Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முகமாலை வெற்றி-முன்னும் பின்னும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முகமாலை வெற்றி-முன்னும் பின்னும்

தமிழீழத்தின் வட பகுதி இது வரை காணாத மிகப் பெரும்போரைச் சந்திக்க இருப்பதாக சிங்கள இராணுவத் தலைமைத் தளபதி சரத் பொன்சேகா சூளுரைத்து ஒரு சில நாட்களில் சிங்கள இராணுவம் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது.

யாழ்ப்பாண முன்னரங்கில் மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையை தொடங்க உள்ளதாகவும் கிலாலி முதல் நாகர்கோவில் வரை இந்த நடவடிக்கை விரிவாக நடைபெறும் எனவும் அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு தளபதி சரத் பொன்சேகா செவ்வி வழங்கி இருந்தார். இதுவரை நடைபெற்ற போர்களில் மிகப்பெரும் போராக இப்போர் இருக்கும் என்றும் இதன் முடிவில் வடக்கு மாநிலத்தில் புலிகளின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதற்காக சிங்கள இராணுவத்தின் சிறப்புப் பயிற்சி பெற்ற 53வது 55வது படைப்பிரிவுகளின் கமாண்டோ அணிகள் ஏவிவிடப்படும் என்றும் அவர் கூறினார்.

இதன்படி கடந்த ஏப்ரல் 22ம்தேதி யன்று அதிகாலையில் முகமாலையில் இருந்து சிங்களக் கவசப் படையினர் மிகப்பெரிய முன்நகர்வு ஒன்றை மேற் கொண்டனர். சில கிலோ மீட்டர் தூரம் அவர்களை முன்னேறவிட்ட விடு தலைப்புலிகளின் டாங்கி எதிர்ப்பு அணி யினர். மிகக்கடுமையான எதிர் தாக்குதலை தொடுத்தனர். இதன் விளை வாக சிங்கள இராணுவ டாங்கி ஒன்று அழிக்கப்பட்டது. அத்துடன் இராணுவ நிலைகளை இலக்குவைத்து கிட்டு பீரங்கிப்படையினர் நடத்திய தாக்குத

லில் இராணுவத்தின் பீரங்கி நிலைகள் சேதமடைந்தன. குறுகிய வேளையில் இராணுவத்தரப்புக்கு ஏற்பட்ட இழப்பின் காரணமாக சுமார் அரை மணிநேரத்தி லேயே இராணுவம் முன்நகர்வைக் கைவிட்டு பின்வாங்கி ஓடினர்.

இந்த தோல்வியை சற்றும் எதிர் பாராத இராணுவத் தலைமைத் தளபதி சரத் பொன்சேகா உடனடியாக பலாலி விமான தளத்துக்கு விரைந்து வந்து அங் குள்ள இராணுவ உயர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தி புதிய கட்டளைகளை வழங்கினார்.

கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி யன்று முகமாலை முதல் கிலாலி வரை விடுதலைப்புலிகளின் முன்னணி நிலைகளை நோக்கி இராணுவம் முன்னேற தொடங்கிற்று சுமார் 7 கிலோ மீட்டர் நெடுகிலும் இந்த படையெடுப்பு நடந்தது. சுமார் 500 கிலோமீட்டர் வரை இராணுவத்தினரை முன்னேற அனு மதித்த புலிகள் ஏப்ரல் 27ஆம் தேதி யன்று அதிகாலை 2 மணியளவில் எதிர் தாக்குதலில் இறங்கி இராணுவப் படை யெடுப்பை அடியோடு முறியடித்தனர். இராணுவத்திற்கு ஆதரவாக களத்தில் இறங்கிய டாங்கிகள் கவச மோட்டார்கள் ஆகியவற்றை எதிர்த்து புலிகள் மிகக் கடுமையாகப் போராடினார்கள். பல்குழல் எதிர்கணை தாக்குதல்களும் பீரங்கி தாக்குதல்களும் மலைபோல புலிகளின் நிலைகளின் மீது மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும் சுமார் 12 மணிநேர போருக்குப்பிறகு புலிகளின் கை ஓங்கியது. சிறப்புப் பயிற்சிபெற்ற 53வது மற்றும் 55வது படைப்பிரிவுகள் சின்னாபின்னமாக்கப்பட்டன.

