Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்றத் தேர்தல் களம் 2024: உத்தமர்களாகக் கட்டியெழுப்பப்படும் வேட்பாளர்கள்! நிலாந்தன்.

நாடாளுமன்றத் தேர்தல் களம் 2024: உத்தமர்களாகக் கட்டியெழுப்பப்படும் வேட்பாளர்கள்! நிலாந்தன்.

சுமந்திரன் ஒரு பிரச்சாரக் காணொளியில் கூறுகிறார், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணியை தானும் சாணக்கியனும்தான் வெற்றிபெற வைத்ததாக.அதற்கு சிவாஜிலிங்கத்தின் அறிக்கை ஒன்றை ஆதாரமாக காட்டுகிறார். ஏனையவர்கள் அந்த பேரணிக்குள் பின்னர் வந்து ஒட்டிக்கொண்டதாகவும் அவர் கூறுகிறார்.

சுமந்திரனின் பிரச்சார காணொளிகளைக் கேட்கும் எவருக்கும் அவரைவிட உத்தமர் இல்லை என்ற ஒரு தோற்றம்தான் கிடைக்கும். அவர் எவ்வளவு காணிகளை விடுவித்தார்? எவ்வளவு கைதிகளை விடுவித்தார்? எந்தெந்த ராஜதந்திரிகளை சந்தித்தார்?எப்படியெல்லாம் தமிழ் மக்களுக்காக உழைத்தார்? அதை எப்படி அவருடைய எதிரிகள் வேறுவிதமாக வியாக்கியானம் செய்தார்கள்? என்றெல்லாம் அந்த காணொளிகள் கூறுகின்றன. பிரச்சார காணொளிகளுக்கூடாக யாருக்கு வாக்களிப்பது என்று தீர்மானிக்கும் ஒரு தமிழ் வாக்காளர் சுமந்திரன் ஒரு நீதியான, சுத்தமான அரசியல்வாதி என்ற முடிவுக்குத்தான் வருவார். தமிழ் மக்களுக்கு இவ்வளவு நன்மைகளைச் செய்த ஒருவர்,தமிழ் மக்களுக்காக இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு உழைத்த ஒருவர்,அரங்கில் உள்ள அரசியல்வாதிகள் அநேகமானவர்களைவிட புத்திசாலியான,சட்டப்புலமைமிக்க ஒருவர்,அவர்தான் என்ற முடிவுக்கு வருவார்கள். ஏனென்றால் அந்த காணொளிகள் அப்படித்தான் அவரை கதாநாயகனாக, உத்தமராகக் கட்டமைக்கின்றன.

அப்படித்தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சாரக் காணொளிகளை தொகுத்துப் பார்த்தால் அங்கேயும் அந்த கட்சியை விட வேறு யாரும் தியாகம் செய்ததில்லை என்ற ஒரு தோற்றம் கிடைக்கும். கடந்த 15 ஆண்டுகளில் அதிகமாக தியாகம் செய்த ஒரு கட்சி அதுதான் என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கும். அதிகமாக போராடிய ஒரு கட்சி, துணிந்து போலிசாரோடும் புலனாய்வுத் துறையோடும் மோதிய ஒரு கட்சி, வீரமான கட்சி அதுதான் என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கும். ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அநேகமாக கோழைகள், போராடாதவர்கள், ஒத்தோடிகள், துரோகிகள், காட்டிக் கொடுப்பவர்கள், இந்தியாவின் ஏஜென்ட்கள் என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கும். ஆயுதப் போராட்டத்தின் ஒரே ஏகபோக வாரிசு அந்தக் கட்சிதான் என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கும். எனைய எந்த ஒரு கட்சிக்கும் அவ்வாறு உரிமை கோரத் தகுதி இல்லை என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கும்.

