Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மற்றோர் உதயத்துக்கு கால்கோள் - உதயன்

Featured Replies

இலங்கைத் தமிழர்களின் விடுதலை வேட்கையாக வெடித்துப் பீறிட்டுவரும் சுதந்திர தேசிய இன உணர்வை எப்படியாவது அடக்கி, ஒடுக்கி, அமுக்கிவிட வேண்டும் என்பதில் கங்கணம்கட்டி நிற்கும் தென்னிலங்கைச் சிங்கள மேலாதிக்கம், அதற்கு நியாயமற்ற அநீதியான மிகமோசமான வழிமுறைகளையும் நாடி நிற்கிறது.

நாட்டில் மிக மோசமாக இடம்பெறும் ஆள்கடத்தல்கள், காணாமல் போகச் செய்தல்கள், வகை தொகையற்ற கைதுகள், கண்மூடித்தனமான விமான ஷெல் குண்டுத் தாக்குதல்கள் போன்றவை எல்லாம் இந்தத் தமிழ்த் தேசிய உணர்வுக்கு எதிரான அடக்குமுறை மற்றும் ஆக்கிரமிப்பு மேலாண்மைப் போக்கின் வெளிப்பாடுகள்தாம்.

ஆட்சி அதிகாரத்தின் இந்த ஆக்கிரமிப்பும் அராஜகமும் இன்று சர்வதேச மட்டத்தில் விசனத்தோடு நோக்கப்படும் விவகாரங்களாகிவிட்டன.

இலங்கை ஆட்சி அதிகாரத்தின் உண்மைச் சொரூபத்ததை அம்பலப்படுத்தும் விதத்தில் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் பலவும் பகிரங்கமாக வெளி யிட்டுவரும் அறிக்கைகள் இலங்கை விவகாரத்தில் சர்வதேசத்தின் கண் இலங்கை மீது நுணுக்கமாகப் பதியத்தொடங்கி விட்டது என்பதற்கான சான்றுகளாகும்.

பிரிந்து சென்று தனியரசு அமைப்பதற்கான அடிப்படையில் முன்னெடுக்கப்படுகின்ற சுயநிர்ணய உரிமைப் போராட்டங்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் பார்வை பெரிதும் மாறி வருகின்றது. அதற்கு கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனத்தை மேற்குலகு வர வேற்று அங்கீகரித்து இருப்பது நல்லதோர் முன்னு தாரணமாகும்.

1999 இல் ஐ.நா.தீர்மானம் ஒன்றின் மூலம் கொசோவோப் பிரதேசம் சேர்பியாவின் ஆள்புல இறையாண்மைக்கு உட்பட்ட பகுதி என்று ஏகமனதாக ஏற்றுக் கொண்டு இருந்தது. சர்வதேச உலகம் கடந்த ஒன்பது ஆண்டு காலத்துக்குள் அந்த நிலைப்பாட்டைத் தலை கீழாக மாற்றிக்கொண்டு விட்டது.

ஒடுக்கப்பட்ட அடக்கப்பட்ட கொசோவோ மக்களுக்கு நியாயம் செய்ய மறுத்து தனது ஆக்கிரமிப்பு அராஜகத் திமிர்ப் போக்கை சேர்பியா குரூரமாகத் தொடர்ந்த காரணத்தினாலேயே அவ்விடயத்தில் மேற்குலகு தனது படைகளை அனுப்பித் தலையிட்டது. இறுதியில் கொசோவோ என்ற தனிநாட்டு உதயத்துக்கு அது ஆசீர் வாதமும் வழங்கியது.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை ஆளும் சிங்களவர்கள், அடக்கப்படும் தமிழர்கள் என இரண்டு இனங்கள் சார்ந்ததாக இருக்குமாயினும் இப்பிரச்சினையின் பிரதான இரு தரப்புகள் ஆக்கிரமிப்பு ஆட்சியைத் தொடரும் அரசும் அதற்கு எதிராகக் கிளர்ச்சி செய்யும் விடுதலைப் புலிகள் அமைப்பும்தான் என்பது வெளிப் படை.

இந்த இரண்டு தரப்புகள் தொடர்பான சர்வதேச பார்வை இன்று வேறுபாடானது. ஒன்றை அரசாகவும் மற்றைய தரப்பான புலிகள் அமைப்பை அரசு அல்லாத கட்டமைப்பாகவும் உலகம் நோக்குகின்றது.

அதனால், தன்னை ஒத்த அரசுக் கட்டமைப்பு என்ற காரணத்தால் இலங்கை அரசை இப்பிரச்சினையில் மேம்பாடான தரத்தில் வைத்து சர்வதேச சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.