Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழரையும் புலிகளையும் வேறுபடுத்திக் காட்ட முயல்வது வெறும் முட்டாள்தனம் - ஜெயானந்த மூர்த்தி

Featured Replies

தமிழ் மக்களையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் வேறுபடுத்திக் காட்ட அரசு முனைந்தால் அது முட்டாள்தனம். கடைசிவரை தமிழ் மக்களையும் புலிகளையும் பிரிக்க எந்த ஒரு சக்கதியாலும் முடியாது என்று அடித்துக் கூறினார் மட்டு மாவட்ட த.தே.கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தி.

வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இப்படிக் கூறினார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களினதும் மட்டுமல்ல, தமிழ் பேசும் மக்கள் அனைவரினதும் உரிமைக்காகத் தமது உயிரையும் தியாகம் செய்து வருகின்றானர் இதனை சிறு குழந்தையும் அறியும்.

ஆனால்,'த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குகின்றோம்'. என்று பஸில் நீலிக்கண்ணீர் வடிக்கின்றார். இது சிறுபிள்ளைத் தனமானது.

புலிகளால் எமக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கினறது என்று பம்மாத்துக் காட்டிக் கொண்டு அரசே எமக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம், என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது.

இந்தச் சபையில் பேசிய மட்டக்களப்பு மாவட்ட எம்.பியும் அமைச்சருமான அமீர் அலி இந்தச் சபையில் 'கிழக்கின் உதயம்' என்று அப்பட்டமான பல பொய்களை இங்கு கூறினார். அது மக்களை தவறாக வழிநடத்தும் செயலாகும்.

தேசிய வருமானத்தில் 20 சதவீதத்ததைப் பாதுகாப்பு அமைக்சுக்கு ஒதுக்கி தமிழர்களை முற்றும் முழுதாக அழித்து ஒழிக்கத் திட்டமிடபட்டுள்ளது.

ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் ஒரு பெரும் யுத்தத்தை ஊக்குவிக்கும் 'யுத்த பட்ஜெட்' என்றே கூறவேண்டும்.

தென்பகுதி சிங்கள மக்களை கவர்ந்து தன்பக்கம் வைத்துக் கொள்ளும் நோக்குடன் ஜனாதிபதி இந்த வரவு செலவுத் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

முன்னைய அரசுகள் எதுவாக இருந்தாலும் போர் நடவடிக்கைகளைக் காட்டியே சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்று அரசியல் நடத்தி வந்துள்ளனர்.

நாட்டின் அபிவிருத்திக்காக சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் இது என்றும கூறப்பட்டாலும் வடக்கு கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு அதில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தமிழ் மக்களை குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணத் தமிழ் மக்களை மாற்றந் தாய் மனப்பான்மையுடனேயே நீங்கள் நோக்குகின்றீர்கள்.

கிழக்கு மாகாணத்தில் அரசு மேற்கொண்ட படை நடவடிக்கைகளினால் பல லட்சம் தமிழ் மக்கள் இடம் பெயர்ந்துன்ளனர்.

இப்பொழுது மீள்குடியேற்றம் என்ற பெயரில் பம்மாத்து காட்டப்படுகின்றது.

விவசாயம், கால்நடை அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறுகின்றார். அனால், கிழக்கு மகாணத்தில் பல ஆயிரம் ஏக்கர் வயல் காணிகளுக்கு இன்று விவசாயம் செய்ய இராணுவம் தடை விதித்துள்ளது.

பல ஆயிரம் கால்நடைகள் கட்டாக்காலிகளாக நிர்க்கதியாக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் தமது கால்நடைகளைப் போய்ப் பார்க்கக் கூட அனுமதியில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய எம்மால் எமது பிரதேசங்களுக்குச் செல்ல முடியவில்லை. எமக்குப் பாதுகாப்பு வழங்க அரசு முன்வரவில்லை.

ஆனால், உலக நாடுகளின் உதவியைப் பெற்றக் கொள்ளும் நோக்குடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வதாக பஸில் பம்மாத்துக் காட்டுகின்றார் என்றார்.

