Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது

February 13, 2025

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு அதன் பிரதிவாதி ஒருவரை ஆள்மாற்றம் செய்ய இடமளிப்பதா? என்பது குறித்து ஆராய்வதற்காக ஒத்தி வைக்கப்பட்டது.

இதன்படி எதிர்வரும் ஜூன் மாதம் 4ஆம் வரை வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அந்தத் திகதியில் பிரதிவாதி ஒருவரை மாற்றுவது குறித்துத் தீர்மானிக்கப்படும். அதன் பின்னரே வழக்கின் விசாரணை பற்றி ஆராயப்படும்.
இன்று (13) இந்த வழக்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி பயஸ் ரஸாக் முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே வழக்கு இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டது.

வழக்கை இணக்கமாக முடிவுறுத்துவதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்வதற்காகவே இன்று (13) வழக்கு நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டது. எனினும் பிரதிவாதி ஒருவரை ஆள்மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

https://www.ilakku.org/the-case-against-the-tamil-arasu-party-was-postponed-again/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக்கட்சியை மெல்ல மெல்ல அழிக்கும் சுமந்திரன்-4 மாதங்களுக்கு வழக்கு ஒத்திவைப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு அதன் எதிராளி ஒருவரை ஆள்மாற்றம் செய்ய இடமளிப்பதா என்பது குறித்து ஆராய்வதற்காக வரும் ஜீன் மாதம் நான்காம் திகதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது.

அந்தத் திகதியில் எதிராளி ஒருவரை மாற்றுவது குறித்துத் தீர்மானிக்கப்படும். அதன் பின்னரே வழக்கின் விசாரணை பற்றி ஆராயப்படும்.

இன்று இந்த வழக்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி பயஸ் ரஸாக் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே வழக்கு இவ்வாறு தள்ளி வைக்கப்பட்டது.

வழக்கை இணக்கமாக முடிவுறுத்துவதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்வதற்காகவே இன்று வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும், வழக்கின் எதிராளிகளான சிறீதரன் எம்.பி., குகதாசன் எம்.பி. மற்றும் முன்னாள் எம்.பி. யோகேஸ்வரன் ஆகியோர் சார்பில் வழக்கை முடிவுறுத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை குறித்து இன்றைய விசாரணையில் கடும் விவாதங்கள் இடம்பெற்றன.

இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கட்சியின் மத்திய குழுவில் ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டு, அது பற்றித் தாம் ஒரு எதிராளி என்ற முறையில் நீதிமன்றத்திற்கு விவரமாக விடயங்களைச் சமர்ப்பித்jpருக்கையில், மேற்படி மூன்று எதிராளிகளும் கட்சிக்குத் தெரியாமல் - கட்சியை இருட்டில் வைத்துக்கொண்டு - தம்பாட்டில் ஒரு திட்டத்தை, அதுவும் முன்னைய இணக்க ஏற்பாடுகளுக்கு மாறாக முன்வைத்து, இணக்கத்துக்கான வாய்ப்பை வேண்டுமென்றே குழப்பி அடிக்க முயன்றுள்ளனர் என்று எதிராளிகளில் ஒருவரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சுமந்திரன் தமது தரப்பில் தாமே முன்னிலையானார். கட்சியின் செயலாளர் மருத்துவர் ப. சத்தியலிங்கம் மற்றும் நிர்வாகச் செயலாளர் குலநாயகம் ஆகியோர் சார்பில் சட்டத்தரணி சயந்தன் முன்னிலையானார்.

கட்சியின் கொழும்புக் கிளையின் தலைவர் இரத்தினவடிவில் சார்பிலும் சட்டத்தரணி ஒருவர் முன்னிலையானார்.

சுமந்திரன், சத்தியலிங்கம், குலநாயகம், இரத்தினவடிவேல் ஆகிய எதிராளிகள் கட்சியின் மத்திய குழுத் தீர்மானபடி 156 உறுப்பினர்களுடன் கட்சியின் மாநாட்டை நடத்துவதற்கான இணக்கத் திட்டத்துக்குத் தாங்கள் சம்மதிக்கின்றார்கள் எனத் தெரிவித்தனர்.

அதேசமயம் சிறீதரன், குகதாசன், யோகேஸ்வரன் ஆகியோர் 324 உறுப்பினர்களுடன் கட்சியின் மத்திய குழுவை கூட்டும் திட்டத்தை வலியுறுத்தினர்.

இதையே ஆரம்பத்தில் எதிராளியான சுமந்திரன் தெரிவித்திருந்தார் என்று அவர்கள் மூவர் சார்பிலும் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி விவேகானந்தன் புவிதரன் தெரிவித்தார்.

வழக்கின் எதிராளிகளுக்கு இடையே கருத்து முரண்பாடு இருப்பதை விசனத்துடன் சுட்டிக்காட்டிய வழக்காளி தரப்பு சட்டத்தரணி, இக்காரணத்தால் இணக்கமான தீர்வு காண்பதற்கான வாய்ப்புகள் அருகி உள்ளன என்றும், வழக்கு விசாரணை நடத்தியே முடிவு காண வேண்டும் எனவும் சுட்டி காட்டினார். இச்சமயத்தில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வழக்கின் எதிராளிகளில் ஒருவரான கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அப்பதவியிலும் இல்லை, அவர் உயிரோடும் இல்லை என்று சுட்டிக் காட்டப்பட்டது. அதனால், அந்த இடத்துக்குப் பதில் தலைவரின் பெயரை வழக்கில் எதிராளியாகச் சேர்ப்பதா என்பது குறித்துத் தீர்மானிப்பதற்காக வழக்கு [ஜூன் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அந்தத் திகதியில் கட்சியின் பதில் தலைவர் எனக் கருதப்படுபவர் வழக்காளியாகச் சேர்க்கப்பட வேண்டுமா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது.

அந்த விடயம் தீர்மானிக்கப்பட்ட பின்னரே வழக்கை விசாரிப்பது குறித்த முடிவை நீதிமன்றம் எடுக்கும் என்றும் கூறப்படுகின்றது.அதனால் இந்த வழக்கு விசாரணைக்கு வர நீண்ட காலம் செல்லும் என்று சட்ட வட்டாரங்கள் குறிப்பிட்டன

 

https://www.thaarakam.com/news/f0ee6783-0a4a-44df-9662-2db016d6623c

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.