Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட, கிழக்கில் யுத்தத்தால் குடியிருப்புக்களை இழந்தவர்களுக்கான வீடமைப்பிற்கான நிதியுதவி 20 இலட்சமாக அதிகரிப்பு - அரசாங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வட, கிழக்கில் யுத்தத்தால் குடியிருப்புக்களை இழந்தவர்களுக்கான வீடமைப்பிற்கான நிதியுதவி 20 இலட்சமாக அதிகரிப்பு - அரசாங்கம்

Published By: Vishnu

18 Feb, 2026 | 04:13 AM

image

(எம்.மனோசித்ரா)

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த நிலைமைகளால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த திட்டத்துக்காக வழங்கப்பட்ட 15 இலட்சம் ரூபா நிதி உதவியை, 20 இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பதில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெளிவுபடுத்திய அமைச்சர்,

வடக்கு, கிழக்கில் யுத்தம் காரணமாக பெரும்பாலானவர்கள் தமது குடியிருப்புக்களை இழந்தனர். அவ்வாறு குடியிருப்புக்களை இழந்தவர்களுக்காக பல்வேறு வீடமைப்புத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 2009ஆம் ஆண்டு முதல் 2025-12-31 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த 277,167 குடும்பங்களைச் சேர்ந்த 919,450 நபர்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டு, அவர்கள் தங்களது சொந்த கிராமங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். அதற்கமைய இவ்வாண்டு ஜனவரி முதலாம் திகதி நிலைவரத்தின் படி, அந்த மாகாணங்களில் இன்னும் தமக்குரிய ஒரு வீட்டைக் கொண்டிருக்காத 13,069 இடம்பெயர்ந்த குடும்பங்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

வீடற்ற இடம்பெயர்ந்த குடும்பங்களில் இரண்டு அல்லது அதற்கும் குறைவான உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு 340 சதுர அடி வீட்டை அமைப்பதற்காக 9 இலட்சம் ரூபாவும், இரண்டுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு 550 சதுர அடி வீட்டை அமைப்பதற்காக 15 இலட்சம் ரூபாவும் நிதியுதவியாக வழங்க இதற்கு முன்னர் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

இந்தத் திட்டம் தொடர்பாக கடந்த ஜனவரி 2ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற முற்போக்கு ஆய்வுக் கூட்டத்தில், பயனாளிகள் குறைந்த வருமானம் பெறுபவர்களாக இருப்பதையும், கட்டுமானப் பொருட்களின் விலை மற்றும் தொழிலாளர் கூலி அதிகரித்துள்ளதையும் கருத்தில் கொண்டு சில மாற்றங்கள் முன்மொழியப்பட்டன.

அதற்கமைய நிர்ணயிக்கப்பட்ட தரத்துடன் குறித்த வீடுகளை அமைக்கும் வகையில், தற்போது வழங்கப்படும் உதவித்தொகையை குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கருதாது, 550 சதுர அடி வீட்டிற்காக 2026ஆம் ஆண்டு முதல் 20 இலட்சம் ரூபா வரை அதிகரிப்பது பொருத்தமானது என அடையாளம் காணப்பட்டது.

அதற்கமைய, இத்திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்படும் உதவித்தொகையை 20 இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்காக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/238915

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.