Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தென்பகுதியின் அச்சம் தணிய புலிகளிடம் மண்டியிட வேண்டிய நிலையில் உள்ள சிங்கள அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தென்பகுதியின் அச்சம் தணிய புலிகளிடம் மண்டியிட வேண்டிய நிலையில் உள்ள சிங்கள அரசு

-இலட்சுமணன்-

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அண்மைக்காலமாக நடைபெற்று வரும் வெடிகுண்டுத் தாக்குதல்களை நிறுத்த முடியாமலும் அவற்றைத் தடுக்கும் வழிறைகள் தெரியாமலும் சிங்கள அரசு திண்டாடுகின்றது.

இதன் விளைவாக செய்வதறியாத அரசு அப்பாவித் தமிழ் மக்களைப் படுகொலை செய்து தனது கோபத்தைத் தணிக்க முயற்சிக்கிறது.

அதன் வெளிப்பாடாக வன்னிப் பெருநிலப்பரப்பெங்கும் கண்மூடித்தனமான விமானத் தாக்குதல்களை நடத்துவதுடன் ஆழ ஊடுருவும் அணியினரைப் பயன்படுத்தி கிளைமோர் தாக்குதல்களையும் நடத்தியும் வருகிறது.

தலைநகரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள தாக்குதல்கள் விடுதலைப் புலிகளாலேயே நடாத்தப்படுகின்றன என்ற அடிப்படையில் வைத்து நோக்கினால், வன்னிப்பகுதியில் நடைபெறும் தாக்குதல்களுக்கான பதிலடியாகவே அவை மேற்கொள்ளப்படுகின்றன எனக் கொள்ளலாம்.

விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் நடைபெறும் கிளைமோர்த் தாக்குதல்களுக்குத் தாம் காரணமல்ல என அரசு கூறிவரும் அதேவேளை தென்பகுதியில் நடைபெற்று வரும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களுக்கும் தமக்கும் சம்பந்தமில்லை என விடுதலைப் புலிகள் தெரிவிக்கின்றனர்.

வெள்ளவத்தையில் கடந்த மாதம் 31 ஆம் திகதி, இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டு, 18 பேர் காயமடைந்தனர்.

இம் மாதம் 3 ஆம் திகதி, முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்துடன் நால்வர் படுகாயமடைந்தனர்.

நான்காம் திகதி, தெஹிவளையில் ரயிலை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 18 பேர் காயமடைந்தனர்.

ஐந்தாம் திகதி, முல்லைத்தீவு மாந்தையில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் பொதுமக்கள் இருவர் உயிரிழந்தனர்.

ஆறாம் திகதி, மொறட்டுவவில் பயணிகள் பேருந்து மீது நடாத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 20 பொதுமக்கள் உயிரிழந்தனர். 80 பேர் காயமடைந்தனர். அன்று மாலை கண்டியில் பேருந்தினுள் குண்டொன்று வெடித்ததில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டு 20 பேர் காயமடைந்தனர்.

அந்த வகையில் கடந்த ஏழு நாட்களில் மட்டும் 38 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 140 பேர் காயமடைந்துள்ளனர். இது தவிர கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் பலர் கடத்தப்பட்டும் உள்ளனர்.

போர்க் களங்களிற்கு வெளியே பொதுமக்கள் இலக்கு வைக்கப்படும் சம்பவங்கள் குறித்து பல்வேறு தரப்புகளும் சுட்டிக்காட்டிய போதும் அத்தகைய சம்பவங்கள் நின்றபாடில்லை. அத்தகைய சம்பவங்கள் சங்கிலித் தொடராக நீண்டு செல்கின்றன.

பொதுமக்களை இலக்கு வைத்து நடாத்தப்படும் தாக்குதல்களின் பின்னால் எத்தத் தரப்பு இருந்தாலும் அத்தகைய தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டியவையே. ஆனால், தனக்கொரு பாதிப்பு வரும்போது அதனை எதிர்க்கும் உரிமை யாவருக்கும் பொதுவானது.

இந்நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிவநாதன் கிசோர், அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, 'வடக்கில் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படா விட்டால் விளைவுகள் பாரதூரானதாக இருக்கும்" என்ற வகையில் பேசியிருந்தார்.

ஒரு மாதத்துக்கும் மேலாக விவாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் விளங்கிய நாடாளுமன்றம் தமிழர்களை அடக்குவதற்கும் கொடுமைப்படுத்துவதற்கும் என்று ஏற்படுத்தப்பட்ட அவசரகால சட்டப் நீடிப்பிற்காக கடந்த 5 ஆம் திகதி மீண்டும் கூட்டப்பட்டது. இவ்விவாதத்தில் பேசுகையிலேயே சிவநாதன் கிசோர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், 'வடக்கில் இடம்பெறும் தாக்குதல்களின் மாற்றீடாகவே தென்பகுதியில் நடைபெறும் தாக்குதல்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது. அரசாங்கம் வன்னி மீது கடந்த இரண்டரை வருடங்களாக விமானத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. விமானத் தாக்குதல்கள் மூலம் புலிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டதாக இருந்தால் வன்னியிலுள்ள அனைத்து மக்களும் அவர்களுடன் சேர்ந்து, சிங்கள மக்களில் அரைவாசிப் பேரும் இதுவரை இறந்திருக்க வேண்டும். தெற்கில் நடைபெறும் தாக்குதல்களை நாம் கண்டிக்கிறோம். அதே போல் வன்னியி;ல் பொதுமக்கள் கொல்லப் படுவதையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

