Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

3 யுத்தக் கப்பல்களை இலங்கைக்கு அனுப்புகிறது இந்தியா. பாதுகாப்பு ஏற்படுகளில் நாராயணன் நேரடிக் கண்காணிப்பு.

Featured Replies

கொழும்பில் இடம் பெறவுள்ள பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்க(சார்க்) உச்சி மாநாட்டின் போது இலங்கைக்கு மூன்று போர்க்கப்பல்களை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்பிற்ககாக அனுப்புவதற்கு புதுடில்லி திட்டமிடுகிறது.

இந்தியப் பிரதமருக்கும் அவருடன் வருகை தரும் தூதுக் குழுவினருக்கும் போதிய பாதுகப்பை வழங்குவதற்காக ஏவுகணைகளை அழிக்கும் வல்லமை வாய்ந்த இரு கப்பல்கள் உட்பட மூன்று யுத்தக் கப்பல்களை இலங்கைக் கடற்பரப்பில் நிறுத்துவதற்கு இந்தியா திட்டமிடுவதாக 'ரைம்ஸ் ஒப் இந்தியா' பத்திரிகை நேற்று புதன் கிழமை தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து அதிக மட்டத்திலான அச்சுறுத்தல் இருக்கலாமெனக்கருதி தவறுகள் எதுவும் இடம்பெறாமல் உறுதிப்படுத்திக் கொள்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மிகவும் சுறுசுறுபாபான விதத்தில் கலந்துரையாடல்கள் இடம் பெற்றுவருகின்றதுடன், இந்த விடயத்தை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனே கவனித்துக வருகின்றார்.

விடுதலைப்புலிகள் தற்கொலைக் குண்டுத்தாரிகளைப் பயன்படுத்துவது தெரிந்த விடயமாக இருப்பதால் தவறுகள் நேர்ந்துவிடுவதற்கு இடமளிக்கக்கூடாது என்பதில் இந்தியத் தரப்பு மிக கவனமாக இருப்பதாக தெதரிவிக்கப்படுகிறது.

விடுதலைப்புலிகள் ஆகாய, கடல்மார்க்க படை பலத்தை கொண்டிருப்பதாலும் ஆழ் கடலுக்குள் சுழியோடிச் சென்று தற்கொலைத்தாக்குதல்களை மேற்கொள்வதற்குரிய பயிற்சிகளைப் பெற்றிருப்பதாலும் அதற்கான எத்ததகைய சந்தர்ப்பங்களுக்கும் இடமளிக்கக் கூடாதென்பதிலும் இந்திய நிபுணர்கள் கவனமாக இருக்கின்றனர். அத்துடன், ராடரில் கண்டு பிடிக்கப்படாமல் கொழும்புக்கு சமீபமாக விமானத்தளம் மீது சிறிய விமானத்தில் சென்று புலிகள் வெற்றிகரமாக குண்டுத்தாக்குதல் நடத்தியதையும் இந்திய அமைப்புகள் மனதில் கொண்டுள்ளன.

அதேசமயம் இந்தியப் பிரதமருக்கு மிக நெருக்கமான முறையில் பாதுகாப்பு வழங்கும் விசேட பாதுபகாப்புக் குழுவினரின் எண்ணிக்கை கொழும்பு விஜயத்தின் போது அதிகளவுக்கு இருக்குமெனத் தகவலறிந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

வெளிநாட்டு விஜயங்களின் போது வழமையாக இந்திப் பிரதமருக்கு வழங்கப்படும் பாதுகாப்பை விட இந்தத் தடவை விசேட பாதுகாப்புக் குழுவினரின் தொகை கொழும்பு விஜயத்தின் போது அதிகமாக இருக்குமென அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

சார்க் உச்சி மாநாட்டு அமர்வுகள் ஜூலை 27 இல் ஆரம்பமாகின்ற போதும் கடைசி இருநாள் மாநாட்டிலேயே இந்தியப் பிரதமர் கலந்து கொள்வாh.

இலங்கைப் பாதுகாப்பு அதிகாரிகளுடன் 3 இந்திய யுத்தக் கப்பல்கள் பாதுகாப்பை வழங்கவுள்ளன. டெல்சி கிளாஸ் நாசகாரி, ராஜ்டபட் கிளாஸ் நாசகாரி என்பனவும் இவற்றில் உள்ளடங்கும். மேலும் இவற்றில் சீகிங், சீரக் உலங்குவானுர்திகளும் உள்ளன.

பாதுகாப்புக்கு தேவையான முழுப் பரிமாணத்தையும் அவை கொண்டிருக்கும். 6900 தொன் எடையுள்ள டெல்கி கிளாஸ் நாசகாரியில் 360 பணியாளர்கள உள்ளனர். இது சக்தியை பிறப்பிக்கும் யுத்தக்கப்பலாகும். அணு-இரசாயன, உயிரியல் சூழ்நிலையிலும் இது இயங்கக் கூடிய ஆற்றலை இக்கப்பல் கொண்டதாகும். அத்துடன் பரந்தளவிலான வீச்சைக் கொண்ட ஏவுகணைகள், ஆயுதங்களையும் இக்கப்பல் கொண்டுள்ளது.

இது இவ்hவறிருக்க, உச்சி மாநாட்டின் போது ஆகாய மார்க்க பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டிருப்பதுட

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பில் இடம் பெறவுள்ள பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்க(சார்க்) உச்சி மாநாட்டின் போது இலங்கைக்கு மூன்று போர்க்கப்பல்களை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்பிற்ககாக அனுப்புவதற்கு புதுடில்லி திட்டமிடுகிறது.

கடவுளேனு 3கப்பலும் நல்லபடியா இந்தியாவுக்கு திரும்பி போகவேண்டும். இல்ல தெரியாதே நம்ம வசூல்ராஜா, அதுதாங்க நம்மமுதல்வர் ஏதாவது வேலைபார்த்தாலும் பார்த்துடுவார் அரசாங்கத்தின்ர அருளோட...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.