Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாடும் போது நீ தென்றல் காற்று

அவள் துன்பத்தின் குவியலாகக் காணப்பட்டாள். சீரற்ற முறையில் அள்ளிப் போடப்பட்டிருந்த போர்வைகளும், சில பைகளும் நிறைந்த ஒரு நீல நிற ஷொப்பிங் டிரொலிக்குப் பக்கத்தில் அவள் அமர்ந்திருந்தாள். அவளது  உடலை ஒரு தடிமனான ஜக்கெட் மூடியிருந்தது. இத்தாலியின் தென் பகுதியில் உள்ள  அவெலினோ நகரத்தின் வீதியில் யாருமற்று அவள் அநாதையாக இருந்தாள்.

என்ஸோ கோஸ்டான்சா என்பவர், வீதியில் வீடற்றவளாக அமர்ந்திருந்த அந்தப் பெண்ணை தற்செயலாகக் கண்டு கொண்டார். அவருக்கு அவளை யாரென்று  தெரியாது. ஆனாலும் அவளுக்கு ஏதாவது வழியில் உதவ வேண்டுமென நினைத்தார். அவள் வீதி ஓரத்தில் அமர்ந்திருந்த கோலத்திலேயே ஒரு  புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டார்

IMG-8178.jpg

அவள் தெருவிலேயே தூங்கி அல்லல் படாமல் இருக்க, வீடற்றவர்களைப் பொறுப்பேற்று பராமரிக்கும் நிலையத்துக்கு  அழைப்பை மேற்கொண்டு, அவளுக்கு உதவும்படியும் கேட்டுக் கொண்டார். அவர்களும் அவளுக்கு உதவ முன் வந்தார்கள். ஆனால் அவள் யாருடனும் தான் போக மாட்டேன் என பிடிவாதமாக மறுத்து விட்டாள். அவளிடம் பேச்சை வளர்த்ததில் அவள் நெதர்லாந்தைச் சேர்ந்தவள் என்ற விபரம் மட்டும் தெரிய வந்தது. வேறு வழிகளில் அவளுக்கு உதவலாமா என, என்ஸோ அவளிடம் கதைக்க எத்தனித்த போது, அவள் அந்த இடத்தைவிட்டு விலகி நடக்க ஆரம்பித்தாள்.

"இன்று காலையிலிருந்து  இவள் இலக்கின்றி அலைந்து திரிந்து கொண்டு தனக்குத்தானே பேசிக்கொண்டிருக்கிறாள். தெற்கு இத்தாலியில் கடும் குளிர் நிலவும் காலம் இது. குளிரைத் தாங்கப் போதுமான உடைகளை அவள் அணிந்திருக்கவில்லை. என்னைப் போன்று பலரும் அவளுக்கு உதவ முன் வந்தார்கள். எல்லாமே வீணாகிப் போனது. யாருடைய உதவியையும் அவள் ஏற்பதாக இல்லைஎன்னுடைய நகரத்தில் ஒரு பலவீனமான பெண் இத்தகைய சூழ்நிலையில் பல நாட்கள் வாழ்வது வேதனையைத் தருகின்றது. எதுவுமே செய்ய முடியாத நிலையில் நான் இருக்கிறேன். என்னுடைய இந்த நிலையை  நான் அவமானமாக உணர்கிறேன்என்ற நிலைத்தகவலை, தான் எடுத்த அவளது புகைப்படத்துடன்  என்ஸோ பிப்ரவரி 21 அன்று முகநூலில் பதிவிட்டார்.

என்ஸோ பதிவிட்ட அந்தத் தகவல் பலன் கொடுத்தது. இரண்டு நாட்களுக்குப் பிறகு ரொபின் என்பவர் நெதர்லாந்தில் இருந்து என்ஸோவின் முகநூல் பதிவுக்குப் பதில் போட்டிருந்தார். அந்தப் பதிவில்,   “அவளது பெயர்    ராணியா ஜெரிரி (39). 2008இல் யேர்மனியத் தொலைக்காட்சி ஒன்றில், ’யேர்மனி சுப்பர்ஸ்ராரைத் தேடுகின்றது’  என்ற பாடகர் நிகழ்ச்சியில், தெரிவு செய்யப்பட்ட பத்துப் பேரில் ஐந்தாவதாக வந்திருந்தவள்தான்  ராணியா ஜெரிரி ராணியா பாடகி மட்டுமல்ல ஒரு வானொலித் தொகுப்பாளரும் கூட ராணியாவின் தாய் பல ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட அவள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு  விட்டாள். அவளுக்கு ஒரு சகோதரன் இருக்கின்றான். அவன் நெதர்லாந்தில் வசிக்கின்றான். அல்ஜீரியரான அவளது தந்தைக்கு அவளுடன் எந்த தொடர்பும் இல்லை. மனச்சோர்வில் அவள் உட்கொண்ட மாத்திரைகளே அவளது இந்த நிலைக்கு காரணம் எனக் கருதுகிறோம்என்றிருந்தது.

