Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2008ன் முதல் 8 மாத காலப்பகுதியில் 1000 பேர் கடத்தப்பட்டுள்ளனர்

Featured Replies

இலங்கையில் இந்த வருடத்தின் முதல் எட்டு மாத காலப்பகுதியில் ஆயிரம் பேர் கடத்தப்பட்டதாகப் பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2007ஆம் ஆண்டு 1229 பேரும், 2006ஆம் ஆண்டு 1190 பேரும் கடத்தப்பட்டுள்ளனர் என்றும் அத்தகவல் தெரிவிக்கின்றது. 2007 காலப்பகுதியில் கடத்தல் சம்பவங்கள் அதிகம் நடைபெற்ற பிரதேசமாக யாழ்ப்பாணம் விளங்குகிறது.

அங்கு 118 பேர் கடத்தப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து அதிகமாக மட்டக்களப்பில் 105 சம்பவங்களும் கொழும்பில் 75 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இதைவிட இரத்தினபுரியில் 68 சம்பவங்களும், நுகேகொடையில் 56 சம்பவங்களும், திருமலையில் 54 சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன

இதேபோல களனியி;ல் 43 சம்பவங்களும் கேகாலையில் 42 சம்பவங்களும் அம்பாறையில் 41 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. அத்துடன் மலைநாட்டுப் பகுதியான பண்டாரவளையில் 9 பேரும், பதுளை, நுவரெலியாவில் தலா பத்துப் பேரும், மாத்தறையில் 13 பேரும் கடத்தப்பட்டுள்ளனர்.

ஆகக்குறைவான கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்ற பகுதிகளாக ஹற்றனில் 6 சம்பவங்களும், கம்பளையில் 5 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. 2007இல் நடைபெற்ற 1229 கடத்தல் சம்பவங்களில் இதுவரை 250 சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளே முடிவடைந்துள்ளன.

முக்கால்வாசிக்கு மேற்பட்ட சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் இன்னமும் பூர்த்தியடையவி;ல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போவோரின் தொகை அதிகரித்து வரும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் முன்னணியில் உள்ளது.

பலவந்தமாகக் கடத்தப்பட்டு காணாமல் போவோரின் தொகை அதிகரித்து வரும் நாடுகளின் பட்டியலில் இலங்கை, பாகிஸ்தான், சாட், பிலிப்பைன்ஸ்,சூடான் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் முன்னணியி;ல் திகழ்வதாகவும் பலவந்தமாக அல்லது விருப்பத்துக்கு மாறாகக் காணாமல் போவோர் தொடர்பான நடவடிக்கையில் ஈடுபடும் ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

25வது சர்வதேச காணாமல் போனோர் தினம் கடந்த சனிக்கிழமை அனுஸ்டிக்கப்பட்டதை முன்னிட்டு பலவந்தமாக அல்லது விருப்பத்துக்கு மாறாகக் காணாமல் போவோர் தொடர்பான நடவடிக்கையில் ஈடுபடும் ஐக்கிய நாடுகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகெங்கும் கடத்தப்பட்டுக் காணாமல் போவோரின் தொகை அதிகரித்து வருகிறது. உலகின் அனைத்துப் பாகங்களிலும் வாழும் ஆண்கள் பெண்கள், சிறுவர்கள் என அனைத்துப் பிரிவினர் மீதும் இது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இலங்கை, பாகிஸ்தான், சாட், பிலிப்பைன்ஸ், சூடான் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் அல்ஜீரியா நேபாளம் போன்ற நாடுகளிலும் காணாமல் போனோர்தொகை நாளாந்தம் அதிகரித்து வருகின்றது.

இவ்வாறு காணாமல் போனவர்களுள் மனித உரிமை ஆர்வலர்கள் மதத் தலைவர்கள், வௌ;வேறுபட்ட இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் மற்றும் பழங்குடியினர் எனப் பலதரப்பட்டவர்களும் அடங்குவர் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனோர் தொடர்பாக சரியாக அறிக்கையிடப்படுவதில்லை.

அரசாங்கங்களும் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் ஆக்கபூர்வமாக ஈடுபடுவதில்லை. பலவந்தமாகக் காணாமல் போவதிலிருந்து அனைவரையும் பாதுகாக்கும் சர்வதேச பிரகடனத்தை, சட்டத்தை அனைத்து அரசாங்கங்களும் உறுதிப்படுத்துவதும், அதனை வேரோடு களைவதற்கான நீதி விசாரணைகளுக்கு அரசாங்கங்களும் அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு நல்குவதும் அவசியம் என்றும் இவ்வமைப்பு தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

http://www.tamilskynews.com/index.php?opti...s&Itemid=50

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.