Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுதந்திரமாக வாழவிடு; இல்லையேல் சாகவிடு என்ற தன்மானத்தைக் காக்கவே வன்னித்தமிழர்கள் விரும்புகின்றனர்: விக்ரமபாகு கருணாரத்ன

Featured Replies

வன்னி மக்கள் அரசின் நிவாரணத்தை எதிர்பார்த்திருக்கவில்லை. சொந்த மண்ணில் வாழவிடு இல்லாது போனால் அந்த மண்ணிலே சாகவிடு என்று தன்மானத்தைக் காத்துக் கொள்ளவே இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அவர்கள் நிராகரிக்கிறார்கள்.

இப்படிக் கூறியுள்ளார் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன. வன்னி மக்களை வவுனியாவுக்கு வருமாறு ஜனாதிபதி உட்பட அரச உயர்மட்டத் தலைவர்கள் அழைத்தாலும் அந்த மக்கள் தமது சொந்த மண்ணை விட்டு வெளியேறமாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

வவுனியாவுக்கு வன்னி மக்களை அழைக்கும் அரசின் முயற்சி குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:-

யுத்தத்தைத் திணித்திருக்கின்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் நிவாரணங்களையும் உணவுப் பொதிகளையும் வன்னித் தமிழர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. சொந்தமண்ணில் வாழவிடு இல்லாது போனால் அந்த மண்ணிலேயே சாகவிடு என்ற தன்மானத்தைக் காத்துக் கொள்ளவே இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை அந்த மக்கள் நிராகரித்திருக்கின்றனர்.

இடமபெயர்நத நிலையிலும் அடம்பிடிப்பதாக அரசாங்கம் கூறினாலும் சர்வதேசமே அலுத்துக் கொண்டாலும் இரண்டு இலட்சத்து ஐம்பதினாயிரம் மக்களின் நிலைப்பாட்டை மாற்றிவிட முடியாது. அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் யுத்தத்தை வலிந்து நடத்திக் கொண்டிருக்கின்றன. இதனால் இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

நிவாரணங்களை எதிர்பார்க்கவில்லை

இன்றையநிலையில் அம்மக்கள் வாழவே வழியற்றுக் கிடக்கின்றனர். பட்டினியால் செத்து மடிகின்றனர்.இவர்களுக்காக அரசாங்கமும் ஐக்கியநாடுகள் அமைப்பும் இணைந்து நிவாரணங்களை ஒழுங்கு செய்திருக்கின்றமையும் தெரிந்தவிடயம். ஆனால் இடம்பெயர்ந்துள்ள இரண்டு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான வன்னித் தமிழர்களில் எவரும் வவுனியாவுக்கு இந்த நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ள வரவில்லை.

இடம்பெயர்ந்துள்ள மக்கள் ஒவ்வொருவரும் தமது மண்ணை நேசிக்கின்றனர் என்பது அரசாங்கத்தினதும் சர்வதேசத்தினதும் அழைப்பினை நிராகரிப்பதில் இருந்து தெரிகிறது. வாழவே வழியில்லாதபோதிலும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு ஏன் அந்த மக்கள் வர மறுக்கின்றனர் என்ற கேள்வி அரசாங்கத்துக்கு இப்போது எழுந்துள்ளது. இப்போது வடக்கில் இடம்பெற்றுக் கொண்டிருப்பது புலிகளின் பிரச்சனை அல்ல. தாயகப் பிரச்சனையே மேலோங்கியுள்ளது.

எமது பூமியைத் தந்துவிடு சுதந்திரமாக வாழவிடு இல்லையேல்சொந்த மண்ணிலேயே சாகவிடு என்ற நிலைப்பாட்டில் அவர்கள் உறுதியாக இருக்கின்றனர். தமது தாயகப் பூமியைக் காத்துக்கொள்ளவும் சுயநிர்ணய உரிமையைத் தாமே காத்துக்கொள்ளவும் வெளிநாடுகளில் தங்கியிருக்கின்ற அனைத்துத் தமிழர்களும் வன்னியில் கூடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இது நடைபெறப்போவது உறுதியாகியுள்ளது- என்றார் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன.

நன்றி தமிழ்வின்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.