குத்துவிளக்கு கூட்டணி அதாவது சங்கு கூட்டணி ஜனாதிபதித் தேர்தலில் சங்கு பெற்ற வெற்றிகளின் தொடர்ச்சியாக தன்னைக் கட்டமைக்க முற்படுகின்றது. சங்குச் சினத்தை ஜனாதிபதித் தேர்தலில் முன்நிறுத்திய பொதுக் கட்டமைப்பும் இப்பொழுது சங்கை முன்னிறுத்தும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒன்றுதான் என்ற மயக்கத்தை சராசரி வாக்காளர்கள் மத்தியில் ஏற்படுத்துவதன்மூலம் ஜனாதிபதித் தேர்தலில் சங்குக்கு கிடைத்த வெற்றிகளை தமக்கும் மடைமாற்றலாம் என்று அந்தக் கூட்டணி நம்புவதாகத் தெரிகிறது. அந்தக் கூட்டணிக்குள் போட்டியிடும் சசிகலா தன்னை, கொல்லப்பட்ட கணவனின் வாரிசாக முன்வைக்கின்றார்.

சங்குச் சின்னத்தின் கீழ் மற்றொரு பெண் வன்னியில் போட்டியிடுகிறார். முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தவராகிய அவர் போரில் ஒரு காலை இழந்தவர். புனர்வாழ்வு பெற்ற போராளிகள் பலர் அவருக்காக கடுமையாக உழைக்கின்றார்கள்.ஆயுதப் போராட்டத்தின் வாரிசாக அவர் தன்னை கட்டமைக்கின்றார்.

தமிழரசுக் கட்சி, முன்னணி, சங்கு கூட்டணி ஆகிய மூன்று கட்சிகளையும் தவிர்த்து ஏனைய கட்சிகளின் பிரச்சாரக் காணொளிகளைப் பார்த்தால் அங்கேயும் அப்படித்தான் உருப்பெருக்கப்பட்ட கதாநாயகத்தனமான தோற்றங்கள் கிடைக்கும்.

மணிவண்ணன் நவீன தேசியம் என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்துகின்றார். அவருடைய அணி அவரைக் குறித்து கட்டியெழுப்பும் சித்திரமும் பிரம்மாண்டமானது.

கட்சிகளைத் தவிர்த்து சுயேச்சைகளைப் பார்த்தால், அங்கேயும் பிரச்சாரக் களம் அப்படித்தான்.மாம்பழச் சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சைக் குழுவைச் சேர்ந்த தவராசா பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட எத்தனை பேரை தான் விடுதலை செய்திருக்கிறார் என்று பட்டியலிடுகிறார்.அவருடைய சுயேச்சை குழுவை சேர்ந்த சரவணபவன் ஐங்கரநேசன் போன்றவர்களும் தாங்கள் தமிழ்த் தேசியத்துக்கு இதுவரை செய்த பங்களிப்பை பட்டியலிடுகிறார்கள்.

மற்றொரு சுயேச்சைக் குழுவைச் சேர்ந்த அர்ஜுனா தன்னை எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது என்று நம்புகிறார். சாவகச்சேரியில் தான் தொடக்கிய கலகம் தன்னை அந்தளவுக்கு பிரபல்யப்படுத்தியிருக்கிறது என்றும் நம்புகிறார். அண்மை நாட்களாக அவர் தன் வாயாலே கெடுகிறார். யூடியூபர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களால் ஊதிப் பெருக்கப்பட்ட ஒரு பலூன் அவர். அவருடைய சின்னம் ஊசி. அந்த ஊசியே அந்த பலூனை உடைக்கும் ஒரு நிலை.

தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு வெளியே அங்கஜன்,பிள்ளையான் போன்றவர்களும் பிரச்சாரக் காணொளிகளை வெளியிடுகிறார்கள். பிள்ளையான் தன்னை கிழக்கின் மீட்பராகக் காட்டுகிறார்.அவரை பிரச்சாரப்படுத்தும் காணொளிகள் எல்லாவற்றிலும் அவர் கிழக்கிற்கு செய்த நன்மைகள் பட்டியலிடப்படுகின்றன. வடக்கில் அங்கஜன் ஒப்பீட்டளவில் எல்லாரையும்விட அதிகமாக செலவழிப்பதாக அவதானிக்கப்பட்டுள்ளது.அவருடைய பிரச்சார காணொளிகளும் அவரை கதாநாயகராகக் கட்டமைப்பவை.

வன்னியில் எமில் காந்தனின் சுயேச்சை குழு போட்டியிடுகிறது. அங்கேயும் காசு தாராளமாக அள்ளி வீசப்படுவதாக ஓர் அவதானிப்பு உண்டு.

இவ்வாறாக தமிழர் தாயகத்தில் கட்சிகளும் சுயேச்சைகளும் பிரச்சார காணொளிகளை அதிகமாக வெளியிடுகின்றன.எல்லாப் பிரச்சார காணொளிகளும் வேட்பாளர்களை சினிமாத் தனமாக கதாநாயக பிம்பங்களாக கட்டியெழுப்ப முயற்சிக்கின்றன.

ஆனால் இம்முறை நாடாளுமன்ற தேர்தல் களத்தில் கட்சிகளோ சுயேச்சை குழுக்களோ பெருங்கூட்டங்களை ஒழுங்குபடுத்தவில்லை. டிஜிட்டல் புரோமோஷன் மட்டும் தமக்குப் போதும் என்று அவர்கள் நம்புகிறார்களா?

சமூக வலைத்தளங்கள் மற்றும் யூடியுபர்களின் காலத்தில் டிஜிட்டல் புரோமோஷனுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு.அனுர ஜனாதிபதி தேர்தலின்போது அதிகம் டிஜிட்டல் புரமோஷனில் ஆர்வம் காட்டினார். குறிப்பாக தமிழ் வாக்காளர்களை கவரும் நோக்கத்தோடு தேசிய மக்கள் சக்தி உருவாக்கிய காணொளிகளில் அனுர ஒரு கதாநாயகனாகக் கட்டமைக்கப்பட்டார். பிரபல சினிமாப் பாடல்களை பின்னணியில் ஒலிக்க, அனுர வாகனத்தை விட்டு இறங்குவது, நடப்பது, கையசைப்பது, குழந்தைகளை பெண்களை நெருங்கி வந்து கதைப்பது போன்ற எல்லாவற்றிலும் அவரை ஒரு கதாநாயகனாக கட்டமைக்கும் விதத்தில் அந்த காணொளிகள் தயாரிக்கப்பட்டிருந்தன.

அனுரவின் உடல் மொழி, உடல் அசைவுகள் அந்தப் பாடல்களுக்கும் இசைக்கும் பொருத்தமாக இருக்கின்றன என்பதனை இங்கு ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் சில தமிழ்க் கட்சி அரசியல்வாதிகள் வெளியிடும் காணொளிகளில், பின்னணியில் ஒலிக்கும் பாடல் வரிகளுக்கும் இசையின் எழுச்சிக்கும் தோதாக அவர்களுடைய உடல் மொழி காணப்படவில்லை.

யாழ் தேர்தல் தொகுதியில் தமிழரசுக் கட்சிக்குள் வேட்பாளராக நிற்கும் ஒரு பெண் முன்பு பொங்கு தமிழில் ஈடுபட்டவர். தன்னை பொங்குதமிழின் வாரிசாகவும் அவர் முன்னிறுத்துகிறார்.அவருக்குரிய பிரச்சார காணொளிகளில் அவர் தனக்கென்று பாடல்களைத் தயாரித்திருப்பதாகத் தெரிகிறது.

