Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய ஊடகங்களில் பார்வையில் திருமலை வான் தாக்குதல்

Featured Replies

தற்ஸ் தமிழ் இணையம்

திரிகோணமலை: விடுதலைப் புலிகள் நேற்று இரவு அதிரடி விமானத் தாக்குதலை நடத்தினர். அடுத்தடுத்து நடந்த இந்தத் தாக்குதலில் திரிகோணமலை துறைமுகம் பலத்த சேதமடைந்தது. வீரர்களை ஏற்றிச் செல்லும் கப்பல் ஒன்றும் சேதமடைந்தது. புலிகளின் தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர், 20க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயமடைந்தனர்.

இலங்கையில் நடந்து வரும் போரின் தீவிரம் உக்கிரமடைந்து வருகிறது. தற்போது கிழக்கை விட்டு விட்டு வடக்கில் ராணுவம் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

அப்பகுதியில் சில முக்கிய இடங்களையும் ராணுவம் பிடித்ததாக செய்திகள் வந்து கொண்டுள்ளன. இந்த நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் திரிகோணமலை துறைமுகத்தையும், அருகில் உள்ள கடற்படைத் தளத்தையும் குறி வைத்து விடுதலைப் புலிகள் விமான தாக்குதலில் ஈடுபட்டனர்.

துறைமுகத்தில் நின்று கொண்டிருந்த ஜெட்லைனர் என்கிற வீரர்களை ஏற்றிச் செல்லும் கப்பல் மீதும் மற்றும் கடற்படை தளம் மீது அடுத்தடுத்து விமானம் மூலம் புலிகள் தாக்குதல் நடத்தினர்.

இதில் திரிகோணமலை துறைமுகம் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. அங்கு 2 குண்டுகளை வீசி புலிகள் தாக்குதல் நடத்தினர்.

துறைமுகத்தின் பல பகுதிகள் தீப்பிடித்து எரிந்தன. கடற்படை தளமும் பெரும் சேதத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. அப்பகுதியில் தொடர்ந்து குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டு வருவதாக திரிகோணமலை மக்கள் கூறுகிறார்கள். சேதம் பெருமளவில் இருக்கும் எனத் தெரிகிறது.

யாழ்ப்பாணத்துக்கு படையினரை ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்படும் 'ஜெட்லைனர்' என்ற கப்பலைக் குறி வைத்தும் புலிகள் குண்டு வீசியுள்ளனர். இந்தக் கப்பலில் பெருமளவிலான படை வீரர்கள் ஏற்றப்பட்டு யாழ்ப்பாணம் செல்ல தயாராக இருந்தனர் என்று கூறப்படுகிறது.

திரிகோணமலை கடற்படை தலைமையகம் மற்றம் சீனன்குடா வான்படைத்தளம் ஆகியவற்றிலிருந்து வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளால் விடுதலைப் புலிகளின் விமானம் மீது தாக்குதல் நடப்பட்டது. எனினும் அது தப்பி வன்னி காட்டுக்குள் மறைந்து விட்டது.

தாக்குதல் இடம்பெற்ற நேரம் இருளாக இருந்ததால், விடுதலைப் புலிகளும் இலக்கை சரியாக தாக்க முடியவில்லை. கடற்படையினரும் புலிகளின் விமானங்களைத் தாக்க முடியாமல் போய்விட்டது என்று கூறப்படுகிறது.

இந்த திடீர் தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் உயிரிழப்பு அதிகமாக இருக்கும் என்று இன்னொரு தகவல் தெரிவிக்கிறது. 20க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் பலவீனமடைந்திருப்பதாக கூறப்படும் நிலையில் திடீர் விமானத் தாக்குதலில் அவர்கள் ஈடுபட்டிருப்பதை இலங்கை அரசை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. வடக்கில் ராணுவம் மேலும் முன்னேறாமல் தடுக்கும் பொருட்டே விமானத் தாக்குதலில் புலிகள் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தலைநகர் கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குமுதம் . கொம்

