Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐதராபாத் தீர்மானம் வழிகாட்டுகிறது - பழ.நெடுமாறன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐதராபாத் தீர்மானம் வழிகாட்டுகிறது

- பழ.நெடுமாறன்

ஐதராபாத் நகரில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் 20வது மாநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆண்டு காலத்தில் அகில இந்தியக் கட்சிகள் எதுவும் கவலை கொள்ளாத அல்லது எதிரானநிலை எடுக்கும் ஒரு பிரச்சினை குறித்து, இந்தியக் கம்யூனிஸ்டு மாநாடு பொறுப்புணர்வோடும், தொலை நோக்குப் பார்வையோடும் அறிவார்ந்த தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றி உள்ளது.

இலங்கையில் நடைபெற்றுவரும் போர் குறித்து ஆழ்ந்த கவலையோடு நிறைவேற்றப் பட்டுள்ள அந்தத் தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு..

1.50 ஆண்டுகாலமாக நீடித்து வரும் இலங்கை இனப்போர் குறித்துக் கவலை.

2.சொந்த நாட்டு மக்கள் மீதே இலங்கை இராணுவம் கட்டவிழ்த்து விட்டுள்ளக் கொடூரமான தாக்குதல்கள்.

3.நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மனித நேயமற்ற தாக்குதல்களும் மனித உரிமை மீறல்களும்.

4.இலங்கைப் போர்ச் சூழலின் விளைவாக இந்தியாவில் அகதிகள் குவிவதால் உருவாகும் பிரச்சனைகள்.

5.தமிழக மீனவர்கள் கொல்லப் படுவதும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான அச்சுறுத்தல்களும்.

6.போர் நிறுத்த உடன்பாட்டையும் அமைதிக்கான பேச்சு வார்த்தைகளையும் இலங்கை அரசு தன்னிச்சையாக முறித்துக்கொண்டது.

7.தமிழர்கள் மீதான கொடூர இராணுவத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அரசை இந்தியா வற்புறுத்த வேண்டும்.

8.அரசியல் ரீதியான பேச்சு வார்த்தைகளை மீண்டும் தொடங்குமாறு இந்திய அரசு நெருக்குதல்களை அளிக்க வேண்டும்.

9.தமிழர்களைக் கொன்று குவிக்கும் இலங்கை அரசுக்கு ஆயுத உதவிகள் செய்வதை இந்திய அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

10.இந்திய மீனவர்களின் உயிருக்குப் பேராபத்தை விளைவிக்கும் கடல் கண்ணிவெடிகளை அகற்றுமாறு இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும்.

11.தமிழக மீனவர்களுக்குக் கச்சத்தீவில் உள்ள எல்லா உரிமைகளையும் மீட்டெடுக்க இந்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

12.இலங்கையில் மனித உரிமை, ஜனநாயக உரிமை, அரசியல் உரிமை களுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி ஆதரவைத் தெரிவித்து கொள்கிறது.

இந்தியக் கம்யூனிஸ்டு தேசிய மாநாடு நிறைவேற்றியுள்ள மேற்கண்ட தீர்மானம் ஈழத்தமிழர் பிரச்சனையின் பலவேறு பரிமாணங்களையும் அலசி ஆராய்ந்து முழுமையாக வெளிப்படுத்தி உள்ளது. இந்திய அரசின் கடமை என்ன என்பதையும் அது தெளிவாக உணர்த்தி உள்ளது.

இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ்மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் முன்மொழிந்த இந்தத் தீர்மானமும் இதற்கு முன்னதாக 18.03.08 அன்று நாடாளுமன்ற மேலவையில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் அகில இந்தியச் செயலாளர் து.ராசா ஆற்றிய உரையும் வரலாற்றுச் சிறப்பு மிக்கவையாகும்.

