிளட்டூன்) எத்தனை இலகு இயந்திரத்துப்பாக்கி, எறிகணை அல்லது உந்து கணை என்பதனை அந்த சிறிய அணியில் உள்ள சிப்பாய்களின் எண்ணிகை அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என கருதுகிறேன். இந்த நிலை ஒவ்வொரு அடுத்த நிலை உயர்வுக்கும் அதற்கேற்ப அதன் கனரக ஆயுதங்கள் கட்டமைப்பினால் உருவாக்கப்படும் இராணுவம் அதன் பலம் தீர்மானிக்கப்படும். பெரிய இராணுவ அமைப்புக்களை கொண்ட ஒரு இராணுவத்தினை சிறிய இராணுவம் தோற்கடிக்க முடியாதா என்றால் முடியும் அதற்கு உத்தியினை காரணமாக கூறலாம், இஸ்ரேல் பலங்கொண்ட எதிரி நாடுகளை தோற்கடிக்க வான் மேலாதிக்கத்தினை பெற தாழ்வாக பறந்து எதிர்களின் இரடார் சாதனங்கலை அழித்தவுடன் எதிரிப்படையின் விமானப்படையினை அழித்து வான் மேலாதிக்கத்தினை  பெற்று அதன் மூலம் 6 நாள் போரில் வெற்றி பெற்றது அதே உத்தியினை அமெரிக்கா ஈராக்கிற்கு எதிராக பயன்படுத்தியிருந்தது. நீங்கள் இணையத்தில் தேடல் செய்ததிலிருந்து வளமையான பெரும்பான்மையிலிருந்து சற்று வேறுபட்டுள்ளீர்கள், யதார்த்தத்தினை அறிந்து வைத்திருந்தால் பல வழிகளில் உதவியாயிருக்கும்தானே?😁
    • தொடருங்கள், யாழை எட்டிப் பார்த்தேன்..! ஜாலியா போகுது திரி..😀
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.