Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பின் கடல், வான் கண்காணிப்பு 'சார்க்'கின் போது முற்றாக இந்தியாவிடம்

Featured Replies

இம் மாத இறுதியிலும் அடுத்த மாத முற்பகுதியிலும் கொழும்பில் 'சார்க்' உச்சி மாநாடு நடக்கும் சமயத்தில் தலைநகர் கொழும்பின் கடல், வான் கண்காணிப்பு நடவடிக்ககைள் முற்றாக இந்தியத் தரப்பின் பொறுப்பின் கீழ் முன்னெடுக்கப்படும். தரைப்பாதுகாப்பிற்கு மட்டுமே இலங்கை அரசுப் படைகள் தனித்து முன்னெடுக்கும்.

அதேசமயம், இந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்காகக் கொழும்பு வரும் இந்தியப் பிரதமருக்கும் ஏனைய மூத்த அதிகாரிகளுக்கும் உரிய பாதுகாப்பை வழங்குவதற்காக நூற்றுக்கும் குறைவான இந்தியக் கொமாண்டோக்களே மெய்பாதுகாவலர்களே இலங்கை வருவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய தரப்பின் பாதுகாப்புக்கு சுமார் மூவாயிரம் பேர் கொண்ட படையணி இந்தியாவிலிருந்து கொழும்பு வரப்போவதாக முன்னர் வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும் தெரிவிக்கபட்டது.

சாhக் சமயத்தில் தலைநகர் கொழும்பின் வான், கடல் கண்காணிப்பு நேரடியாக இந்தியப் பொறுப்பில் இருக்கும். இதற்காகக் கொழும்புக்கு வெளியே கடலில் இரண்டு பாரிய இந்தியக் கப்பல்கள் தரித்து நிற்கும்.

அவற்றிலிருந்து கண்காணிப்புப் பணிகள் முன்னெடுக்கப்படும். அச்சமயத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்தியத்தரப்பின் கவனத்துக்குக் கொண்டுவராமல் எந்த வான் பறப்பும், கடல் நகர்வும் முன்னெடுக்கப்பட முடியாமல் கெடுபிடியில் இருக்கும் எனத் தெரிவிக்கபட்டது.

இந்திய பிரதமர் மற்றும் அதிதிகளின் நலனுக்காக முழு 'தாஜ் சமுத்திரா" ஹோட்டலையும் இந்தியத் தூதரகம் வாடகைக்கு அமர்த்தித் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும். இதற்கான பதிவுகள், ஒழுங்குகள் ஏற்கனவே செய்யபட்டுவிட்டன.

எத்தகைய நெருக்கடியையும் எதிர் கொள்ளத் தயாரான நிலையில் இந்தித் தரப்பின் இரண்டு உலங்கு வானுர்திகள் கட்டுநாயக்கா விமான தளத்திலும் மற்றொன்று கொழும்பில் இராணுவத் தலைமையகத்திற்கு அருகிலும் நிறுத்தப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதை விட குண்டு துளைக்காத வாகனங்கள் மற்றும் கருவிகள் போன்றவையும் இந்தியத் தரப்பின் பாவனைனக்காக கொழும்புக்குக் கொண்டு வரப்படவிருக்கின்றன.

இந்த உச்சி மாநாட்டுக்காக்க கொழும்பு வரும் மன்மோகன் சிங் கொழும்பில் எவ்வளவு காலத்துக்குத தங்கியிருப்பார் எனன்பது, மாநாடு நெருங்கும் சமயத்தில் இலங்கையின் பாதுகாப்பு நிலைமையைக் கருதிதில் கொண்டே தீர்மானிக்கப்படும் என விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

பாதுகாப்பு நிலைமை மோசமாக இருந்தால், உச்சி மாநாட்டின் முக்கிய நிகழ்வின் போது மாத்திரம் மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடியதாக மன்மோகன் சிங் காலையில் வந்து அன்று மாலையே திரும்பிவிடுவார் என்றும கூறிபட்டது.

ஒரு முழு நாளுக்கு மேற்பட்ட காலத்துக்கு இந்திப் பிரதமர் கொழும்பில் தங்குவாரயின் அவர் இங்கு கொழும்பு அரசுத் தலைவர்களைத் தவிர, பிற அரசியல் தலைவர்களையும் சந்திப்பார் என் எதிர்பார்க்கப்படுகின்றது. அவர்களில் த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தனும் அடங்குகிறார் என்றும் அந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.

நன்றி சுடர் ஒளி

சார்க்கை புறக்கணிக்க ஊடக அமைப்புகள் தீர்மானம்?

கொழும்பில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டை முற்றாக புறக்கணிப்பது தொடர்பாக ஊடகவியலாளர்கள் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் ஊடகத்துறை செயற்பாட்டாளர்கள் தெரிவித்திருப்பதாவது :

ஊடகவியலாளாகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகளைத் தொடர்ந்து கொழும்பல் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டை புறக்கணிப்பதற்கு ஊடகவியல்துறை செயற்பாட்டாளர்கள் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சார்க் மாநடாட்டைப் புறக்கணிப்பதற்காக நடவடிக்கைக்கு உள்ளுர் மற்றும் சர்வதேச ஊடக அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஊடகவியலாளர்கள் தமது கடமைகளை மேற்கொள்வதற்கான பாதுகாப்புகளை வழங்க அரசு தவறியுள்ளது.

எமது நடவடிக்கைகளில் அரச ஊடகத்துறையினர் இணைந்து கொள்வார்கள் என நாம் எதிர்பார்க்கவில்லை. எனினும் இந்த நாட்களில் அரச ஊடகத்துறையினா விடுமுறைகளை எடுத்து கொண்டு ஊடகத்துறையின் சுதந்திரமான நடவடிக்கைகளுக்கு உதவும்படி அவர்களை கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளன.

நன்றி தினக்குரல்

அளவுக்கதிகமா பிச்சை எடுத்தா இப்படித்தான் அவனவன் வந்து உரிமை கொண்டாடப்போறான்...

குண்டு வாங்கவெண்டு நக்கப்பொனனிங்கள்தானே.. இனி ஒவ்வொருத்தனா வருவாங்கள்....

ஒருநாட்டின் பாதுகாப்பை குத்தகைக்கெடுத்தாலும் பறவாயில்லை இப்பிடி புடுங்கி எடுத்திருக்கிறங்கள்... மகிந்தக்கு இனியும் வேட்டி ஒரு கேடா.. மன்னிக்கவும் அது வேட்டியில்லை சறங்... உப்பிடிசீரழிஞ்சு ஒரு சாக்கு மாநாடு தேவையா?... சி.. தூ..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.