சரியான வேளையிலும் சரியான காலக்கட்டத்திலும் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி பிற இடதுசாரி கட்சிகளுக்கும் மற்றும் அவற்றுடன் கரம் கோர்த்து நிற்கும் பல மாநில கட்சிகளுக்கும் இலங்கை இனப்பிரச்னையில் வழிகாட்டி உள்ளது.

இலங்கையில் தமிழர்கள் மீது முழு அளவிலான முப்படைத் தாக்குதல்களைத் தொடுத்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்து வரும் சிங்கள இனவாத இராணுவத்தின் தலைமைத் தளபதி சரத்.பொன்சேகா இந்திய அரசின் ஆயுத உதவியை நாடி இந்தியாவிற்கு வந்து சென்றிருக்கும் வேளையில், நிறைவேற்றப் பட்டுள்ள இந்தத் தீர்மானம் இந்திய அரசுக்கு எச்சரிக்கை மணியை அடிக்கும் தீர்மானம் ஆகும்.

இலங்கையில் நடைபெற்றுவரும் போர் அதனுடைய உள்நாட்டு விவகாரம் என்ற கட்டத்தைத் தாண்டிவிட்டது. இலங்கை அரசுக்கு உதவுவது என்ற பெயரில் அமெரிக்கா உட்பட பல அந்நிய சக்திகள் அங்கு காலூன்றுவதற்கு இடைவிடாது முயற்சி செய்கின்றன. குறிப்பாக பாகிஸ்தான் மிகத் தாராளமாக சகலவிதமான ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்து வருகிறது. தமிழர் பகுதிகளில் குண்டு மழை பொழியும் சிங்கள இராணுவ விமானங்களை பாகிஸ்தான் விமானிகளே ஓட்டுகிறார்கள். இலங்கை இராணுவமயமாவதினால் ஈழத்தமிழர்களுக்கு ஏற்படும் ஆபத்தை விட பேராபத்து இந்தியாவை எதிர் நோக்கிக் காத்திருக்கிறது.

மறைந்த பிரதமர்கள் ஜவகர்லால் நேரு, இந்திராகாந்தி ஆகியோர் காலங்களில் இந்துமாக் கடல் பகுதியில் எந்த அந்நிய வல்லரசும் ஊடுருவவோ, இராணுவத் தளங்களை அமைக்கவோ ஒருபோதும் அனுமதித்ததில்லை. அவ்வாறு செய்வது இந்தியாவின் பாதுகாப்பிற்குப் பேராபத்தை விளைவிக்கும் என்பதை அவர்கள் நன்கு உணர்ந்து இருந்தனர்.

இந்த இருவர் காலத்திலும் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பெரும் தொழிற் சாலைகள் தென்னாட்டில்தான் நிறுவப்பட்டன. ஆவடி டாங்கித் தொழிற்சாலை, பெங்களூர் விமான உற்பத்தி சாலை, தும்பா ஏவுகணை தளம் போன்றவையும் மற்றும் பல முக்கிய தொழிற் சாலைகளும் தெற்கேதான் நிறுவப்பட்டன. ஏனென்றால் வட இந்தியா பாகிஸ்தான், சீனாவின் நேரடித் தாக்குதல்களுக்கு இலக்காக அமைந்திருந்த காரணத்தினால் அங்கு இத்தொழிற்சாலைகள் அமைக்கப் படவில்லை. அதுமட்டுமல்ல தென்மாநிலத் தலைநகரங்களில் பிற நாடுகளின் துணைத் தூதரக அலுவலங்களை அமைக்க இந்திய அரசு அனுமதித்தது. ஆனால் பாகிஸ்தானின் துணைத் தூதரகத்தை தென்மாநிலங்களில் அமைத்துக் கொள்ள இந்திய அரசு இன்றுவரை அனுமதிக்க வில்லை. இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தொழிற்சாலைகள் குறித்து உளவறிய உதவுவது ஆகிவிடும் என்ற காரணத்தினால் அனுமதிக்கப் படவில்லை.