நன்றி :சுடர் ஒளி

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு உயிராபத்து ஏற்பாட்டால் அதற்கு அரசே பொறுப்பு - அரியநேத்திரன் எம்.பி

த.தே.கூ அரசுடன் சேராவிட்டால் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படமாட்டாது என்று பஸில் கூறியிருப்பதன் மூலம் கூட்டமைப்பின் இரண்டுநாடாளுன்ற ஊறுப்பினர்களினதும் கொலைகளுக்கு அரசுதான் காரணம் என்பது புலனாகியிருக்கின்றது. கூட்டமைப்பின் தற்போதைய 22 நாடாளுமன்ற உறுப்பினர்களின் உயிர்களுக்கு ஏதும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கும் அரசே பொறுப்பேற்க வேண்டும்.

இப்படிக் கூறியுள்ளார் த.தே.கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் அவர்கள்

நாடாளுமன்றத்தில் நேற்று இடம் பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றி போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் கூறியவை :-

வரவ செலவுத் திட்டத்தை நாடாளுமன்றில் சமர்ப்பித்த ஜனாதிபதி கவிதைப் போட்டிக்குக் கவிதை வாசிக்கின்றமை போலவும் கந்தபுராணம் படிப்பது போலவும் அதை வாசித்தார்.

மறுநாள் அவரது தம்பி பஸில் அந்த வரவு செலவுத்திட்டத்திற்கு கந்தபுராணத்திற்கு மேலதிக விளக்கங்களைக் கொடுத்தார்.

முழுக்க முழுக்க தமிழர்களைக் கொன்று குவிப்பதற்காக அதிக முக்கியத்துவம் கொடுக்கும் அதிக நிதியை ஒதுக்கியிருக்கும் இந்த வரவு செலவுத் திட்டத்தை த.தே.கூட்டமைப்பு ஒருபோதும் ஆதரிக்காது.

இந்த இந்த வரவு செலவுத் திட்டத்தில் உரிய அபிவிருத்தித் திட்டங்கள் எவையும் இல்லையென்று கூறிக்கொண்டு ஐ.தே.கட்சியும் ஜே.வி.பியும் இந்த இந்த வரவு செலவுத் திட்டத்தை எதிர்க்கின்றன.

பாதுகாப்புச் செலவினம் அதிகரிக்கப்பட்டிருப்தைக் காரணம் காட்டி அதனடிப்படையில் இந்த வரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்பதற்கு அவர்கள் தயாரில்லை அது தான் இனவாதம்.

நாம் வேறு கட்சிகளின் நிலைப்பாட்டைப் பார்த்து இந்த வரவு செலவுத் திட்டத்தை எதிர்க்கவில்லை. வேறு கட்சிகளுக்காக நாம் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை. எமது எதிர்கால சந்ததியினர்க்காகவே நாடாளுமன்றம் வந்துள்ளோம்.

எமது சந்ததியினருக்காக நாம் உயிரையும் கொடுப்போம். எமது சந்ததியினருக்கு எதிராக இந்த இந்த வரவு செலவுத் திட்டம் உள்ளது என்பதற்காகவே நாம் இதை எதிர்க்கின்றோம்.

த.தே.கூட்டமைப்பினர் அரசுடன் இணைந்தால் மட்டுமே அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவோம் என்று பஸில் கடந்த 9ம்திதி இங்கு பேசும் போது கூறியுள்ளார். அப்படியேன்றால் அரசுடன் இணையாதவர்களுக்குப் பாதுகாப்பு இல்லையா?

கூட்டமைப்பின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் படுகொலைகளுக்கும் இந்த அரசுதான் பொறுப்பு என்பதை இந்தப் பேச்சின் மூலம் பஸில் மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளார். எமது 22 உறுப்பினர்களுக்கும் ஏதும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பையும் அரசேதான் ஏற்க வேண்டும். என்றார் தனது உரையில்.

நன்றி : சுடர் ஒளி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.