Jump to content

வேற்றுக்கிரகவாசிகளின் உலகில் பகல்-இரவு இருக்காது என்று கருதப்படுவது ஏன்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
எம்-எர்த், பகல்-இரவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல்
  • எழுதியவர், மரியன் கோஹன்
  • பதவி, பிபிசி
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

பகலும் இரவும் மாறிமாறி வந்து, பூமியில் உயிர்கள் செழிக்க உதவுகின்றன. ஆனால் உயிர்கள் வாழ சாத்தியம் இருக்கும் பல வேற்றுக்கிரகங்களில், இத்தகைய தெளிவான சூழலைக் கொண்டிருக்கவில்லை.

இரவு பகலை பற்றி பேசுகையில், வேற்றுக்கிரகவாசிகள் தூங்குவார்களா என்னும் கேள்வியும் எழுகிறது. உயிர்களை உருவாக்கக் கூடிய தன்மை கொண்ட பல கிரகங்களில் பகல்-இரவு சுழற்சி இல்லை என்று ஆராய்ச்சி கூறுகிறது. அதே சமயம், பூமியிலும் ஆழமான நிலத்தடி அல்லது கடலின் அடிப்பகுதியில் வாழும் உயிரினங்கள் ஒளியற்ற வாழ்விடங்களில் வசிக்கின்றன.

இவை சர்க்காடியன் இசைவு (circadian rhythm) இல்லாத வேற்றுக்கிரகங்களில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை நமக்குத் தெரிவிக்கின்றன.

நமது விண்மீன் மண்டலத்தில் உயிர்கள் வாழக்கூடிய தன்மை கொண்ட பில்லியன்கணக்கான கிரகங்கள் உள்ளன. இந்த எண்ணிக்கைக்கு பின்னால் ஒரு விளக்கம் உள்ளது. பால் வீதியில் 100 பில்லியன் முதல் 400 பில்லியன் நட்சத்திரங்கள் உள்ளன.

 

இவற்றில் 70% சிறியளவிலான, சிவப்பு ‘குள்ள’ நட்சத்திரங்கள் ஆகும். அவை M-dwarfs என்று அழைக்கப்படுகின்றன. 2013-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு விரிவான எக்ஸோபிளானட் கணக்கெடுப்பு, எம்-டிவார்ஃப்ட் நட்சத்திரங்களில் 41% அவற்றின் "கோல்டிலாக்ஸ்" மண்டலத்தை சுற்றிவரும் கிரகங்களை கொண்டிருப்பதாக மதிப்பிட்டுள்ளது. இந்த மண்டலத்தில் கிரகத்தில் திரவ நீருக்கு ஏற்ற சரியான வெப்பநிலை உள்ளது.

இதனை உயிர்கள் வாழக்கூடிய சூழல் கொண்ட மண்டலம் என்றும் கூறலாம். ஒரு நட்சத்திரத்தில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் அமைந்துள்ள பகுதியாகும். இப்பகுதியில் அமைந்துள்ள கோள்கள் திரவ நீர் இருக்க வாய்ப்புள்ள சூழலைக் கொண்டிருக்கும். எனவே, உயிர்கள் வாழ இது உதவும். ஆனால், இந்த கோள்களில் உண்மையில் தண்ணீர் இருக்கிறதா என்று விஞ்ஞானிகளுக்கு இன்னும் தெளிவாக தெரியவில்லை.

 
எம்-எர்த், பகல்-இரவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

`டைடல் லாக்கிங்'

எம்-டிவார்ஃப்-இன் 'உயிர்கள் வாழக்கூடிய மண்டலத்தில்' சுற்றிவரும் பாறை கிரகங்கள் எம்-எர்த்ஸ் (M-Earths) என்று அழைக்கப்படுகின்றன. அவை அடிப்படையான விஷயங்களில் நமது பூமியிலிருந்து வேறுபடுகின்றன. ஒன்று, எம்-டிவார்ஃப் நட்சத்திரங்கள் சூரியனை விட மிகவும் குளிர்ந்த நிலையில் இருக்கும். அவை நெருக்கமாக அமைந்திருக்கும்.

நட்சத்திரத்தின் ஈர்ப்பு விசை, கிரகத்தின் மறுபுறத்தைக் காட்டிலும் அருகில் உள்ள பக்கத்தின் மீது அதிகமாக செயல்படுகிறது. இது கிரகத்தின் சுழற்சி வேகத்தைக் குறைக்கிறது.

எம்-எர்த்களில் பெரும்பாலானவை டைடல் லாக்கிங் (Tidal locking) செய்யப்பட்டிருக்கும் என்பதை இது குறிக்கிறது. அதாவது, அந்த கிரகத்தின் ஒரு அரைக்கோளம் தொடர்ந்து அந்த நட்சத்திரத்தை நோக்கி இருக்கும். மற்றொன்று எப்போதும் விலகியே இருக்கும்.