ஆனால் இப்போது என்ன நடக்கிறது, பாகிஸ்தான் விமானப் படையின் தலைமைத் தளபதியாக இருந்து ஓய்வுபெற்ற ஒருவர் இலங்கையின் பாகிஸ்தான் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கொழும்பில் இருந்துகொண்டு இந்தியாவின் தென் பகுதிகளில் உளவு வேலைகளைத் தொடர்கிறார். சென்னையில் இருந்து கொண்டு இதைச் செய்வதைவிட கொழும்பில் இருந்து செய்வது பாதுகாப்பானது. மிக நவீனமான தொலைத்தொடர்பு சாதனங்கள் பெருகிவிட்ட இந்தக் காலத்தில் மிக எளிதானதும் ஆகும். இந்தியாவிற்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகளை தனது மண்ணில் நடத்த இலங்கை அனுமதித் துள்ளது.

அமெரிக்கா தனக்கு அள்ளி கொடுத்த ஆயுதங்களில் ஒரு பகுதியைத்தான் இலங்கைக்குப் பாகிஸ்தான் தருகிறது. ஆக அமெரிக்கா மறைமுகமாக இலங்கையில் தனது தடத்தைப் பதித்துள்ளது.

சின்னஞ்சிறிய இலங்கையில் அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகள் காலூன்றுவதால் அவைகளுக்கு பிரதிபயன் எதுவும் கிடைக்கப் போவதில்லை. அமெரிக்கப் பொருட்களை விற்பனை செய்வதற்கு உரிய பெரிய சந்தையாகவும் இலங்கை இல்லை. அப்படியானால் இந்த உதவிகளுக்குப் பின்னணி என்ன?

இந்த கேள்விக்கு ஒரே ஒரு விடைதான் இருக்க முடியும், இந்தியாவை மிரட்டுவதற்குரிய தளமாக இலங்கையைப் பயன்படுத்த ஏகாதிபத்திய நாடுகளும் பாகிஸ்தான் போன்ற நாடுகளும் முயலுகின்றன என்பதுதான் அப்பட்டமான உண்மையாகும்.

இந்தப் பின்னணியில் இந்தியக் கம்யூனிஸ்டு மாநாட்டின் தீர்மானத்தை நாம் பார்க்க வேண்டும்

இந்திய அரசோ, அகில இந்திய கட்சிகளோ கவனம் செலுத்தப் பிடிவாதமாக மறுக்கும் ஈழத்தமிழர் பிரச்சினை குறித்துத் திட்டவட்டமான தெளிவான வழிக்காட்டுதலை இந்தியக் கம்யூனிஸ்டு மாநாடு சுட்டியுள்ளது.

இந்திய அரசின் பொறுப்பில் உள்ளவர்கள் இத்தீர்மானத்தின் அடிப்படையில் சிந்தித்துச் செயல் பட வேண்டும், மறைந்த பிரதமர் இந்திராகாந்தி காலத்தில் கடைப்பிடிக்கப் பட்ட அணுகுமுறைக்குத் திரும்ப வேண்டும், அவர் காலத்தில் எந்த அந்நிய அரசும் இலங்கையில் நுழைவதற்குத் துணியவில்லை. இலங்கை அரசும் இந்தியாவிற்குத் தெரியாமல் எந்த நாட்டுடனும் இராணுவ ரீதியான உறவுக் கொள்வது குறித்துச் சிந்தித்துக் கூட பார்க்கவில்லை.

ஆனால் இப்போது நிலைமை அடியோடு மாறிவிட்டது. இந்த சூழ்நிலையில் இந்தியக் கம்யூனிஸ்டு மாநாடு நிறைவேற்றியுள்ள தீர்மானம் இந்திய அரசின் சிந்தனைத் தெளிவிற்கு வழி வகுக்கட்டும்.

நன்றி தினமணி - 03-04-2008

http://www.thenseide.com/cgi-bin/Details.a...amp;newsCount=7

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.