போர்முனையில் இராணுவ வீரர்களின் உடல்கள் சிதறிக்கிடந்தன. பெருமளவுக்கு ஆயுதங்கள் இராணுவத் தளவாடங்களும் சிதறிக்கிடந்தன. உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுதங் களையும் மற்ற தளவாடங்களையும் கீழே போட்டுவிட்டு சிங்கள வீரர்கள் தலை தெறிக்க ஓடினர். இதுவரை கிடைத்த தகவலின் அடிப்படையில் சுமார் 200 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டும் 400க்கும் அதிகமானவர்கள் படுகாயப் பட்டும் உள்ளனர். புலிகள் தரப்பில் 25 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

2006ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதைப்போல இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையையும் புலிகள் முறியடித்தனர். அப்போதும் 200க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப் பட்டனர். 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

அதே போர்முனையில் சிங்கள இராணுவம் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆணையிறவை மீண்டும் கைப் பற்றும் திட்டத்துடன் சிங்கள இராணுவம் தொடங்கிய இந்தப் போர் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்திருப்பது கண்டு சிங்கள அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.

சிங்கள இராணுவத்தின் மிகச் சிறந்த படையணிகளான 53வது 55வது படைப்பிரிவுகள் சிறப்புப் பயிற்சி பெற்றவையாகும். இந்த இரு பிரிவுகளை யும் சேர்ந்த ஐயாயிரம் படைவீரர்கள் மிகவும் பொறுக்கி எடுக்கப்பட்ட வீரர்கள் ஆவார்கள். நம்பிக்கை நட்சத்திரமான இந்த இரு படையணிகளையும் களமிறக்கியும் வெற்றிபெறமுடியாத நிலைமை அவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.

அதிலும் ஏப்ரல் மாதத்தின் 22இ 25 ஆகிய தேதிகள் மிகமுக்கியமான நாட்களாக தளபதி சரத் பொன்சேகாவால் கருதப்பட்டன. ஏன் என்றால் 2000ஆம் ஆண்டு ஏப்ரல் 22 தேதிதான் புகழ்பெற்றதும் வலிமைவாய்ந்ததுமான ஆணையிறவு தளத்தை அடியோடு அழித்து புலிகள் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைப் பெற்றார்கள். அதேநாளில் மீண்டும் ஆனையிறவை மீட்டுஎடுப்பதே சிங்கள இராணுவத்தின் குறிக்கோளாக இருந்தது. இதைப்போல 2001ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி சிங்கள இராணுவம் மேற்கொண்ட தீச்சுவாலை படையெடுப்பு நடவடிக்கையை விடு தலைப்புலிகள் முற்றிலுமாக முறியடித் தார்கள். அதைப்போல 2006ஆம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி தளபதி சரத் பொன்சேகா மீது விடுதலைப்புலிகள் தற்கொலைத் தாக்குதலையும் நடத்தி யிருந்தார்கள். எனவே தங்களுக்கு தீராத அவமானத்தை அழித்த இந்த இரு தேதிகளையும் பொன்.சேகா மறக்க வில்லை எனவே அந்த குறிப்பிட்ட தேதிகளில் ஆனையிறவை மீட்டெடுத்து புலிகளை அடியோடு முறியடித்து விடவேண்டும் என அவர் தணியாத வேட்கைகொண்டு இருந்தார். ஒரு வேளை இந்த முயற்சியில் அவர் வெற்றிபெற்றிருந்தால் சரியான வகையில் புலிகள் மீது பழிவாங்கல் பதிலடியை தாம் நிகழ்த்திவிட்டதாக பொன்சேகா சிங்கள மக்களுக்கு கூறியிருப்பார். ஆனால் அவரது திட்டம் பகற்கனவாய் முடிந்து போயிற்று.

இந்தப் பெரும்போரில் புலிகள் பெற்றுள்ள மகத்தான வெற்றி தமிழ் மக்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. சிங்களத்தின் மிகச்சிறந்த படையணிகளை அடியோடு முறியடித்து புலிகள் பெற்ற வெற்றி என்பது ஒரு மாபெரும் இராணுவ ரீதியிலான சாதனை என்பதில் அய்யமில்லை.

அதே வேளையில் இராணுவத் தின் சிறந்த வீரர்களைக் கொண்ட இந்த இரு படையணிகளின் படுதோல்வி என்பது எஞ்சியுள்ள சிங்கள வீரர்களின் மனோதிடத்தை சிதைத்துள்ளது. சிறப்புப் பயிற்சி பெற்ற வீரர்களால் பெறமுடியாத வெற்றியை நம்மால் பெறமுடியுமா என யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள சிங்கள வீரர்கள் நடுக்கமடைந்துள்ளனர்.

திறமையும் அனுபவமும் சிறப்புப் பயிற்சியும் நிறைந்த சிங்கள இராணுவத் தின் இரு படைப்பிரிவுகளை இளம் புலிகள் முறியடித்து வெற்றிவாகை சூடி யுள்ளனர் என்பது இராணுவ வட்டாரங் களில் நம்பமுடியாத அதிசயமாக உள்ளது. இளம் புலிகளின் இந்தப் போரியியல் திறன் தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி யுள்ளது. எதிர்காலத்திலும் இத்தயை இராணுவ வெற்றிகளை அவர்கள் குவிப் பார்கள் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.

