Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழீழத்தை அங்கீகரிக் வேண்டிய பொறுப்பு, தேவை சர்வதேசத்திற்கு உணர்த்துகின்ற நிகழ்வே 'பொங்குதமிழ்'- ஜெயானந்தமூர்த்தி எம்.பி.

Featured Replies

தமிழர்கள் தமிழீழத்தை எப்போதோ பெற்று விட்டார்கள். அந்த நாட்டை அங்கீகரிக்க வேண்டிய பொறுப்பும் தேவையும் சர்வதேச சமூகத்திற்கு உள்ளது. இதனைச் செய்ய வேணடும் என்பதை வலியுறுத்தும் வேண்டுகோளை விடுப்பதற்கான ஒன்றுகூடலே இந்த 'பொங்கு தமிழ்'.

டென்மார்க் ஒருஸ் நகரில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போது த.தே.கூட்டணி எம்.பியான ஜெயானந்த மூர்த்தி இதனைத் தெரிவித்தார்.

மேலும் :

ஈழத்தமிழர்களாகிய நாம் பரந்த மொழி, சிறந்த நிர்வாகம், சிறந்த படைபலம் என அனைத்தையும் கொண்டுள்ள தேசிய இனமாக இருக்கிறோம். இவற்றையெலலாம் முன்வைத்து எங்களுடைய நாட்டை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சர்வதேசத்திடம் முன்வைக்கின்றோம். அன்றி வேறு எதனையும் நாம் கேட்கவில்லை. எங்களிடம் பலம் உள்ளது. எவருக்கும் அஞ்சத் தேவையில்லை. சர்வதேசம் எங்கள் பலத்தை எந்தளவுக்குப்பார்கின்றதோ தெரிவில்லை. ஆனால், எமது பலத்தை பல தடவைகள் நாம நிரூபித்துள்ளளோம்.

நாங்கள் எதற்கும் சளைத்தவர்கள் அலலர். எதற்கும் பின் நின்றவர்களும் அல்லர். எங்களுடைய தேசியத் தலைவர் சிறந்த படையை அமைத்து இலங்கை அரசுக்கு மாத்திரமல்ல சர்வதேச உலகுக்கும் படை பலத்தை நிரூபித்துக் காட்டியுள்ளார். இதன் மூலமாக எங்கள் உரிமைக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றோம்.

'பொங்கு தமிழ்' நிகழ்வை நாங்கள் தாயகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்ட மட்டதிலும் ஆரம்பித்து அதன் மூலம் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்த ஒரு மித்த குரலில் எமது கோரிக்கையை சர்வதேசத்திற்கு பல தடவைகள் முன்வைத்துள்ளோம். சில நாடுகள் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாதது போன்று நடித்தன.

ஆனால், தாயகத்தில் ஆரம்பித்த 'பொங்குதமிழ்' இன்று சர்வதேச நாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்கின்ற அனைத்து உறவுகளினாலும் உணர்வு பூர்வமாக முன்னெடுக்கபட்டு வருகின்றன. இதன் மூலம் சர்வதேசததிற்கு மிகத் தெளிவான செய்த ஒன்றைக் கூறுகின்றோம்.

இந்தச் செய்தியை சர்வதேசம் உணர்ந்து கொள்ள வேண்டும் . எதற்காகத் தமிழர்கள் பொங்குகின்றார்கள், எதற்கு அனைவரும் ஒன்று கூடியுள்ளார்கள் போன்ற விடயங்களை சர்வதேசம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எமது தாயகப் பகுதியில் உள்ள மக்கள் சிங்கள வெறிபிடித்த படைகளினால் பலவேறு வகையில் படுகொலைகளை எதிர்கொள்ளும் அதே வேளை தாயகத்திற்கு வெளியில் கைது, கொலை, கடத்தல், பெண்கள் பாலியல் வல்லுறவு போன்ற மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

எனினும் கடந்த காலங்களில் இருந்து இன்று வரைக்கும் விடுதலைப் போரட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என்றால் புலம் பெயர்ந்து வாழும் உறவுகளின் ஒத்துழைப்பும், உதவியும், கடும் உழைப்புமே காரணமாகும். உறவுகளினால் வழங்கப்படும் பணம் அனைத்தும் எதிரியை விரட்டியப்பதற்காகவே செலவு செய்யப்படுகின்றது. நாங்கள் இன்று இறுதிக்கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம் என்பதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

இதனைத் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால் நாளை எமது நாடு கையில் கிடைத்து விட்டால் எந்த ஒரு அன்னிய நாட்டின் உதவியின்றி எமது தாயகத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதே எமது எதிhபார்ப்பு. விடுதலைப் புலிகள் தமிழீழத்தை மீட்டெடுப்பார்கள். நாங்கள் உதவி செய்கின்றோம். எனவே, நாங்கள் இது பற்றி பேசவேண்டியதில்ல என யாரும் நினைக்க்கூடாது. மாறாக புலம் பெயர்ந்து வாழ்கின்ற நாடுகளில் அரசியல் ரீதியான முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டிய தார்மீகப் பொறுப்பு உங்கள் அனைவரிடமும் உள்ளது.

எமது போரளிகள் கடும் ஷெல் மழை மத்திலும் பலவேறு அசௌகரியங்களுக்கு மத்தியிலும் ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு எதிராக கடுமையாகப் போரடி வருகினறனர். அதன் மூலம் மீட்டெடுக்கப்படும் தமிழீழம் நாளை உலக வரைபடத்தில் வரையப்படும்.

