Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

18 MAY, 2025 | 08:08 PM

image

பொறுப்புக் கூறலுக்கும் உண்மை, நீதி ஆகியவற்றை அடைவதற்கும் எடுக்கப்படும் சுதந்திரமான சர்வதேச முயற்சிகளை கனடா தொடர்ந்தும் ஆதரிக்கிறது என அந்நாட்டின் பிரதமர் மார்க் கார்ணி தெரிவித்துள்ளார்.

தமிழ் இனப்படுகொலை நினைவேந்தலை முன்னிட்டு கனேடியப் பிரதமர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் ஆயுதப்போர் முடிவடைந்து இன்றுடன் 16 வருடங்கள் ஆகிவிட்டன. 26 வருடங்களுக்கும் அதிகமாக நீடித்த இந்தப் போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இந்த தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளில், இழந்த உயிர்களையும் சிதறிப்போன குடும்பங்களையும் பேரழிவடைந்த சமூகங்களையும் இன்றுவரை காணாமல் ஆக்கப்பட்டவர்களாகவே இருப்போரையும் நாம் நினைவுகூருகின்றோம்.

அத்துடன் தமது அன்புக்குரியவர்களின் நினைவுகளைச் சுமக்கும் கனேடிய தமிழ்ச் சமூகத்தையும் கனடாவின் பல பகுதிகளிலும் திட்டமிடப்பட்டுள்ள நினைவேந்தல் நிகழ்வுகளையும் நாம் மனதிற்கொள்கின்றோம்.

பொறுப்புக்கூறலுக்கும் உண்மை, நீதி ஆகியவற்றை அடைவதற்கும் எடுக்கப்படும் சுதந்திரமான சர்வதேச முயற்சிகளைக் கனடா தொடர்ந்தும் ஆதரிக்கின்றது.

இந்த நினைவேந்தல் நாளை நாம் கடைப்பிடிக்கும் போது, துணிவுடன் அஞ்சலி செலுத்துவதற்கான உறுதிப்பாட்டையும், நீடித்திருக்கும் அமைதிக்காகச் செயற்படுவதற்கான உறுதிப்பாட்டையும் அது பலப்படுத்தட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/215099

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இடம்பெற்றது இனஅழிப்பு - ராஜபக்ச அரசாங்கத்தின் யுத்த குற்றங்களை ஒருபோதும் மறக்ககூடாது - கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர்

Published By: RAJEEBAN

19 MAY, 2025 | 01:14 PM

image

இலங்கையில் இடம்பெற்றது  படுகொலைகள்  மாத்திரமல்ல, இனஅழிப்பு என தெரிவித்துள்ள கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர் பியர் பொலியியர்(Pierre Poilievre,)   ராஜபக்ச அரசாங்கத்தின் யுத்த குற்றங்களை ஒருபோதும் மறக்ககூடாது. அந்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டனையின்றி தப்ப அனுமதிக்க கூடாது என தெரிவித்துள்ளார்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ள அவர், மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

வரலாற்றை திரும்பிப்பார்க்கும் அனைவரும் பெருமிதமான தருணங்களையும் வலிமிகுந்த தருணங்களையும் நினைவுகூருவார்கள்.

தமிழ் இனப்படுகொலை நினைவுநாளில் கடந்த நூற்றாண்டின் மிகப்பெரிய துயரங்களில் ஒன்றான தமிழ் இனப்படுகொலை குறித்து எங்கள் எண்ணங்களை திருப்புகின்றோம்.

பல தசாப்தங்களாக இலங்கை வன்முறையாலும் இரத்தக்களறியாலும் பாதிக்கப்பட்டது, ஏற்கனவே பல வருடங்களாக துயரங்களை அனுபவித்த நிலையில் 2009 மே மாதம் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டமை, தனித்துவமான பயங்கரம் மற்றும் ஈவிரக்கமற்ற தன்மை ஆகியவற்றின் தருணமாகும்.

இது வெறுமனே படுகொலையில்லை இது இனஅழிப்பு

16 வருடங்களிற்கு பின்னர் பாதிக்கப்பட்டவர்களை நாங்கள் நினைவுகூருகின்றோம், நீதிக்கான அவசர தேவையை அங்கீகரிக்கின்றோம்.

ராஜபக்ச அரசாங்கத்தின் யுத்த குற்றங்களை ஒருபோதும் மறக்ககூடாது. அந்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டனையின்றி தப்ப அனுமதிக்க கூடாது.

கனடா வலுவான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும், பொறுப்புக்கூறலை கோரவேண்டும்.

கனடா யுத்தகுற்றவாளிகளிற்கான புகலிடமாக ஒருபோதும் விளங்ககூடாது.

தமிழ் இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் உண்மையான விளைவுகளை அனுபவிப்பதை உறுதி செய்வதற்கு கென்சவேர்ட்டிவ் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கும்.

