Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திருகோணமலையில் - பிள்ளையான் குழுவினரின் கொடுமைகளை அம்பலம்

Featured Replies

திருகோணமலை மாவட்டத்தின் தமிழ் பகுதிகளில் பிள்ளையான் குழுவினர், கப்பம் பெறல், பெண்களை பாலியல் வல்லூறவுக்கு உட்படுத்துதல், சிறுவர்கள் பலவந்தமாக படையில் சேர்த்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் இதனால் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியிருப்பதாகவும் சிங்கள இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

மக்கள் இதனை யாரிடம் எவரிடமும் முறையிட முடியாத நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. திருகோணமலையின் அனுராதபுரம், கீழ்மூதூர், ஒர்தீன், ஜம்பள்ளிபுரம், பாலத்தீவு, மற்றும் செல்வநாயகபுரம் பிரதேசங்களை சேர்ந்த மக்களே இந்த கொடுமைகளை அனுபவித்து வருவகின்றனர்.

திருகோணமலையில் உள்ள தமிழ் கிராமங்களில் பிள்ளையான் குழுவினர் கப்பம் பெறாத ஒருவரும் இல்லை. இவர்களில் தாக்குதலுக்கு இலக்காகாது தப்பித்த இளைஞர்கள் எவரும் இல்லை எனவும் கூறப்படுகிறது. அத்துடன் எண்ணற்ற பெண்களை இவர்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக மிகவும் அச்சத்துடன் கருத்து தெரிவித்த சிலர் கூறியுள்ளனர்.

சுமார் 2 லட்சம் ரூபா கப்பமாக கோரப்படுவதாகவும் அதனை கொடுக்க தவறியவர்களின் வீடுகளில் இருந்து ஒருவரை கடத்திச் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பல தமிழர்களின் உறவினர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ள நிலையில் அவர்கள் அனுப்பும் பணத்தை பிள்ளையானின் ஆயுதகுழுக்கள் கப்பமாக பெற்றுக்கொள்கின்றனர் எனவும் அவர்கள் கூறினார்.

இரவு நேரங்களில் ஆயுதங்களுடன் வீடுகளுக்கு புகுந்து பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவங்கள் குறித்து முறைப்பாடு செய்ய வழியில்லை. பிள்ளையான் குழுவினர் தாம் தற்போது அரசாங்கத்தரப்பினர் என கூறி வருவதுடன் காவல்துறையில் முறைப்பாடு செய்தால் கொலை செய்து விடுவோம் என மிரட்டுவதாகவும் தெரியவருகிறது. ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் காவல்துறையினரிடமோ கடற்படை முகாமிலோ முறைப்பாடு செய்தால் பிள்ளையான் குழுவினர் உங்களுடைய ஆட்கள் தானே நீங்களே பிரச்சினையை தீர்த்துகொள்ளுங்கள் என கூறி முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ள மறுப்பதாக தமிழ் மக்கள் தெரிவித்து;ளளனர்.

புலிகள் இருந்த போதோ, கருணா இருந்த போதோ இவ்வாறான நிலைமை ஏற்படவில்லை, பிள்ளையான் குழுவினர் ராஜபக்ஸ அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டு வந்ததை அடுத்து நிலைமை மேலும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அப்பாவி தமிழ் மக்களுக்கு சிங்கள கிராமங்களில் உள்ள மக்களே ஆதரவு வழங்கி வருகின்றனர்.

சுமார் 300 பேர் ஆயுதங்களுடன் படையினருடன் இணைந்து சுற்றித்திரியும் நிலையில் ராஜபக்ஸ அரசாங்கம் பிள்ளையான் குழுவினருடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது ஆச்சரியதமான விடயம் என பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த விடயங்கள் தொடர்பில் அந்த சிங்கள் இணையத்தளம் ஒன்றின் செய்தியாளர் மக்களின் குரல்களை பதவுசெய்து அதனை இணையத்தளத்தில் செய்தியாக வெளியிட்டுள்ளார்.

ஆங்கிலத்தில் படிக்க

http://isoorya.blogspot.com/2008/04/blog-post_1128.html

  • தொடங்கியவர்

டச்சிலும் ப்ரான்ஷிலும் மொழிமாற்றியும் இணைக்கப்பட்டுள்ளது

http://isoorya.blogspot.com/2008/04/blog-post_1128.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.