Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விமானக்குண்டு வீச்சுக்களும் உளவியல் தாக்கங்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விமானக்குண்டு வீச்சுக்களும் உளவியல் தாக்கங்களும்

2/3/2008 9:38:54 AM

வீரகேசரி வாரவெளியீடு - இலங்கை விமானப்படை 1986 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இத்தாலியத் தயாரிப்பான "சியாமாசெற்றி' குண்டுவீச்சு விமானங்களைத் தாக்குதலுக்குப் பயன்படுத் தத் தொடங்கியது. கடந்த 22 வருடங்களாக மேற்கொள்ளப்படும் விமானக்குண்டு வீச்சுக்களின் மூலம் உளவியல் ரீதியாகப் புலிகளையும் தமிழ் மக்களையும் பலவீனப்படுத்தவே விமானப்படை முயன்றிருக்கிறது. தற்போது புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பெருநிலப்பரப்பில் இலங்கை விமானப்படை நடத்திவரும் தொடர்ச்சியான விமானத் தாக்குதல்களும் அதுதொடர்பாக அரசதரப்பில் இருந்து வெளியிடப்படும் செய்திகளும் உளவியல் போர் நடவடிக்கையாகவே கருதத்தக்கவை.

இலங்கை விமானப்படையிடம் தற்போதுள்ள உயர்வலுப் போர் விமானங்களான கிபிர் மற்றும் மிக்27 என்பன நேரடியாகப் போர் நடவடிக்கைகளில் தரைப்படைக்கு உதவக் கூடியவையல்ல. இவை ஏதாவது கேந்திரநிலைகளை அழிக்கப் பயன்படக்கூடுமே தவிர முன்னரங்கப் போர்முனைகளில் துருப்புக்களுக்கு நேரடி உதவி புரிய முடியாதவை. முக்கிய நிலைகள், கேந்திர மையங்கள், கட்டளைத் தலைமையகங்கள், விநியோகத் தளங்களை இந்த விமானங்களால் தாக்கியழிக்க முடியும். தற்போது வன்னியைச்சூழ மணலாறு, வவுனியா, மன் னார், முகமாலைநாகர்கோவில் என பலமுனைகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் படை நடவடிக்கைகளுக்கும் விமானப்படை நடத்திவரும் குண்டு வீச்சுக்களுக்கும் நேரடித் தொடர்புகள் கிடையாது.

ஆனால், புலிகளின் முக்கிய தளங்கள் என இனங்கண்டு கொண்டதாகக் கருதும் இடங்களைக் குறிவைத்து விமானப்படை குண்டுத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடற்புலிகளின் தளங்கள், ஆட்லறி ஏவுதளங்கள், வான்புலிகளின் ஓடுபாதை, புலனாய்வுத் துறையின் தளங்கள், முக்கிய பிரமுகர்கள் கூடும் இடம் அல்லது அவர்கள் வசிக்கும் தளங்கள் ஆகியவற்றைத் தாக்கியழிக்கும் நோக்கில்தான் விமானப்படை தற்போது செயற்பட்டு வருகிறது.

அதாவது, அரசபடைகளின் இராணுவ வெற்றிகளுக்குக் குறுக்கீடாக இருக்கக்கூடிய இலக்குகளை அழித்துவிட்டதாகக்கூறும் ஒரு உத்திதான் இது. வன்னிப்பகுதியில் கடந்த மாதத்தில் (ஜனவரி 02 முதல் 31வரை) விமானப்படை மோசமான குண்டுவீச்சுக்களை நடத்தியது. விடத்தல்தீவு, பாலம்பிட்டி, அலம்பில், கோம்பாவில், உடையார்கட்டு, கனகபுரம், வள்ளிபுனம், கல்மடு, கைவேலி, செல்வநகர், கல்முனை, இரணைமடு, வெட்டுக்காடு, புதுக்குடியிருப்பு போன்ற இடங்களில் விமானப்படை 16 இற்கும் அதிக தடவைகள் தாக்குதலை நடத்தியது.

இவற்றில் ஒரே தினத்தில் பலதடவைகள் என்ற வகையில் 25 இற்கும் குறையாத குண்டுவீச்சுப் பறப்புக்களை விமானப்படையின் விமானங்கள் மேற்கொண்டன. இரண்டு முதல் ஆறு வரையிலான கிபிர் மற்றும் மிக்27 ஜெட் போர்விமானங்கள் ஒவ்வொரு தாக்குதல் பறப்புக்களின் போதும் பங்கெடுத்திருந்தன.

சாதாரணமாக 250 கிலோ எடையுள்ள குண்டுகள் முதல் 1000 கிலோ எடையுள்ள குண்டுகள் வரையில் இந்தத் தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்ற

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.