கனடாவில் உள்ள தமிழ் சமூகம் நம்பமுடியாத மீள் எழுச்சி தன்மையை வெளிப்படுத்தியுள்ளது. வேதனையை வலிமையாக மாற்றியுள்ளது, எங்கள் நாட்டை வளப்படுத்தியுள்ளது.

இந்த இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களை நாங்கள் நினைவுகூரும் இந்த தருணத்தில் அனைவருக்கும் நீதி மற்றும் சமாதானத்திற்கான எங்கள் அர்ப்பணிப்பை மீளவலியுறுத்துகின்றோம்.

எங்கள் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் ராஜபக்ச அரசாங்கத்தை எதிர்த்துநின்றார் என்பது குறித்து நான் பெருமிதம் அடைகின்றேன்.

நான் ராஜபக்ச அரசாங்கம் தங்கள் குற்றங்களிற்காக பதில் கூருவதை உறுதி செய்வதற்காக தொடர்ந்தும் போராடுவேன், சர்வதேச நீதிமன்றத்தில் அவர்களை பாரப்படுத்தும் நடவடிக்கைகளை எடுப்பேன்.

https://www.virakesari.lk/article/215141

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் நீதிநிலைநாட்டப்படுவதை உறுதி செய்வதற்காக கனடா சர்வதேச சமூகத்துடன் இணைந்து நடவடிக்கைகளை எடுக்கும் - ஹரி ஆனந்த சங்கரி

Published By: RAJEEBAN

19 MAY, 2025 | 05:08 PM

image

இலங்கையில் நீதிநிலைநாட்டப்படுவதை உறுதி செய்வதற்காக சர்வதேச சமூகத்துடனும், சர்வதேச பங்காளிகளுடனும் கனடா அரசாங்கம் இணைந்து செயற்படும் என தெரிவித்துள்ள அந்த நாட்டின் பொதுபாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி செப்டம்பரில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் அறிக்கை தொடர்பிலும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்

கனடாவின் ஒட்டாவாவில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

250518_Ottawa_3.jpg

கனடாவின் ஒட்டாவாவில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பெருமளவு தமிழ் மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

ஒட்டாவா தமிழ் சங்கம், தேசிய தலைநகர் பிராந்திய தமிழ் சங்கம், ஒட்டாவா தமிழ் கலாச்சார மற்றும் தொழில்நுட்ப அகடமி, ஒட்டாவா தமிழ் மூத்தோர் சங்கம் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

கனேடிய தேசிய கீதத்துடன் பிரெட்பாரெட் அரங்கில் ஆரம்பமான இந்த நிகழ்வில் தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டதுடன் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் இனப்படுகொலையின் போது கொல்லப்ட்டவர்களை நினைவுகூரும் வகையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

சுதந்திரத்தின் பின்னர் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் முள்ளிவாய்க்காலிலும் உயிரிழந்தவர்களிற்கு ஆழந்த இரங்கல்களை வெளியிட்ட  கனடாவின் பொதுபாதுகாப்பு அமைச்சர் ஆனந்த சங்கரி, ஒட்டவா நினைவேந்தல் நிகழ்வில் முள்ளிவாய்க்காலில் உயிர்பிழைத்தவர்கள் பிரசன்னமாகியிருப்பதாக தெரிவித்தார்.

அவர்களின் மீள் எழுச்சிதன்மை நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான அவர்களின் அசைக்க முடியாத உறுதிப்பாடு குறித்தும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.

ஜனவரி மாதம்  இலங்கைக்கான விஜயம் குறித்து தனது உரையில் குறிப்பிட்ட ஹரி ஆனந்தசங்கரி, அங்கு முள்ளிவாய்க்காலில் உயிர்பிழைத்தவர்களை சந்தித்து உரையாடியதாக  குறிப்பிட்டார்.

வடக்கு கிழக்கில் தமிழர்கள் அமைதியாக வாழ்வதை உறுதி செய்வதற்கும், 16 வருடங்களிற்கு முன்னர் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு பொறுப்புக்கூறப்படுவதையும் உறுதி செய்வதற்கும் உயிர்பிழைத்தவர்களின் குரல்களை ஒலிக்கச்செய்வதன் அவசியத்தை ஹரி ஆனந்தசங்கரி எடுத்துரைத்தார்.

நீதிநிலைநாட்டப்படுவதை உறுதி செய்வதற்காக சர்வதேச சமூகத்துடனும், சர்வதேச பங்காளிகளுடனும் இணைந்து பணியாற்றும் கனடா அரசாங்கத்தின் நோக்கம் குறித்து குறிப்பிட்ட அவர், செப்டம்பரில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் அறிக்கை தொடர்பிலும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/215162

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.