மேற்கண்ட பிரச்சாரக் காணொளிகள் பெரும்பாலானவை அந்தந்த கட்சி அல்லது அந்தந்த சுயேட்சைகள் காசு கொடுத்து உருவாக்கியவை. ஆனால் இந்த விடயத்தில் கொழும்பு போன்ற மாநகரங்களில் காணப்படும் வளர்ச்சிகள் தமிழ்ப் பகுதிகளில் இல்லை. மாநகரங்களில் விளம்பரம் ஒரு பெருந்துறையாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. அங்கெல்லாம் விளம்பரத்துக்கு என்று பெரிய நிறுவனங்கள் உண்டு.அவை விளம்பரத்தை அதற்குரிய கலைப் பெறுமதியோடு வடிவமைப்பவை. அதற்காக கோடிக்கணக்காக பணம் வாங்குபவை. தொழிற்துறை வளர்ந்த மாநகரங்களில் விளம்பரம் கோடிகள் புரளும் ஒரு தொழில்துறை. தெற்கில் பெரும்பாலான பிரதான கட்சிகள் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை தொழிற்சார் விளம்பர நிறுவனங்களிடம் ஒப்படைக்கின்றன. அதற்காக கோடிக்கணக்காக செலவழிக்கின்றன. அந்த நிறுவனங்கள் தேர்தல் பிரச்சாரத்தை கலைத் தாக்கத்தோடும் சராசரி வாக்காளர்களைச் சென்றடையக்கூடிய வியாபார உத்திகளோடும் தயாரிக்கின்றன. அந்தப் பிரச்சார காணொளிகளுக்கு கலைப் பெறுமதியும் உண்டு சந்தைப் பெருமதியும் உண்டு. ஆனால் தமிழ் காணொளிகள் பலவற்றில் அவ்வாறு கலைப் பெறுமதியைக் காண முடியவில்லை. ஏனென்றால் தமிழ்ப் பகுதிகளில் விளம்பரம் ஒரு கலையாகவும் தொழிலாகவும் வளரவில்லை.இந்தப் பற்றாக்குறையை தமிழ் கட்சிகளின் விளம்பரப் பிரச்சாரக் காணொளிகளில் காணக்கூடியதாக உள்ளது.

தமிழ்க் கட்சிகள் அதிகம் டிஜிட்டல் புரோமோஷனில் ஆர்வம் காட்டும் ஒரு தேர்தல் களமாக இது காணப்படுகிறது. அதேசமயம் அந்த பிரச்சார விளம்பர காணொளிகளில் தொழில்சார் பற்றாக்குறைகளையும் அழகியல் குறைபாடுகளையும் காணமுடிகிறது. அதற்கு விளம்பரம் ஒரு தொழில்துறையாக தமிழ் மக்கள் மத்தியில் வளராததும் ஒரு காரணம்.

அரசியல் பிரச்சார நடவடிக்கைகளில் மட்டுமல்ல, அரசியலில் ஏனைனய விடையப் பரப்புகளிலும் உரிய தொழில்சார் திறன்களைப் பெற்றுக் கொள்வதில் தமிழ்க் கட்சிகள் எந்தளவுக்கு ஆர்வமாக காணப்படுகின்றன என்ற கேள்வி இங்கு முக்கியம். அரசியலை ஓர் அறிவியல் ஒழுக்கமாக விளங்கி வைத்திருந்திருந்தால்,பயின்றிருந்திருந்தால்,தமிழ்க் கட்சிகள் தமிழரசியலை இந்தளவுக்கு சீரழிவான ஒரு நிலைக்கு கொண்டு வந்து விட்டிருக்காது. இவ்வளவு சுயேச்சைகள் களத்தில் தோன்றும் ஒரு நிலைமையும் ஏற்பட்டிருக்காது. ஏனென்றால் தமிழ்க் கட்சிகளின் தோல்விதான் இம்முறை தேர்தல் களத்தில் சுயேச்சைகள் அதிகம் பெருகுவதற்கு பிரதான காரணம் ஆகும்.

https://athavannews.com/2024/1407954

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.