எமது நாட்டுப் பிரச்சினை பலருக்குத் தெரியாமல் இருக்கலாம் அல்;லது புலம் பெயர்ந்த நாடுகனில் பிறந்து வளர்ந்த பிள்ளைகளுக்குத் தெரியாமல் இருக்கலாம். அவர்களுக்கு எமது நாடடின் வரலாறுகளைக் கூறவேண்டும். அத்துடன் அந்நாட்டு பிரஜைகளுக்கும் நாங்கள் எதற்காகப் போரடுகின்றோம். அதன் முக்கியத்துவம் என்ன என்பது பற்றிய விளக்கங்களைப் பரப்ப வேண்டும். அதன் மூலமாகவே அவர்களின் மனங்களை வென்றெடுப்பதனுடாக ஒத்துழைப்புக்களையும் பெறமுடியும். அது மாத்திரமல்ல இலங்கை அரசின் அப்பட்டமான பொய்ப்பிரசாரங்ளை முறியடிக்க முடியும்.

மேலும் இது போன்று தொடர்ச்சியான ஒத்துழைப்பையும், இவ்வாறான நிகழ்சிகளையும் நடத்துவதன் மூலம் இங்குள்ள மக்களைக் கவரவேண்டும். எனவே எங்கள் இறுதி முடிவு தமிழீழத்தைப் பெறுவது எமது மக்கள் சுயநிர்ணய உரிமைகளுடன் வாழ்வதும் அதுவும் எமது தேசியத் தலைவரின் காலத்தில் என்பதனை அனைவரும் உணர்ந்து ஓரணியில் திரளவேண்டும். என்றார்.

சிங்களத்தின் தவறான நடவடிக்கை : சர்வதேச சமூகம் பாராமுகம் ஏன்?- ஒஸ்லோ மாநகரசபை உறுப்பினர்.

சர்வதேச சமூகம் அனைத்தும் தமிழ் அமைப்புகளையும் பயங்கரவாதிகளேன முத்திரை குத்தி விட்டு, சிங்கள அரசின் தவறான நடவடிக்கைகள் குறித்து நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் உள்ளதாக நோர்வேயின் ஆளும் தொழிற்கட்சியின் ஒஸ்லோ மாநகரசபை உறுப்பினரான டிரொன்ட் இஜன்ஸ்ரட் குற்றம் சாட்டியுள்ளார்.

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் கடந்த சனிக்கிழமை இடம் பெற்ற 'பொங்கு தமிழ்' நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலலேயே அவர் அதனைத் தெரிவித்துள்ளார்.

பொங்குதமிழ் நிகழ்வில் வெளிப்படுத்திய தமிழ் உணர்வுகளை நோர்வே அரசும் அங்கீகரித்து சர்வதேச அரங்கிற்கு அதனை எடுததுச் செல்ல வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார், அவர் அங்கு மேலும் தெரவித்;ததாவது :

நோர்வே அரச பிரதிநிதிகள் பேச்சுகளுக்காக தமிழ்ப் பகுதிகளுக்குச் செல்ல முயற்சித்தனர். இது குறித்து நான் மகழிச்சியடைகிறேன்.

என்னும், இலங்கை அரசு இந்த வேண்டுகோளை நிராகரித்து விட்டது. இலங்கை அரசின் இவ்வாறான நிராகரிப்புக் குறித்து சர்வதேச சமூகம் மிகவும் இலேசாகவே கண்டிக்கின்றது.

தமிழர் போராட்டம் சிங்களவர்களுக்கு எதிரானது அல்ல என்பதை உங்களது 'பொங்குதமிழ்' பிரகடனம் தெளிவாகச் சொல்கின்றது. அதே வேளை, தமிழ் மக்களைக் கொலை செய்து, இடம் பெயரச் செய்த அடக்குமுறை அரசிற்கு அது எதிரானது என்பதையும் தெரிவிக்கின்றது. முழு உலகிற்கும இந்தச் செய்தி செல்ல வேண்டும்.

நீங்கள் ஒஸ்லோவில் சந்தோசமாக உள்ள போதிலும் உங்கள் ஊரிற்கு திரும்பச் செல்வது குறித்து கனவு காண்பதையும் உறவினர்களின் நிலைமை பற்றிய கவலை உங்களது மனதை ஆக்கரிமித்துள்ளமையும் நோர்வேயில் மிகக் குறைவானவர்களாலேயே பரிந்து கொள்ளபட்டுள்ளது.

இலங்கiயில் உண்மை நிலவரம் என்வென்பது குறித்து நோர்வேயின் ஒரு சில அரசியல்வாதிகளே பகிரங்கமாகக் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

தமிழ் மக்களுக்கு சுதந்திர நாடு - சுதந்திரத் தமிழீழம் அவசியம் என்பதைச் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமுமில்லை. என்றார்.

இதே வேளை இந்நிகழ்வில் பங்குபற்றிய எரித்திரிய அமைப்பொன்றின் பிரதிநிதியான சாம் ஜரெட், எரித்திரிய மற்றும் தமிழ்; மக்களின் போராட்டங்களுக்கு இடையிலான ஒற்றுமைகளைச் சுட்டிக்காட்டினார்.

தமிழ் மக்களின் போராட்டம், சுயநிர்ணய உரிமையை அடிப்படையாகக் கொண்டது என்பதால் அது வெற்றி பெறுவதே இயல்பான முடிவு என அவர் குறிப்பிட்டாh.

தமிழ் நாட்டிலிருந்து கவிஞர்கள் புலமைப்பித்தன், அறிவுமதி போன்றவர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நன்றி சுடர் ஒளி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.