Tidal locking அல்லது `ஒத்தியங்கு சுழற்சி’ என்பது ஒரு வானியல்சார் பொருள் மற்றொரு வானியல்சார் பொருளைச் சுற்றி வரும் போது வானியல் பொருளின் ஒரு பக்கம் மட்டுமே மற்றதை நோக்கி இருக்குமாறு அமைவதாகும்.

டைடல் லாக்கிங் செய்யப்பட்ட ஒரு கிரகத்தின் ஆண்டு அதன் நாளின் நீளத்திற்கு சமம். நிலவு பூமியுடன் டைடல் லாக்கிங் செய்யப்பட்டுள்ளது. அதன் விளைவின் காரணமாக நம்மால் நிலவின் ஒரு பகுதியை மட்டுமே பார்க்க முடிகிறது. நிலவின் மறுபக்கத்தை பூமியில் இருந்தபடி நம்மால் ஒருபோதும் பார்க்க முடியாது.

எம்-எர்த், பகல்-இரவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சர்க்காடியன் சுழற்சி என்பது உயிர்வேதியியல், உடல் வெப்பநிலை, உயிரணுக்களின் மீளுருவாக்கம், நடத்தை என பலவற்றை பாதிக்கிறது.

எம்-எர்த் கிரகங்களில் பகல், இரவு இல்லை

டைடல் லாக்கிங் செய்யப்பட்ட ஒரு கிரகம் விசித்திரமானதாகத் தோன்றலாம், ஆனால் உயிர் வாழக்கூடிய தன்மை கொண்ட கிரகங்கள் இதுபோன்று தான் இருக்கும். நமது கிரகத்திற்கு அருகிலுள்ள ப்ராக்ஸிமா சென்டாரி பி (நான்கு ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஆல்பா சென்டாரி அமைப்பில் அமைந்துள்ளது) அநேகமாக டைடல் லாக்கிங் செய்யப்பட்ட எம்-எர்த் ஆக இருக்கலாம் .

நமது பூமியைப் போலல்லாமல், எம்-எர்த்களுக்கு பகல், இரவு மற்றும் வெவ்வேறு பருவங்கள் இல்லை. பூமியில் பாக்டீரியாக்கள் முதல் மனிதர்கள் வரை பெரும்பாலான உயிரினங்கள் பகல்-இரவு சுழற்சியுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதாவது சர்க்காடியன் இசைவைக் கொண்டுள்ளது.

இந்த சுழற்சியில் நமக்கு வெளிப்படையாக தெரிந்ததெல்லாம் இரவில் தூங்க வேண்டும் என்பது தான். ஆனால், சர்க்காடியன் சுழற்சி என்பது உயிர்வேதியியல், உடல் வெப்பநிலை, உயிரணுக்களின் மீளுருவாக்கம், நடத்தை என பலவற்றை பாதிக்கிறது. எடுத்துக்காட்டாக, காலையில் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நபர்கள், பிற்பகலில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களை விட அதிக ஆன்டிபாடிகளை உருவாக்குகிறார்கள், ஏனெனில் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடு இரவு, பகல் என வெவ்வேறு தாக்கத்தைக் கொண்டிருக்கும்.

 

பயோரிதம்களை வெளிப்படுத்தும் உயிரினங்கள்

எம்-எர்த், பகல்-இரவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பூமியைப் போன்ற கிரகமான ப்ராக்ஸிமா சென்டாரி பி, ஒரு டைடல் லாக்கிங் செய்யப்பட்ட எம்.எர்த், இது தனித்துவமான பகல் மற்றும் இரவுகள் இருப்பதை பாதிக்கும்

தூக்கம் மற்றும் உயிரணுக்களின் மீளுருவாக்கம் ஆகியவற்றின் முக்கியத்துவம் நிச்சயமற்றது. அவ்வப்போது ஓய்வு தேவைப்படாத உயிரினங்கள் தொடர்ந்து செயல்படலாம்.

உதாரணமாக ஆழ்கடல் உயிரினங்கள், குகையில் வசிக்கும் உயிரினங்கள் மற்றும் பூமியின் மேலோடு மற்றும் மனித உடல் போன்ற இருண்ட வாழ்விடங்களில் வசிக்கும் நுண்ணுயிரிகள் எப்படி பகல் வெளிச்சம் இன்றி நன்றாகச் செயல்படுகின்றன?

இந்த உயிரினங்கள் பல பயோரிதம்களை வெளிப்படுத்துகின்றன, அவை ஒளியைத் தவிர வேறு தன்மையால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

நேக்டு மோல் எலிகள் தங்கள் முழு வாழ்க்கையையும் நிலத்தடியில் கழிக்கின்றன. சூரியனை அவை பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவை தினசரி மற்றும் பருவகால வெப்பநிலை, மழைப்பொழிவு சுழற்சிகளுக்கு ஏற்ப சர்க்காடியன் கடிகாரங்களைக் கொண்டுள்ளன.

