Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை இனப்பிரச்சினை தமிழக அரசியலை ஆக்கிரமித்துள்ளது

Featured Replies

இலங்கையின் இனப்பிரச்சினை தமிழ்நாடு அரசியலை ஆக்கிரமிக்கும் அம்சமாக மீண்டும் உருவாகியுள்ளது. இந்த கருத்தை இந்தியாவிற்கான செய்தி ஆசிரியர் ராமாராவ் வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் இராமாயனம் தொடர்புபட்ட சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் கட்டத்திலேயே இந்த அரசியல் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பது ராமராவின் கருத்தாகவுள்ளது.

வர்த்தகதுறை ஆய்வாளர்களின் பார்வையின்படி இது இனப்பிரச்சினை என்ற அம்சத்திற்குள் வரவில்லை. அவர்கள் இதனை இந்தியாவின் காஷ்மீர் மற்றும் அஸாம் மாநிலங்களின் சுற்றுலாத்துறையின் வீழ்ச்சிநிலை அடிப்படையிலேயே நோக்குகின்றனர்.

தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக செயற்படுகிறார் என்ற அடிப்படையில் அவர் அண்மையில் கூறிய கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. இன்டியன் டைம்ஸ் நாளிதழுக்கு அவர் அளித்த செவ்வியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு இந்தியா ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

மறுபுறத்தில் அவரின் அரசியல் வைரியான வை.கோபாலசாமியும் இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் அண்மைக் காலத்தில் மாத்திரம் 3 தடவைகள் இந்திய பிரதமரை சந்தித்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் மத்தியில் ப்பிரியங்கா காந்தி தமிழ் நாட்டின் வேலூர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளியான நளினியை சந்தித்துள்ளார்.

இது தமிழக அரசியலுக்குள் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக மற்றும் ஒரு முக்கியதுவத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் புதுடில்லி நிர்வாகம் இலங்கை இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி வருவதாக இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை இது தேர்தல் வருடமாக உள்ளபடியால் இலங்கை இனப்பிரச்சினை விடயம் இந்திய அரசியலில் மேலும் தீவிர நிலையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

நன்றி : www.tamilgood.com

எமது பிரச்சினையை சரியான திசையில் ராஜதந்திரமாக நகர்த்தும் எமது ஒரே அரசியல் இராணுவ சக்தியும் எமது பிரதிநிதிகளுமான விடுதலைபுலிகளுக்கு கிடைக்கும் வெற்றிகள் அண்மைகால உலக அரசியல் அரங்கில் தென்படும் மாற்றங்களே .

அண்மைகால இந்தொய அரசியலில் பல்வேறு மாற்றங்கள் தென்படுகின்றது வைகோ ஜயா அவர்கள் ஈழத்தமிழர் அபிமானி என முத்திரை குத்தப்பட்டவர் என்பது யாவரும் அறிந்தது ஆனால் வைகோ அவர்களை[எதிர்கட்சியில் இருக்கும் ஒருவரை]மன்மோகன் சிங் சந்தித்து இருகின்றார் உலக அரசியல்தலைவர்கள் சந்தித்து வருகின்றனர் எல்லாத்துக்கும் மேலாக இன்று வந்த செய்தியின்படி ஜநா செயலாலரை சந்திக்க இருகின்றார் இதுவானது எம்மை உலகம் வேறாக கவனிக்க தொடங்கிவிட்டது என்பதனையே உணர்த்துகின்றது.இலங்கையில் இனப்பிரச்சினை உண்டு என்பதனை உலகம் உணர தொடங்கிவிட்டது அதற்கான அங்கீகாரமாகவே வைகொ அவர்களின் பன் கீ மூனுடன் சந்திப்பை எடுத்து கொள்லலாம் என நான் நினைகின்றேன்

அதுமட்டுமல்ல அண்மையில் சூடுபிடித்திருக்கும் திபத் விவகரம் அண்மையில் சுதந்திரமடைந்த கொசாவா விவகாரம் என்பவை எமது புலம்பெயர்ந்த உறவுகளுக்கான கடமையையை உணர்த்த வைகின்றது தொடர்சியான முயற்சிகளும் சலிக்காத பிரச்சார உத்திகள் நமக்கு வேண்டும் .இன்று கடசி 2 மில்லியென் உறவுகளாவது புலத்தில் இருகின்றோம் எம்மால் முடிந்த இலகுவாக செய்ய கூடியது எம்முடன் வேலை செய்யும் படிக்கும் அல்லது வசிக்கும் அயலவர்களிடையே எமது போராட்டத்தின் நியாயங்களை உணர்த்த வைக்க வேண்டும்.இலங்கையில் பயங்கரவாதம் உண்டு என பல்வேறு நாட்டவர் நினைகின்றனர் எமது போராட்டட்தை அல்குவைதாவின் செயற்பாடுகளுடன் ஒப்பிடுகின்றனர் .இதனை எம்மிடம் நேரடியாகவே கேட்க முனைகின்றனர் அவர்க்ளிடம் ஆம் என தலையாட்டுவதை விடுத்து எமது நியாயங்களையும் எமது போராட்டத்திற்கும் பயங்கரவாதத்துக்கும் இடையே இருக்கும் செய்பாடுகளை உணர வைக்க வேண்டும்.சரியான தகவல்களை அவர்களுக்கு கொடுத்து அவர்களை சிந்திக்க வைக்க வேண்டும்.

அதுமட்டுமல்ல சிங்களவர்களிடமும் புலத்திலும் ஏன் பயப்பிடுகின்றோம் என புரியவில்லை பயங்கரவாதிகள் கொழும்பில் தாக்குகின்றார்கள் என ஒரு சிங்களவர் வேலைத்தளத்தில் என்னை சந்தித்த போது சொன்னார் உடனே நான் ஆமாம் சுதந்திரமடைந்த முதல் கொண்டு இன்றைய திகதிவரை சிங்கள பயங்கரவாதிகளாலும் அரச பயங்கரவாத்த்தாலும் நாம் தாக்கப்பட்டோம் கொல்லப்பட்டோம் என சொன்னேன் அவருக்கு என்ன சொல்லுவது என விளங்கவில்லை உடனே நழுவிவிட்டார்.சிங்களவரிடம் ஒரு நம்பிக்கை உண்டு தமிழர்கள் விடுதலைபுலிகளை வெறுகின்றார்கள் என அந்த நம்பிக்கைக்கு காரணம் சிங்களவருக்கு பயந்தோ அல்லது முகத்தை முறிக்கவிரும்பாமலோ நாம் அவர்களின் கருத்தினை மனதினுள் ஆமோதிக்காவிட்டாலும் வார்த்தைகளால் ஆமோதிப்பதே

இன்றைய நாட்களை புத்திசாலித்தனமாக நகர்த்த வேண்டிய வரலாற்றுகடமை புலம்பெயர்ந்தவர்களிடம் உண்டு கருத்து வேறுபாடுகள் ஈகோ,நான் பெரியவன் நீ பெரியவன் நீ சிறியவன் என பாராமல் ஒன்றிணைந்து கடமையாற்ற வேண்டும் உலகத்தில் சிறிய மட்டத்தில் இருந்து பெரிய மட்டம் வரை பரப்புரையை பலப்படுத்த வேண்டும் நாம் சிறிய உப்பை போன்றவர்கள் என நினைத்து ஒதுங்காமல் நாம் ஒரு உணவை சுவைப்படுத்த கூடிய உப்பாக நம்மை நினைத்து செயல்பட வேண்டிய நேரம் இது என்பது எனது கருத்து

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.