வன்னியைப் பொறுத்தவரை, நெடுங்கேணி பகுதியே ஆழ ஊடுருவும் படையினருக்கு இலகுவான தாக்குதல் பிரதேசமாக இருக்கிறது. அங்கேயே அநேகமான தாக்குதல்களை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

ஆனால், தென்பகுதித் தாக்குதல்கள் யாருமே எதிர்பார்க்க முடியாத, முழுக்க முழுக்க சிங்கள மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் நடாத்தப் படுகின்றன. அவற்றின் முக்கியத்துவம் என்னவெனில் பாதிக்கப்படுபவர்கள் அனைவரும் சிங்களவர்களாக இருப்பதே.

கடந்த வெள்ளிக்கிழமை காலையில் மொறட்டுவை கட்டுபெத்தவில் நடைபெற்ற பயணிகள் பஸ் மீதான தாக்குதலைத் தொடர்ந்து சிங்கள் மக்கள் பெரும் பீதியடைந்தனர்.

இந்தப் பீதியும் அதனால் உருவான பதற்றமும் மீண்டும் ஒரு 83 யூலையைக் கொண்டு வந்து விடுமோ என்ற பயத்தைப் பலரிடையே ஏற்படுத்தியது.

இதனை யாராவது மறுக்க முனைந்தால் அதற்கான பதில் சனிக்கிழமை பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள தேசிய படை வீரர்களின் நினைவுத் தூபிக்கு அருகில் இடம்பெற்ற தேசிய படை வீரர்கள் தின நிகழ்வில் பேசிய சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் 'மீண்டும் ஒரு யூலைக் கலவரம் ஏற்பட நாம் இடமளிக்கப் போவதில்லை" என்ற உரையில் கிடைத்தது.

தென்பகுதியின் கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களில் நடைபெற்று வரும் தாக்குதல்களை இராணுவ இலக்கு, அரசியல் இலக்கு, பொருளாதார இலக்கு மற்றும் பதிலடி இலக்கு என நான்கு வகையான தாக்குதல் திட்டங்களுடன் செயற்படுத்தும் புலிகள், தென்பகுதியில் நினைத்த நேரத்தில் தாக்குதல்களை நடத்தக்கூடிய பலத்துடன் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்து வருகின்றார்கள்.

இப்போதைய நிலையில் வன்னிப் பகுதியில் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டு மறுநாளோ அல்லது அதற்கு மறுநாளோ தாக்குதல் ஒன்று கொழும்பில் நடைபெறும் என்ற அச்சமும் எதிர்பார்ப்பும் தோன்றிவிட்டது. தாக்குதல்களில் எதிர்பார்ப்பை வைத்துக் கொண்டே தாக்குதல் மேற்கொள்வது புலிகளைப் பொறுத்தவரை மிகவும் பிடித்தமானது.

சிறிலங்காவின் படைத்துறையினருக்கு இராணுவ, அரசியல், பொருளாதார இலக்குகளைப் பாதுகாப்பது அவ்வளவு கடினமானதல்ல. ஆனால், இப்போது நடைபெற்றுவரும் பதிலடித் தாக்குதல்களில் பொதுமக்கள் மீதான பாதிப்புக்களைத் தடுப்பதே முக்கியமான பிரச்சினையாக உள்ளது.

கிழக்குத் தேர்தல் முடிவடைந்து பிள்ளையான் முதலமைச்சாராகப் பதியேற்கவிருந்த தினத்தில் ஜனாதிபதிச் செயலகம் அருகே பொலிஸ் வாகனம் மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல், முகமாலை மோதலில் பெருந்தொகையான படையினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடந்த பிலியந்தல பஸ் குண்டு வெடிப்பு, தெஹிவளை தொடருந்து நிலையக் குண்டு வெடிப்பு, தெகிவளைக்கும் வெள்ளவத்தைக்கும் இடையில் தொடருந்துப் பாதையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு, மொறட்டுவ கிளைமோர் தாக்குதல், வெள்ளவத்தை கைக்குண்டுத் தாக்குதல் என கடந்த சில வாரங்களுக்குள் கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இது தவிர, தேடுதல்கள் மற்றும் சோதனைகள் மூலம் வீடுகள், காட்டுப் பகுதிகள், குடியிருப்புகள், வாகனங்கள் என்பவற்றிருந்து மீட்கப்பட்டு வரும் குண்டுகளின் தொகைகளும் அதிகம் என்றே சொல்ல வேண்டும்.

கிழக்கை மீட்டு அதனைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருப்பதாகவும் வன்னியில் பெரும் வெற்றிகள் தமது படைகளுக்குக் கிடைத்து வருவதாகவும் பிரச்சாரம் செய்வதன் ஊடக சிங்கள மக்களைப் போருக்கு ஆதரவாக வைத்துக் கொள்ள நினைக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு தென்பகுதியின் தற்போதைய நிலை உவப்பானதாக இல்லை.

கொழும்பு நகரைப் பாதுகாக்கவென பொலிஸாருடன் இராணுவம், கடற்படை, விமானப்படை என்பவற்றுடன் பொதுமக்கள் பிரதிநிதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட சிவில் பாதுகாப்பு படையினரும் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.