Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இராணுவ வெற்றி இலக்கு என்ற கானல் நீரை நோக்கிய ஓட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2008-03-28

இராணுவ வெற்றி இலக்கு என்ற கானல் நீரை நோக்கிய ஓட்டம்

ஈழத் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை இலங்கையின் முதன்மையான பிணக்காக முனைப்புற்று, தீவிரமடைந்து நிற்கின்றது.

தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காத வரை அவர்களது நியாயமான அபிலாஷைகள் நிறைவேறாத வரை இத்தீவில் சமாதானமும், ஒத்திசைவும், நல்லிணக்கமும், பொருளாதார மேம்பாடும், அமைதியான வாழ்வும் சாத்தியமேயில்லை என்பதை சம்பந்தப்பட்ட தரப்புகள் உணரவேண்டும்.

சிங்களப் பேரினவாத மேலாதிக்கத் திமிருடைய அரசியல்வாதிகளினதும், அவர்களை ஒட்டி நிற்கும் அதிகார வர்க்கத்தினதும் இனவாத அடக்குமுறைக் கொள்கைப் போக்குக் காரணமாகவே தமிழ், சிங்கள மக்கள் இடையே முரண்பாடு முற்றும் அவல நிலைமை ஏற்பட்டிருக்கின்றது; அது கொடூரப் போராக வெடிக்கும் பேரபாயமும் நேர்ந்திருக்கின்றது.

தமிழ் மக்களை அடிமைகொண்டு, தனது மேலதிகாரத்தை நிலைநிறுத்த முயலும் சிங்கள அரசுக்கும், அதற்கு எதிராகத் தமிழர் தரப்பில் கிளர்ந்தெழுந்து விடுதலை வேணவாவுடன் சுதந்திர வேள்வியில் குதித்திருக்கும் புலிகளுக்கும் இடையிலான இந்தப் போர், முழு இலங்கைத் தீவையுமே மோசமாகப் பின்னடைவுக்குள் தள்ளியிருக்கின்றது.

இந்த அநியாய ஆக்கிரமிப்புப்போர் அப்பாவித் தமிழ் மக்களை மாத்திரமல்லாமல் அப்பாவிச் சிங்கள மக்களையும் ஆழமாகப் பாதித்து நிற்கின்றது. போர்வெறி கொண்ட அடக்குமுறைத் தீவிரம் காரணமாக ஒன்றுமறியா அப்பாவிச் சிங்கள இளைஞர்களினது உயிர்களும் பல்லாயிரக்கணக்கில் அநியாயமாகக் காவு கொள்ளப்படுகின்றன. இந்தப் போரினால் எழுந்துள்ள தாக்கமான பொருளாதாரச் சுமையையும் சீரழிவுகளையும் தென்னிலங்கையும் சேர்ந்துதான் இன்று சுமக்கவேண்டியிருக்கின்றது.

இக் கொடிய போருக்கு முடிவுகட்டி, நிரந்தர சமாதானத்தையும், நிலையான அமைதியையும் எட்டுவதாயின் அதற்கு இராணுவ வெற்றிகளை நிலைநிறுத்த எண்ணும் இந்த யுத்த தீவிர வெறிப்போக்கு உதவப்போவதில்லை. இனவாத சக்திகளை இனங்கண்டு அவற்றை ஒதுக்குவதோடு, சிறுபான்மையினரின் மனதை வெல்லத்தக்க நகர்வுகளையும் ஆட்சியாளர்கள் முன்னெடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட தரப்புகளின் மனதை வெல்வதை விடுத்து, அவர்களை இராணுவ ரீதியில் தோற்கடிக்க முயல்வது இன்னும் மோசமான பின்விளைவுகளையே ஏற்படுத்தும்; இரு சமூகங்கள் இடையேயான இன சமரசத்தை சீர்கெடுத்து, நிரந்தரப் பகையுறவையும், விரோதப் போக்கையும் தீவிரப்படுத்தும். இரண்டு தேசியங்கள் இடையேயும் மீளச் சீர் செய்யமுடியாத ஆழமான வடுவையும் குரோதத்தையும் நிலையாக ஆழமாக பொறித்துவிடும்.

அது மாத்திரமல்ல. இன்றைய களச் சூழ்நிலையில் யுத்த வெற்றிகள் குறித்த அரசின் அதீத பிரசாரங்களும் "கோயி பலஸ்' பாணி அறிவிப்புகளும் தென்னிலங்கை மக்களின் மனதில் விஷமத்தனமான குரூரமான ஒரு குருட்டு நம்பிக்கையை ஆழமாகப் பதித்து வருவதும் விரைந்து கவனிக்கப்பட வேண்டிய ஒரு விவகாரமாகும்.

தென்னிலங்கை இன்னும் கொஞ்சம் மூச்சுப்பிடித்து, முறுகி நின்று, யுத்தத்தைத் தீவிரப்படுத்துமானால், விடுதலைப் புலிகளைக் கூண்டோடு அழித்து, அதன்மூலம் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான நிலையான ஸ்திரமான தீர்வு கண்டுவிடலாம் என்ற அந்த அதீத நம்பிக்கையை இந்தப் பிரசாரங்கள் தென்னிலங்கை மக்களுக்குத் திட்டமிட்டு ஊட்டிவருகின்றன.

தமிழர்களின் போராட்ட வலுவாக விளங்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சிதைத்து, இனப்பிரச்சினை விவகாரத்தில் சிறுபான்மையினர் தரப்பின் பேரம் பேசும் வலுவை நாசமாக்கிய பின்னர், தீர்வுத் திட்டம் என்ற பெயரில் தான் சமர்ப்பிக்கும் உருப்படியற்ற கட்டமைப்பு ஒன்றை சிறுபான்மையினரான தமிழர்கள் மீது வெற்றிகரமாகத் திணிக்கலாம் என்று தென்னிலங்கையின் அரசுத் தலைமைகள் நப்பாசை கொள்கின்றன; அதன் அடிப்படையில் மிதமிஞ்சிய நம்பிக்கையைத் தென்னிலங்கை மக்களுக்கு ஊட்டுகின்றன.

இந்த மணல் கயிறை நம்பி, பேரினவாதச் சிந்தனைச் சகதிக்குள் தென்னிலங்கைச் சமூகம் மெல்ல மெல்ல மூழ்கிக் கொண்டிருக்கிறது.

இதனால் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான நீதியான சகல தரப்பும் ஏற்கக்கூடிய ஒரு நிரந்தரத் தீர்வை எட்டுவதற்கான எதிர்காலச் சாத்தியங்களும் அருகிச் சென்றுகொண்டிருக்கின்றன.

சமவுரிமைகளுக்கான கௌரவ வாழ்வுக்கான ஈழத் தமிழர்களின் சுதந்திரப் போராட்டம் ஆயுத வழிக்குத் திரும்பி, மூன்று தசாப்த காலமாகிவிட்டது.

அந்த உரிமைப்போரை இதோ அடக்கி விடுவோம் என்ற இலக்குடன் கடந்த முப்பது ஆண்டுகளாகக் காய்களை நகர்த்திக் களைத்துப்போன தென்னிலங்கை, அந்தப் பட்டறிவில் இருந்து சரியான பாடத்தைக் கற்றறியாமல், இன்னும் கானல் நீர் போன்ற அந்த இராணுவ அடக்குமுறை வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டிருப்பது அதன் அறிவின்மையையே பறைசாற்றுகின்றது .

http://www.uthayan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.