Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி தலைமையில் 78ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் இன்று: 4000 படை வீரர்களின் பங்கேற்புடன் மரியாதை அணிவகுப்பு; 2000 பேருக்கு அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தலைமையில் 78ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் இன்று: 4000 படை வீரர்களின் பங்கேற்புடன் மரியாதை அணிவகுப்பு; 2000 பேருக்கு அழைப்பு

Published By: Vishnu

04 Feb, 2026 | 03:45 AM

image

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் 78ஆவது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று புதன்கிழமை இடம்பெறவுள்ளன. கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்க வளாகத்தில் காலை 6.30 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன. இம்முறை சுதந்திர தின நிகழ்வுகள் 'இலங்கையைக் கட்டியெழுப்புவோம்' எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளன. கொழும்பிலுள்ள வெளிநாடுகளின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், அமைச்சர்கள், ஆளும் மற்றும் எதிர்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் என சுமார் 2000 பேருக்கு நிகழ்வுகளில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார். முன்னாள் ஜனாதிபதிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், அவர்கள் கலந்து கொள்வது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். எவ்வாறிருப்பினும் இம்முறை வெளிநாடுகளிலிருந்து விசேட அதிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என பொது நிர்வாக அமைச்சர் ஏ.எச்.எம்.எச்.அபேரத்ன தெரிவித்தார்.

கடந்த ஆண்டு 70 மில்லியன் ரூபாவுக்குள் இந்த பிரதான நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இவ்வாண்டு இதற்காக 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், செலவுகளை 60 - 70 மில்லியன் ரூபாவுக்குள் மட்டுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். சுதந்திர தின நிகழ்வுகள் ஆரம்பமாக முன்னர் காலை 6 மணிக்கு காலி முகத்திடலில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி டீ.எஸ்.சேனாநாயக்கவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

சர்வமத வழிபாடுகள்

அத்தோடு காலை 5.30 மணி முதல் சர்வமத வழிபாடுகளும் இடம்பெறவுள்ளன. பௌத்த மத வழிபாடுகள் கொள்ளுபிட்டி - தர்மகீர்த்திராம விகாரையிலும், இந்து மத வழிபாடுகள் மயூராபதி பத்திரகாளி அம்மன் கோவிலிலும், கத்தோலிக்க ஆராதனைகள் பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்திலும், கிருஸ்தவ ஆராதனைகள் கிரிமண்டல மாவத்தை மக்கள் தேவசபை தேவாலயத்திலும், இஸ்லாமிய வழிபாடுகள் கொழும்பு - ஜூம்மா மஸ்ஜித்திலும் இடம்பெறவுள்ளது.

பிரதம அதிதிகள் வருகை

நிகழ்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் காலை 7 மணி முதல் வருகைதரவுள்ளனர். தொடர்ந்து பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரது வருகையைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தேசிய கொடியை ஏற்றி நிகழ்வுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பார். அத்தோடு தாய் நாட்டின் சுதந்திரத்திலும், இறையான்மையிலும் மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டின் நிரந்தர இருப்பிற்காக தமது உயிர்களைத் தியாகம் செய்த அனைத்து இலங்கை பிரஜைகளுக்காகவும் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

4000 வீரர்களின் பங்கேற்புடன் மரியாதை அணிவகுப்பு 

தொடர்ந்து ஜனாதிபதிக்கான மரியாதை வணக்கம் செலுத்தப்பட்ட பின்னர் அவரால் நாட்டு மக்களுக்கு விசேம உரையாற்றப்படும். காலை 8.45 மணி முதல் 9.30 மணி வரை முப்படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படை, தேசிய மாணவர் படையணி என்பவற்றால் மரியாதை அணிவகுப்பு நடத்தப்படும். இதில் 1962 இராணுவத்தினர், 693 கடற்படையினர், 583 விமானப்படையினர், 352 பொலிஸார், 278 சிறப்பு பொலிஸ் பணிப்பிரிவினர், 183 சிவில் பாதுகாப்பு திணைக்களம், 507 தேசிய மாணவர் படையணி, 22 ஓய்வு பெற்ற பாதுகாப்பு படையினர் மற்றும் 22 அங்கவீனமுற்ற பாதுகாப்பு படையினர் உள்ளடங்களாக 4602 படைவீரர்கள் பங்கேற்கவுள்ளனர். மேலும் 7 ஆயுதமேந்திய வாகனங்களும் அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளன. நிகழ்வுகள் நிறைவடைந்த பின்னர் கடற்படையினரால் காலி முகத்திடலில் 25 மரியாதை பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்படவுள்ளன.

போக்குவரத்துக்கு கட்டுப்பாடு

சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு அதிகாலை 4.45 மணி முதல் சுதந்திர சதுக்க வளாகத்தை அண்மித்த வீதிகள் முற்றாக மூடப்படும் என பொலிஸ் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது. நிகழ்வுகள் நிறைவடைந்து பிரதம அதிதிகள் வெளியேறும் வரை குறித்த பாதையூடான போக்குவரத்து முற்றாக தடை செய்யப்படுத் என்பதால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளவாறு மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/237749

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.