Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைத் தமிழர்களின் சொதது விவகாரம் தொடர்பில் கருணாநிதியின் கூற்று விபரீதமானது - அமைச்சர் சந்திரசேகரன்

Featured Replies

'தமிழகத்திற்கு அபயம் தேடிச் செல்லும் இலங்கைத் தமிழர்கள் தெடார்பில் கருணாநிதி கூறியவை என ஊடகங்களில் வெளிவந்துள்ள கருத்துகள் அனைத்துலகத் தமிழர்களையும் திகிலடைய வைத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக 'மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதித்த' கதையாகவே அவரது வாயிலிருந்து வந்த அந்த வர்ர்த்தைகள் இலங்கைத் தமிழர்களின் மனதை நோகடிக்கச் செய்திருகி;கிறன்றன.'

என கருணாநிதிக்கு அமைச்சர் பெ. சந்திரசேகரன் அனுப்பியுள்ள கடித்தில் தெரிவித்துள்ளார். :

'இலங்கைத் தமிழர்கள், தமிழ்நாட்டில் சொத்துடையவர்களாக இருக்காக் கூடாது என்ற சாரப்பட முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார் என்ற செய்திக்கு தமது ஆட்சேபனையைத் தெரிவித்தே அமைச்சர் சந்திரசேகரன் இந்தக் கடிதத்தை வரைந்துள்ளார்.

மேலும்

1983 ம் ஆண்டு இலங்கையில் இனக்கலவரம் ஏற்பட்டதிலிருந்து, தமது உயிரைப்பாதுகாத்துக் கொண்டு தப்பிப் பிழைத்து தமிழகம் வருபவர்கள், அகதி முகாம்களிலலேயே அடைக்கபட்டு வருகிறார்கள். இது இன்னோரு வடிவிலான திறந்த வெளி சிறைச்சாலை தான்.

தற்போது தமிழ் நாட்டில் காலூன்றவும் முடியாமல், தமது தாயகத்திற்கு திரும்பி வரவும் முடியாமல் இருக்கும் இவர்கள் தங்களது எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கி கொண்டிருக்கிறார்கள்.

இதே நேரத்தில் மேலைத்தேய நாடுகளுக்கு அகதிகளாகப் புலம் பெயர்ந்து சென்றவர்கள் இன்று சொந்தச் சொத்துக்களுக்கு உரிமையாளர்களாக தொழிலதிபர்களாக தாராளமான வருவாயைப் பெறக்கூடிய தொழில் பெற்றவர்களாக தமது தனித்துவத்தை காலாச்சார பாரம்பரிய விழுமியங்களை தக்கவைத்துக் கொண்டுள்ளவாராகவும், தாம் வாழும் நாட்டின் பிரஜைகளாகவும், தமிழினமே பெருமைப்படக்கூடிய அளவுக்கு தமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ளார்கள்.

அவர்கள் குடியேறிய எந்த ஒரு நாடும் அவர்களைச் சுமையாக கருதவில்ல என்பதோடு அவர்களின் மனித உரிமைகளை மதித்து கௌரவிக்கின்ற நிலையே அங்கெல்லாம் ஏற்பட்டிருக்கின்றது.

இதே போன்று இலங்கை வாழ் இந்திய வம்சாவளித் தமிழர்கள் இந்தியாவில் முதலீடு செய்யவும், தமது தொப்புள் கொடி உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ளவும், வாய்ப்பை ஏற்படுத்தும் விதத்தில் 'கோப்பியோ' என்ற அமைப்பு இந்திய மத்தி அரசின் ஏற்பாட்டின் படி அதற்கான தனிமையான அமைச்சiயும் உருவாக்கியுள்ளது.

இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களோடு அனைத்துத் தமிழர்களும் இந்தியாவின் உறவுகளாய் தங்களை இனம் காட்டிக் கொள்ள ஏங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தமிழகத் தலைமைகள் அதற்கு சார்பாக அழுத்தம் கொடுக்க வேண்டுமென்பதை நாங்கள் ஆவலோடு எதிhப்பார்கிறோம்.

இந்தியா தமது பக்கத்து நாடு என்பதால் மட்டுமல்ல, வரலாற்று ரீதியாக அவர்களின் ஆணிவேர் இந்தியாவில் பதிந்துள்ளது என்ற உரிமையோடுதான் இந்திய நாட்டை பாசத்தோடு நேசிக்கின்றார்கள்.

இலங்கைத் தமிழர்கள் தமது உயிரையும் குடும்பத்தின் எதிர்காலத்தையும் பாதுகாத்துக் கொள்ளும் இயல்பான பய உணர்வோடுதான் தமிழ் நாட்டை நோக்கி கூட்டம் கூட்டமாக இன்றும் வந்து சேர்கிறார்கள்.

பக்கத்து நாடு பாகிஸ்தானகவோ பங்களதேஷமாகவோ இருந்திருந்தால் கூட ஈழத்தமிழர்; அந்த நாடுகளை நோக்கித் தான் ஓட்டமெடுத்திருப்பார்கள்.