கொழும்பு : இலங்கையில் கடற்படை தளம் மீது விடுதலைப்புலிகள் திடீரென்று நடத்திய விமானத் தாக்குதலில் அந்த தளம் பலத்த சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் கிழக்கு பகுதியை கைப்பற்றிய ராணுவத்தினர், புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்குப்பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் கடுமையான சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கொழும்புவில் இருந்து 260 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள திரிகோணமலை துறைமுகத்தில், இலங்கை கடற்படை தளத்தின் மீது நேற்றிரவு புலிகளின் விமானம் ஒன்று, சக்திவாய்ந்த குண்டுகளை வீசியது. இதுதொடர்பாக, இலங்கை ராணுவ அமைச்சகம் தெரிவிக்கையில், விடுதலைப்புலிகளின் விமானம் 2 குண்டுகளை வீசியதாகவும், இந்த தாக்குதலில், கடற்படை வீரர்கள் 18 பேர் படுகாயமடைந்ததாகவும் தெரிவித்தது. கிளிநொச்சி பகுதியில் இலங்கை ராணுவம் முன்னேறிச் செல்வதைத் தடுக்கும் நோக்கில், திசை திருப்புவதற்காக புலிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கிளிநொச்சி பகுதியில் தீவிர சண்டையில் ஈடுபட்டுள்ள இலங்கை ராணுவத்திற்கு தேவையான தளவாடங்கள், திரிகோணமலை துறைமுகத்தில் இருந்துதான் கொண்டு செல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  • தொடங்கியவர்

மாலை மலர்

திரிகோணமலையில் இலங்கை கடற்படை தளத்தை விடுதலைப்புலி கள் விமான தாக்குதல் நடத்தி தகர்த்தனர். போர்க் கப்பலை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ராணு வத்துக்கும் கடும் சண்டை நடைபெற்று வருகிறது. வடக்கு பகுதியில் விடு தலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை பிடிக்க சிங்கள ராணுவம் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் திரி கோணமலையில் உள்ள துறைமுகத்தை ஒட்டியுள்ள சிங்கள கடற்படை தளம் மீது விடுதலைப்புலிகள் விமான தாக்குதல் நடத்தினார்கள்.

நேற்று இரவு 9.05 மணிக்கு விடுதலைப்புலிகளின் விமானம் அதிரடியாக பறந்து வந்து கடற்படை தளம் மீது 2 குண்டுகளை வீசின. இதில் அந்த கடற்படை தளம் தகர்க்கப்பட்டது.

கண் இமைக்கும் நேரத்தில் இந்த தாக்குதலை நடத்திய அந்த விமானம் பத்திரமாக விடுதலைப்புலிகளின் முகா முக்கு திரும்பிச் சென்று விட்டது.

தாக்குதல் நடத்திய விடு தலைப்புலிகளின் விமானம் ஏற்கனவே அவர்களிடம் உள்ள குட்டி விமானம் போல் அல்லாமல் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பெரிய விமானம் என்று தெரியவந்துள்ளது.

அந்த விமானத்தை நோக்கி சிங்கள ராணுவத்தினர் பீரங்கினால் சுட்டனர். ஆனால் விடுதலைப்புலிகளின் விமானத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

விடுதலைப்புலிகளின் விமான தாக்குதலில் 4 சிங்கள கடற்படையினர் கொல்லப்பட்டனர். 18 கடற்படை வீரர்கள் காயம் அடைந்தனர்.

இந்த திடீர் தாக்குதலால் திரிகோணமலை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதி களில் பதட்டம் நீடித்து வருகிறது.

திரிகோணமலை துறை முகத்தில் இருந்து சிங்கள ராணுவத்தினரையும் ஆயு தங்கள் மற்றும் உணவுப் பொருட்களையும் ஏற்றிக் கொண்டு யாழ்ப்பாணத்துக்கு செல்ல `ஜெட்லைனர்' என்ற போர்க்கப்பல் தயாராக நின்றது. இந்த கப்பலை குறி வைத்தே விடுதலைப்புலிகள் விமான தாக்குதல் நடத்திய தாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் அந்த கப்பல் தப்பி

விட்டது. தாக்குதல் நடந்தது இரவு நேரம் என்பதால் விடு தலைப்புலிகளின் இலக்கு தவறி விட்டது.

இந்த விமான தாக்குதல் நடந்த பிறகு மீண்டும் நள்ளிரவு 12.15 மணிக்கு விடுதலைப்புகள் திரிகோண மலை துறைமுகம் மீது விமான தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போதும் சிங் கள ராணுவத்தினர் பீரங்கி களால் எதிர்தாக்குதல் நடத்தி னார்கள். அதிகாலை வரை இந்த தாக்குதல் நடந்தது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.