ஹாட் வென்ட் இறால் மற்றும் ஆழ்கடல் மஸ்ஸல்கள் கடலின் அலைகளைப் பின்பற்றி வாழ்கின்றன.

மனித குடலில் வாழும் பாக்டீரியாக்கள் அவை வசிக்கும் உடலில் உள்ள மெலடோனின் ஏற்ற இறக்கங்களுடன் ஒத்திசைகின்றன. மெலடோனின் என்பது இருளில் உடல் உற்பத்தி செய்யும் ஹார்மோன் ஆகும்.

வெப்ப துளைகள், ஈரப்பத ஏற்ற இறக்கங்கள் மற்றும் சுற்றுச்சூழல் வேதியியல் மாற்றங்கள் ஆகியவற்றால் ஏற்படும் வெப்பநிலை மாறுபாடுகள் அனைத்தும் உயிரினங்களில் உயிர்-அலைவுகளைத் தூண்டும் எனவே `பயோரிதம்கள்’ உள்ளார்ந்த நன்மைகளைக் கொண்டுள்ளன என்பதை பிரதிபலிக்கிறது.

எம்-எர்த்ஸ் நாட்கள் மற்றும் பருவங்களுக்கு பதிலாக சுழற்சிகளைக் கொண்டிருக்கலாம் என்பதை சமீபத்திய ஆராய்ச்சி காட்டுகிறது. இது போன்ற கேள்விகளை ஆய்வு செய்ய, ப்ராக்ஸிமா சென்டாரி பி (Proxima Centauri) உட்பட, எம்-எர்த்ஸ்-இன் சூழல் எப்படி இருக்கும் என்பதை விஞ்ஞானிகள் உருவகப்படுத்தியுள்ளனர்.

இந்த உருவகப்படுத்தலில், எம்-எர்த்ஸின் பகல் நேரத்திற்கும் இரவு நேரத்திற்கும் இடையிலான வேறுபாடு, விரைவான காற்று மற்றும் வளிமண்டல அலைகளை உருவாக்குவதாகத் தெரிகிறது. இது வளைந்து அலைந்து செல்லும் பூமியின் `ஜெட் ஸ்ட்ரீம்’ காற்றுக்கு ஒத்திருந்தது. கிரகத்தில் தண்ணீர் இருக்குமாயின், பகலில் மின்னல்கள் நிறைந்த அடர்த்தியான மேகங்கள் உருவாகலாம்.

 

பரிணாமம் எப்படி நடக்கும்?

காற்று, வளிமண்டல அலைகள் மற்றும் மேகங்களுக்கு இடையிலான தொடர்புகள் வெவ்வேறு நிலைகளுக்கு இடையேயான காலநிலையை மாற்றக்கூடும். இதனால் வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் மழைப்பொழிவு ஆகியவற்றில் வழக்கமான சுழற்சிகள் ஏற்படலாம்.

இந்த சுழற்சிகள் ஒவ்வொரு கிரகத்திற்கும் பத்து முதல் நூற்றுக்கணக்கான பூமி நாட்கள் வரை வேறுபடும். அவை கிரகத்தின் சுழற்சி காலத்துடன் தொடர்புப்படுத்தப்படாது. இந்த கிரகங்களின் வானத்தில் நட்சத்திரம் நிலையாக இருக்கும் போது கூட, சூழல் மாறிக்கொண்டே இருக்கும்.

எம்-எர்த்ஸில் உள்ள உயிர்கள் இந்த சுழற்சிகளுடன் ஒத்திசைந்த பயோரிதம்களை உருவாக்கலாம் அல்லது உயிர்கள் பரிணாமம் நடப்பதற்கு வேறு ஒரு விசித்திரமான தீர்வு இருக்கலாம்.

கிரகத்தின் பகல் நேரத்தில் வாழும் இனங்கள் ஓய்வெடுக்கவும் மீளுருவாக்கம் செய்யவும் கிரகத்தின் இரவு நேரத்திற்கு குடிபெயரும் இனங்கள் இருக்கலாம் என்பது கற்பனையான யூகம். எனவே சர்க்காடியன் கடிகாரம் என்பது வேற்று கிரகங்களில் நேரத்தை சார்ந்திருப்பது அல்ல.

ஒருவேளை வேற்று கிரகங்களில் வாழ்க்கை இருந்தால், தற்போது நமக்குத் தெரிந்த அனுமானங்களை விட இன்னும் ஆழமான உண்மைகளை கொண்டிருக்கும். அது நம்மை ஆச்சரியப்படுத்தும் என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.