இந்தப் போரில் ஐயாயிரம் படைவீரர்களை இராணுவத் தலைமை பயன்படுத்தியது 15இ000க்கும் அதிகமான ஏவுகணைகளை அந்தப் பத்தரைமணி நேர சண்டையில் பயன்படுத்தியது. ஆனாலும் படுதோல்வி அடைய நேரிட் டது ஏன் என்ற கேள்வி சிங்கள அரசை யும் இராணுவத்தையும் ஆட்டிப் படைக்கிறது.

வடக்கே மணலாறு பகுதியிலும் மன்னார் முனையிலும் சிங்கள இராணுவம் தொடங்கிய போர்களும் படு தோல்வியில் முடிவடைந்தன. இப்போது முகமாலையில் பெற்றிருக்கிற தோல்வி இராணுவ வீரர்கள் மத்தியில் பெரும் மனச்சோர்வினை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் போரைத் தொடங்குவதற்கு முன்னாள் கடந்த மாதம் கொழும்புவில் செய்தியாளர்களைக் கூட்டி வடக்குப் பகுதியில் தாங்கள் தொடங்கும் போரின் முடிவில் புலிகள் முற்றிலுமாக ஒழிக்கப் படுவார்கள். இதுவரை காணாத போரை நாடு சந்திக்கப்போகிறது என்றெல்லாம் அவர் தம்பட்டம் அடித்தார். படை நிலைகளைப் பார்வையிடவும் செய்தி யாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். வடபோர்முனைக்கு சென்று திரும்பிய செய்தியாளர்கள் பெரும் நம்பிக்கையுடன் காணப்பட்டனர். நிச்சயமாக இந்த முறை வடமாநிலம் இராணுவத்தினாரால் கைப்பற்றப்பட்டுவிடும் என்று அவர்கள் நம்பினார்கள். ஆனால் போரின் முடிவு கண்டு அவர்களும் அதிர்ந்து போயுள்ளனர்.

2001ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதியன்று கிலாலி முகமாலை நாகர் கோயில் ஆகிய வடபகுதிகளில் சிங்கள இராணுவம் ஆரம்பித்த தீச்சுவாலை படையெடுப்புஇ 2006ஆம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி சிங்கள இராணுவம் மேற்கொண்ட படையெடுப்புஇ இப்போது 2008ஆம் ஆண்டு ஏப்ரலில் மேற் கொண்ட படையெடுப்பு ஆகிய இந்த மூன்று படையெடுப்புகளும் இராணுவ ரீதியில் மிகப்பெரிய தோல்விகளைச் சந்தித்துள்ளன. இராணுவத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே சிங்களப் பகுதிகளில் உணவுப்பற்றாக்குறைஇ மின்சாரப் பற்றாக் குறைஇ பொருளாதார வீழ்ச்சிஇ இராணுவத் தில் ஆள் பற்றாக்குறைகளும் நாட்டை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக

கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி யன்று முகமாலை முதல் கிலாலி வரை விடுதலைப்புலிகளின் முன்னணி நிலைகளை நோக்கி இராணுவம் முன்னேற தொடங்கிற்று சுமார் 7 கிலோ மீட்டர் நெடுகிலும் இந்த படையெடுப்பு நடந்தது. சுமார் 500 கிலோமீட்டர் வரை இராணுவத்தினரை முன்னேற அனு மதித்த புலிகள் ஏப்ரல் 27ஆம் தேதி யன்று அதிகாலை 2 மணியளவில் எதிர் தாக்குதலில் இறங்கி இராணுவப் படை யெடுப்பை அடியோடு முறியடித்தனர். இராணுவத்திற்கு ஆதரவாக களத்தில் இறங்கிய டாங்கிகள் கவச மோட்டார்கள் ஆகியவற்றை எதிர்த்து புலிகள் மிகக் கடுமையாகப் போராடினார்கள். பல்குழல் எதிர்கணை தாக்குதல்களும் பீரங்கி தாக்குதல்களும் மலைபோல புலிகளின் நிலைகளின் மீது மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும் சுமார் 12 மணிநேர போருக்குப்பிறகு புலிகளின் கை ஓங்கியது. சிறப்புப் பயிற்சிபெற்ற 53வது மற்றும் 55வது படைப்பிரிவுகள் சின்னாபின்னமாக்கப்பட்டன
.

இலங்கையின் நீளமே 500 கிலோமீற்றர் அல்ல எப்படி 500 கிலோமீற்றர் முன்னேற புலிகள் விட்டவை

  • கருத்துக்கள உறவுகள்

ஈழவன் , 500 மீற்றர் என்றிருக்க வேண்டும்.

மேலும் பல சமாதானங்களை பொன்சேகா சந்திக்க இருக்கிறார். :lol::lol:

சமாதானத்திற்கு இனி மவுசுதான். இது சமாதானத்திற்கு அஞ்சும் காலம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.