IMG-8179.jpg

ராணியா ஜெரிரியின் நண்பர் ரொபின், என்ஸோவுக்கு ஒரு வீடியோ பதிவையும் அனுப்பியிருந்தார். அதில், “உன்னைப் பெரிதும் தவறவிட்டு விட்டோம். நாங்கள், உன்னை நெதர்லாந்தில் பெரிதாகத் தேடினோம். நீ கிடைக்கவில்லை. உனக்கு உதவி ஏதும் தேவையெனில் நாங்கள் அவற்றைத் தரத் தயாராக இருக்கின்றோம். உனக்கு எங்களது உதவி ஏதும் தேவையில்லை என்று நீ கருதினால் கூட அதை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். நீ எங்களுடன் உரையாடினால் போதும். அதனால் நாங்கள் பெரிதும் மகிழ்ச்சி கொள்வோம். உனது குரலைக் கேட்க பெரிதும் விரும்புகின்றோம்என்றிருந்தது.

அந்த வீடியோவை  ராணியாவி டம் என்ஸோ காட்டிய பொழுது அவள் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் என்ஸோ, அந் நகர மேஜரைத் தொடர்பு கொண்டு அவளது நிலைக்கு உதவும்படி கேட்டுக் கொண்டார். மீண்டும்    ராணியாவிடம் இருந்து மறுப்பு வந்தது. “நான் என் சுய விருப்பில்தான் தெருவில் வசிக்கிறேன்என்பது அவளது பதிலாக இருந்தது.

பெப்ரவரி 24,25 இல் இரவு மீண்டும் கடுமையான குளிர். ராணியா குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தாள். அவளது மோசமான நிலையைப் புகைப்படம் எடுத்து மீண்டும் என்ஸோ முகநூலில் பதிய, அவரது நட்பு வட்டங்கள்  ஒன்று சேர்ந்து உதவ முன் வந்தார்கள். இந்தமுறை   ராணியா அசைந்து கொடுத்தாள். அவளுக்கான மருத்துவ உதவிகள், சூடான உணவு, தங்குவதற்கு ஹோட்டல் வசதிகள் கிடைத்தன. 

ராணியாவின் நிலையில் இப்பொழுது நல்ல முன்னேற்றம் வந்திருக்கின்றது. மார்ச் 1இல் இருந்து தொழில் அதிபர் ஒருவரின் வீட்டைப் பராமரிக்கும் வேலையை அவள் ஏற்றிருக்கின்றாள். இந்த நிலை தொடர்ந்தால் மீண்டும் அவள் பாடலாம், நல்லதொரு வாழ்வை அவள் தொடரலாம்.

வீதிகளில் வீழ்ந்திருப்போருக்குப் பின்னால் பல வலிமிக்க கதைகள் இருக்கும். நாங்கள் அவர்களைக் கடந்து போகும் போது, எங்கள் அவசரங்களில் இதை எல்லாம் எண்ணிப் பார்ப்பதில்லை. என்ஸோ போன்றவர்களால் மட்டும் அது முடிகிறது.

படங்கள் விக்கிபீடியா, முகநூல்

  • கருத்துக்கள உறவுகள்

ஏனய்யா..27ஆம் ஆண்டு சுய ஆக்கங்கள் பகுதிக்குள் பகிரலாம் தானேல.பரும் பார்ப்பார்கள் தானே..,போற , வாற இடத்தில் யாரும் இப்படி நின்றால் யாரோடும் பேச மாட்டேன் ஆனால் வாத்தியங்கள் வாசித்துக் கொண்டு பக்கத்தில் ஏதாவது சின்ன பை வைத்திருந்தால் என்னிடம் எவ்வளவு இருக்கோ அவ்வளவையும் அவர்களது பைக்குள் வைத்து விட்டு போய் விடுவேன்.இது பொய், புரட்டு அல்ல உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமாய் பலர் அந்தத் தெருவோர வாழ்க்கையையே விரும்புகின்றனர் . ........ இதற்கெல்லாம் காரண காரியங்கள் கிடையாது . ....... நம்மால் முடிந்த நேரம் உணவோ பணமோ குடுத்து விட்டு செல்வதுண்டு . ......... ! 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, யாயினி said:

ஏனய்யா..27ஆம் ஆண்டு சுய ஆக்கங்கள் பகுதிக்குள் பகிரலாம் தானேல.பரும் பார்ப்பார்கள் தானே..

யாயினி, இது ஒருசெய்தி. அதனால்தான் இங்கே பகிர்ந்தேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.