Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலைப்புலிகளுடனும் பேசுவதற்கு சுவிஸ் தயார்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவிட்ஸ்லாந்ததின் வெளிவிவகார அமைச்சர் மிசிலின் காமி ரே ( Micheline Calmy-Rey) திங்கட்கிழமை சுவிசின் தலைநகரான பேர்னில் சுவிசின் 170க்கும் மேற்பட்ட ராஜதந்திரிகளுக்கு மத்தியில் உரையாற்றுகையில் தமிழீழ விடுதலைப்புலிகளுடனும் சுவிஸ் பேசுவதற்குத் தயாராக உள்ளது என்ற தகவலை வெளியிட்டுள்ளார். உலகில் உள்ள அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவர்களுடன் தாம் பேசுவதற்குத் தயார் என அவர் கூறிய முன்னேற்றகரமான கருத்து தமிழீழ மக்களுக்கும் நம்பிக்கையூட்டுவதாக அமைந்துள்ளதாக அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர். மற்றவர்களால், அரசியல் அதிகாரத்துடன் ஏற்றுக்கொள்ளப்படாதவர்களாக இருந்தாலும் கூட சுவிஸ் பேசுவதற்குத் தயார் என அவர் தெரிவித்துள்ள கருத்து ஒரு புதிய அரசியல் திருப்பமாக உள்ளது.

நல்லதுக்கும் கெட்டதுக்குமான போராட்டம் என்கிற மனிச்சியன் ( Manichean) பார்வையில் மக்களும் தேசங்களும் ஒன்றில் நண்பர்களாவோ அல்லது எதிரிகளாகவோ மடடும் இருத்தல் வேண்டும் என்னும் நோக்கில் செயற்படும் இன்றைய உலகப் போக்கைக் கைவிட்டு வெளியே வரவேண்டியது மிக முக்கியம் என அவர் தமது உரையில் வலியுறுத்தியுள்ளார்.

இத்தகைய மனிச்சியின் பார்வையைத் தான் தொடரவேண்டுமானால் இஸ்ரேயல் பலஸ்தீனர்களுடன் ஒருபொழுதும் பேசி இருக்க இயலாது – மாவோயிஸ்ட்டு தீவிரவாதிகள் நேபாளத்துடன் பேசியிருக்க முடியாது – சர்வதேச சமுகம் சீனாவில் இடம்பெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களைப் பகிஸ்கரித்திருக்க வேண்டும். எனவே நாங்கள் இந்த மனிச்சியன் “ஞானமுள்ள முக்கியஸ்தர்”களின் பேச்சைக் கேட்பதா அல்லது நாங்கள் எந்தவித பாகுபாடும் காட்டாது அல் கேடா தலைவர் பின்லாடன் உட்பட அனைவருடனும் சமமாக மேசையில் உட்கார்ந்து பேசுவதா எது நல்லதென அவர் தமது பேச்சில் கேள்வி எழுப்பினார்.

பேச்சுவார்த்தைக்கு மறுப்பது மலட்டுத் தனமான செயல் என வர்ணித்த அவர் எப்பொழுதும் கையாளப்பட வேண்டிய சக்திமிக்க ஆயுதம் பேச்சுக்களே என்றார். சுவிட்ஸ்லாந்து மற்றைய நாடுகளைப் போல எந்த அமைப்புக்கும் தடைப்பட்டியல் போட்டு அவர்களுடன் பேசுவதற்கு மறுப்பதில்லை என்றும் தமது பேச்சில் சுட்டிக்காட்டினார்.

நாங்கள் ஹமாஸ் ஹசபுல்லா உடனும் மற்றைய இஸ்லாமிய அமைப்புக்களுடனும் பேசியுள்ளோம். மிகவும் மாறுபட்ட கருத்துள்ள கொசவா குழுக்கள் உடனும் பேசியுள்ளோம்.. காரணம் அவர்களால் தான் மக்களின் சரியான அக்கறைகளைத் தெளிவாக விளக்க இயலும். நாங்கள் அவர்களுடன் பேசுவதால் அவர்களின் முறைகளை நாம் ஏற்றுக்கொண்டதாகப் பொருளில்லை. ஆனால் நாங்கள் அவர்கள் வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வர உதவுகின்றோம்.

மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ள ஹிசபுல்லா கொலம்பியாவின் பார்ஸ் FARC சிறிலங்காவின் தமிழீழவிடுதலைப்புலிகள் உகண்டாவின் பிரபுக்கள் எதிர்ப்புப்படை எல்லாமே உல கில் உள்ள வித்தியாசமான முரண்பாடுகளுக்கு தீர்வுகளைக் காண்பதற்கு அத்தியாவசியமானவை என அவர் தமது பேச்சில் வலியுறுத்திள்ளார் எனச் செய்திகள் வெளிவந்துள்ளன.

ஆயினும் பேச்சுவார்த்தைகள் என்பன “ஏற்கப்படாதவர்களுக்கு ஏற்புடைமை” என்ற பொருளல்ல. இதனைச் சரியாக விளங்கிக் கொள்ளாததினால் இத்தகைய முயற்சிகள் சிலவேளைகளில் “ சிக்கலான அரசியல் தடைகளை” யும் கொதிப்பையும் தோற்றுவிக்கின்றன எனவும் அவர் தமது பேச்சில் கூறினார்.

கொலம்பியாவின் அதிகாரிகள் சுவிஸ் அனுசரணையாளர் ஜீன் பெரே கொன்ராட்டு 2001ல் நோவார்டிஸ் ஊழியர்களை விடுவிக்க பார்ஸ் அமைப்புக்கு 5 இலட்சம் டொலர்களை கொடுத்தார் என விசாரணை ஒன்றை இம்மாத ஆரம்பத்தில் தொடங்கியுள்ளனர். இருந்த போதிலும் இதனை அனுசரணையாளர் கொன்ராட்டும் சுவிஸ் வெளிவிவகார அமைச்சும் மறுத்துள்ளனர்.

இந்நிலையில் சுவிஸ் வெளிவிவகார அமைச்சரின் பேச்சு சுவிசிலுள்ள அவரின் அரசியல் எதிர்ப்பாளர்களிடை ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளதெனச் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். சுவிஸ்லாந்தை அதன் முக்கிய கூட்டாளிகளிலிருந்து விலக வைக்கும் மந்திரவாதச் செயல் இதுவென அவர்கள் வெளிவிவகார அமைச்சரின் பேச்சை விமர்சித்துள்ளனர். உதாரணத்திற்கு கடந்த மார்ச் மாதத்தில் சுவிஸ் வெளிவிவகார அமைச்சர் டெகரானுக்குச் சென்று ஈரானிய எரிவாயுவுக்கான அரசகம்பெனியுடன் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதை அமெரிக்கா ஈரானுக்கான “தவறான சமிக்ஞை” எனக் கடுமையாக விமர்சித்ததை இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆயினும் இதனை மறுத்த சுவிட்ஸ்லாந்ததின் வெளிவிவகார அமைச்சர் மிசிலின் காமி ரே ( Micheline Calmy-Rey) சுவிட்ஸ்லாந்து அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான நல்லுறவுகளைப் பேணி வருகிறதெனக் கூறியுள்ளார். “ எங்களின் பலம் பேசுவதும் பேச்சுக்களை முன்னேற்றமடையச் செய்வதும் எங்களின் ஆற்றலுக்கு உட்பட்ட வகையில் வேண்டிய சவால்களை எதிர்நோக்குவதுமே” என அவர் கூறியுள்ளார்.

http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=266

Edited by மோகன்
செய்தி முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது - மோகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.