Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

06 MAY, 2025 | 04:16 PM

image

உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா நாளை புதன்கிழமை (07) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

உலக வங்கியின் தலைவர் சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். 

இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தி சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் முயற்சியின் ஒரு முக்கிய அங்கமாக அஜய் பங்காவின் வருகை உள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் அஜய் பங்கா இலங்கைக்கு வருகை தரவுள்ளார். 

அஜய் பங்காவின் வருகை உலக வங்கி மற்றும் இலங்கைக்கும் இடையிலான 70 ஆண்டு கூட்டாண்மையை பிரதிபலிக்கிறது. 

அஜய் பங்காவின் வருகையானது இலங்கையின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு , முதலீட்டை அதிகரிப்பது  ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.

உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா இலங்கை வருகையின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,பிரதமர் ஹரிணி அமரசூரியா மற்றும் தனியார் துறைத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

https://www.virakesari.lk/article/213843

  • கருத்துக்கள உறவுகள்

அய் …….. டாலர் வரப் போகுது. 😂

தமிழ்ப் பகுதியில் இன்னும்….. நாலு விகாரை கட்டுறம், பிரித் ஓதுறம், பால் சோறு தின்னுறம். 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலக வங்கிக் குழுமத்தின் தலைவர் பிரதமருடன் சந்திப்பு

Published By: DIGITAL DESK 2

08 MAY, 2025 | 12:17 PM

image

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் உலக வங்கி குழுமத் தலைவர் அஜய் பங்காவுக்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (7) பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கையின் அபிவிருத்தி முன்னுரிமைகள் மற்றும் மூலோபாய ஒத்துழைப்பினை தொடர்ச்சியாக பேணுவது குறித்து கலந்துரையாடுவதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.

இலங்கை முகம்கொடுத்த அண்மைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உலக வங்கி வழங்கிய ஆதரவிற்காக உலக வங்கிக் குழுவின் தலைவருக்கு பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்ததுடன், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பேண்தகு அபிவிருத்திக்கான அரசாங்கத்தின் திட்டம் குறித்தும் வலியுறுத்தினார்.

அரசாங்கத்தின் பொருளாதார சீர்திருத்த முறைமையைப் பாராட்டிய உலக வங்கி குழுமத் தலைவர் பங்கா, பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் வேலை தரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

சுகாதாரம், கல்வி, விவசாயம், சுற்றுலா மற்றும் உற்பத்தித் தொழிற்துறைகள் போன்ற முக்கியமான துறைகளில் முதலீடு செய்வது குறித்து இந்த கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.

குறிப்பாக விவசாயம் மற்றும்  அதன் முக்கிய துறைகளை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதன் சாத்தியக்கூறுகள் மற்றும் முக்கியத்துவம் குறித்தும் பங்கா தனது கருத்துக்களை தெரிவித்தார்.

புத்தாக்கம் மற்றும் உற்பத்தித்திறனுக்காக இந்த செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதன் சாத்தியப்பாடுகள் குறித்து ஆராய்வதை இலங்கையும் ஊக்குவித்தது.

வளர்ந்து வரும் தொழிற் துறைகளின் தேவைகளை சிறப்பாகப் பூர்த்தி செய்யும் வகையில் சுகாதாரக் கொள்கையை வலுப்படுத்தவும், தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வியை விரிவுபடுத்தவும் அரசாங்கம் தொடர்ந்து பாடுபட்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பில் உலக வங்கிக் குழுவின் விசேட ஆலோசகர் ட்ரெவர் கின்கெய்ட், மாலைத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான துறை பணிப்பாளர் டேவிட் சிஸ்லன், மாலைத்தீவு மற்றும் இலங்கைக்கான தேசிய பணிப்பாளர் கெவோர்க் சர்க்சியன், சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் தெற்காசியாவிற்கான பிராந்திய பணிப்பாளர் இமாத் ஃபகூரி இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா மற்றும் இலங்கைக்கான மாற்று நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பி.கே.ஜி. ஹரிச்சந்திர, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சின் பொருளாதார விவகார (இருதரப்பு) பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர் நாயகம் தர்ஷன பெரேரா மற்றும் அவ் அமைச்சின் வெளிவிவகாரத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் தம்மிக பிரேமரத்ன ஆகியோர் பங்குபற்றினர்.

WhatsApp_Image_2025-05-08_at_11.05.57.jp

WhatsApp_Image_2025-05-08_at_11.05.57__1WhatsApp_Image_2025-05-08_at_11.05.58.jp

https://www.virakesari.lk/article/214167

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.