இனத்தாலும் உணர்வாலும் ஒன்றுபட்டவர்கள் என்ற உரிமையோடு தமிழ் நாட்டில் தஞ்சமடைந்தவர்கள், தமிழக அரசின் எந்த ஆதரவையும் விசேடமாகப் பெறவில்ல.

ஒரு சிலா சொந்த முயற்சியால் அல்லது பொருளாதார பலத்தினால் தலைதூக்கி இருக்கிறார்கள் என்பது கணக்கெடுப்பில் விஷேடமாக கவனத்தில் எடுக்கப்படக் கூடிய விடயமல்ல.

நிலைமை இவ்வாறு இருக்க, இலங்கைத் தமிழர்கள் தமிழ் நாட்டில் சொத்துடையவர்களாக இருக்கக் கூடாது என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தூண்டி விடுகின்ற தோரணையில் அமைந்துள்ள தங்களின் கருத்தை விசித்திரமானதாக மட்டுமல்;லாது விபரீதமானதாகவுமே உலகத் தமிழர்கள் கணிப்பார்கள்.

எனவே, தங்களின் உரை தவறாக வெளிப்படுத்தபட்டிருந்தால் அல்லது பிழையாக வியாக்கியானம் செய்யபட்டிருந்தால் அது பற்றி விளக்க வேண்டிய பொறுப்பும் தேவையும் தங்களுக்கு இருக்கிறது என்பதை வருந்திய மனதோடு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

உலகத் தமிழர்கள் அனைவரும், நிகரற்ற தமிழ்த் தலைவனாகத் தங்களை நினைக்க வேண்டிய இக்கால கட்டத்தில், அனைத்துத் தமிழர்களையும் அருவருப்போடு தலைகுனிய வைக்கின்ற ஒரு காரியம் தவறுதலாகவேனும் உங்ளிடமிருந்து வெளிப்பட்டு விடக்கூடாது என்பதலேயே இந்தப் பகிரங்க கடிதத்தை அமைத்து தமிழர்களின் சர்பாகவும் தங்களுக்கு அனுப்புகின்றேன். என்று அதில் உள்ளது.

நன்றி சுடா ஒளி

கருணாநிதிக்கு இலங்கை அமைச்சர் கடிதம் தமிழகத்தில் அகதிகள் சொத்து வாங்க கூடாதா?

இலங்கை தமிழர்கள் தமிழகத்தில் சொத்து வாங்கக் கூடாது என்ற தங்களது கருத்து விசித்திரமானது’ என்று முதல்வர் கருணாநிதிக்கு, இலங்கை அமைச்சரும், மலையக மக்கள் முன்னணி தலைவருமான பெ.சந்திரசேகரன் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

தமிழகத்துக்கு அபயம் தேடிவரும் இலங்கைத் தமிழர்களைப் பற்றி தாங்கள் கூறியதாக வெளிவந்துள்ள கருத்து அனைத்துலக தமிழர்களையும் திகிலடைய வைத்திருக்கின்றது. ‘மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதிக்கும் கதையாகவே’ தங்களின் வார்த்தைகள் இலங்கைத் தமிழர்களின் மனதை நோகடிக்கச் செய்திருக்கின்றது.

இலங்கை இனக்கலவரம் தோன்றிய காலத்திலிருந்து தமது உயிரைப் பாதுகாத்துக் கொண்டு தப்பி பிழைத்து தமிழகம் வருபவர்கள் அகதி முகாம்களிலேயே அடைக்கப்பட்டு வருகிறார்கள். இது இன்னொரு வடிவிலான திறந்தவெளி சிறைச்சாலைதான்.

தற்போது தமிழ்நாட்டில் காலூன்றவும் முடியாமல், தமது தாயகத்திற்கு திரும்பி வரவும் முடியாமல் தங்களது எதிர்காலத்தை இவர்கள் கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக் கிறார்கள். அவர்கள் குடியேறிய வேறு எந்த நாடும் அவர்களை சுமையாகக் கருதவில்லை என்பதோடு, அவர்களின் மனித உரிமைகளை மதித்து கவுரவிக்கின்ற நிலையே அங்கெல்லாம் ஏற்பட்டிருக்கின் றது. சிலர் சொந்த முயற்சியினால் அல்லது பொருளாதார பலத்தினால் தலைதூக்கி இருக்கிறார்கள் என்பது கணக்கெடுப்பில் விசேஷமாக கவனத்தில் எடுக்கப்படக்கூடிய விஷயமல்ல.

நிலைமை இவ்வாறு இருக்க, இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டில் சொத்துடையவர்களாக இருக்கக் கூடாது என்று அதிகாரிகளை தூண்டி விடுகின்ற தோரணையில அமைந்துள்ள தங்களின் கருத்தை விசித்திரமானதாக மட்டுமல்ல, விபரீதமானதாகவுமே உலகத் தமிழர்கள் கணிப்பார்கள்.

எனவே, தங்களின் உரை தவறாக வெளிப்படுத்தப்பட்டிருந்தால

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.