Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

26 Feb, 2025 | 05:34 PM

image

(எம்.மனோசித்ரா)

'உலகலாவிய விசேட முன்னேற்றங்கள்' குறித்த  மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  வியாழக்கிழமை (27) இந்தியா செல்லவுள்ளார். உலகலாவிய முக்கிய இராஜதந்திரிகளின் பங்கேற்புடன் நாளை வெள்ளிக்கிழமை புதுடில்லியில் இந்த கலந்துரையாடல் ஆரம்பமாகவுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதம விருந்தினராக பங்கேற்கவுள்ள இந்த கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன், கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீவன் ஹாபர், அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டோனி எபொட் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன் போது தென்னாசியா தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறப்புரையாற்றவுள்ளார். அத்தோடு இவ்விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன், முன்னாள் ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்க விசேட சந்திப்பிலும் கலந்து கொள்ளவுள்ளார்.

அத்தோடு இந்தியாவிலுள்ள முக்கிய தொழிலதிபர்களுடனான சந்திப்பிலும் முன்னாள் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார். ரணில் விக்கிரமசிங்க குறுகிய காலத்துக்குள் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் இரண்டாவது முக்கிய விஜயம் இதுவாகும். எதிர்வரும் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அவர் நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா செல்கிறார் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் - மோடி டெல்லியில் பேச்சு

02 MAR, 2025 | 09:13 AM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

டெல்லிக்கு விஜயம் செய்துள்ள  முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று சனிக்கிழமை (01)  இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

பலதரப்பட்ட பிரச்சினைகளை தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவின் கண்ணோட்டத்தை பாராட்டியதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

'உலகளாவிய விசேட முன்னேற்றங்கள்' குறித்த  மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வியாழக்கிழமை இந்தியா சென்றார்.

உலகலாவிய முக்கிய இராஜதந்திரிகளின் பங்கேற்புடன் கடந்த இருநாட்களாக இடம்பெற்ற மாநாட்டில் கலந்துகொண்டார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதம விருந்தினராக பங்கேற்றதுடன், இந்த கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீவன் ஹாபர், அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டோனி எபொட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதன் போது தெற்காசிய புவிசார் அரசியல்  தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறப்புரையாற்றினார். 

இதன் போதே இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து கலந்துரையாடினார். 'எனது நண்பர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். அவருடனான உரையாடல்களை நான் எப்போதும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன். பல்வேறு பிரச்சினைகள் குறித்த ரணில் விக்கிரமசிங்கவின் கண்ணோட்டத்தைப் பாராட்டியிருக்கிறேன் என சந்திப்பு குறித்து பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களுடனான சந்திப்பிலும் பங்கேற்ற ரணில் விக்கிரமசிங்க, இன்று ஞாயிற்றுக்கிழமை (02) நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/208029

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.