Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மடுப்பகுதியில் அரசுபடைகள் இராணுவநடவடிக்கை எதிலும் ஈடுபடுவதில்லை- கெஹெலிய

Featured Replies

மன்னார் மடுப் பிரதேசத்தில் 17 அப்பாவிப் பொதுமக்களைப் பலியெடுத்த பஸ் மீதான கிளைமோர் தாக்குதலுக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று அரசு நேற்று அறிவித்துள்ளது.

புனிதப் பிரதேசமான மடுப்பிதேசத்தை மிகவும் மதித்து அங்கு அரசு சண்டையில் ஒருபோதும் ஈடுபடுவதில்லை என்றும், அங்கு புலிகளே அடிக்கடி வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அரசு மேலும் தெரிவித்துள்ளது.

தேசியப் பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய கெஹெலிய ரம்புக்வெலவே இதைத் தெரிவித்துள்ளார்.

மேலும்

மன்னார் மடுப்பிரதேசத்தில் சிவிலியன்கள் பயணம் செய்த பஸ் மீது கிளைமோர் தாக்குதல் நடத்தபட்ட சம்பவம் குறித்து நாம் மிகவும் கவலையடைகின்றோம்.

இத் தாக்குதலில் பொதுமக்கள் 17 பேர் பரிதாபகரமாகக் கொல்லபட்டுள்ளனர். ஆனால், இத்தாக்குதலை அரச படையினர்தான் மேற் கொண்டனர் என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவ்வாறான செய்தி மூலம் அரசியல் லாபம் கருதிச் செயற்படுபவர்களுக்கும் நாட்டின் இறைமைக்கும் எதிரகச் செயற்படுபவர்களுக்கும் மாத்திரம் தான் நன்மை கிடைக்ககும். நாட்டின் இறைமைக்கு எதிரான சக்திகளின் செயற்பாடுகளுக்கு இவ்வாறான செய்திகள் ஊக்குவிப்பாக அமைகின்றன.

மடுபிரதேசம் ஒரு யுத்த சூனிய பிதேசம். அது மாத்திரமன்றி அது புனித பிரதேசமும் கூட, இப் புனித பிரதேசத்தையும் அங்குள்ள தேவாலயத்தையும் நாம் மிகவும் மதித்துச் செயற்படுகின்றறோம். அங்கு மிக இலகுவாக படையினரால் இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்க எந்தத் தடையுமில்லை. இருந்தாலும், அப்பிரதேசத்தை மதித்து எமது படையினர் ஒருபோதும் அங்கு சண்டையில் ஈடுபடுவதில்லை.

இருப்பினும், அப்பிரதேசத்தில் புலிகளின் நடவடிக்கைகள் அதிகளவில உள்ளன.

அவர்கள் அங்கு வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் இச்சம்பவத்திற்கு அரசு மீது குற்றம் சுமத்துவது ஏற்புடையதல்ல. இக் குற்றச்சாட்டை நாம் நிராகரிக்கின்றோம். இதற்கு அரசு பொறுப்புக் கூறவேண்டிய அவசியம் ஒருபோதும் கிடையாது.

அரச படையினர் இப்பிரதேசத்;தில் எவ்விதமான இராணுவ நடவடிக்கையிலும் ஈடுபடாத போதிலும் எதிர்காலத்தில் அங்கு புலிகளின் வன்முறை நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலையில் உள்ளது.

தேவை ஏற்படும் பட்சத்தில் இது தொடர்பாக அரசு ஆராய்ந்து பார்த்து ஒரு முடிவை எடுக்கவேண்டி ஏற்படும். இதேவேளை, யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு இருந்திருந்தால் இச்சம்பவத்திறகுக் காரணமானவர்களை அக்குழு கண்டு பிடித்திருக்கும் என்று மன்னார் ஆயர் கூறியிருந்தார். யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு கொழும்பில் தான் இருந்தது. அவர்கள் இப்போது இருந்திருந்தாலும் சம்பவ எண்ணிக்கையைப் பட்டியலிட்டிருப்பார்களே தவிர வேறெதுவும் செய்திருக்க மாட்டடார்கள். அவர்கள் நிச்சயம் சூத்திரதாரிகளைக் கண்டு பிடித்திருக்க மாட்டார்கள். என்றார்.

நன்றி சுடர் ஒளி

கெலிய அடிக்கடி ஒன்று இரண்டு உண்மைகளையும் தன்னையறியமலே சொல்லிப்புடுது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

றம்புக்வெல அண்ணே! அப்பிடியென்டா அவங்களுக்கு மோட்சபாதை புத்தகம் வாங்கி அனுப்புங்கோ. மடுவில செபிக்க வசதியாக இருக்கும். அத்துடன் மேலே போறதைப் பற்றியும் யோசிப்பினம்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.