Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

18 வருடங்களின் பின்னர் புலிகளின் தாக்குதலில், அதுவும் விமானத் தாக்குதலில் இந்தியப் படையினர் இருவர் காயம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் இருந்து அமைதி காக்கும் படையினர் 1990 ஆம் ஆண்டில் வெளியேறிய பின்னர், 18 வருடங்களின் பின்னர் புலிகளின் தாக்குதலில், அதுவும் விமானத் தாக்குதலில் இந்தியப் படையினர் இருவர் காயமடைந்துள்ளனர் என்று இந்தியாவின் பிரபல பத்திரிகைகளில் ஒன்றான ஹிந்துஸ்தான் ரைம்ஸ் விமர்சித்துள்ளது.

வவுனியாவில் உள்ள இலங்கை விமானப்படை ராடர் தளத்தை இலக்கு வைத்து புலிகள் நேற்று நடத்திய தாக்குதலில், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு இந்திய விமானப் படைத் தொழில்நுட்பவியலாளர்களும் காயமடைந்திருக்கின்றனர்.

இந்திய விமானப் படையின் சார்ஜண்ட் தர நிலையைச் சேர்ந்த சிந்தாமணி ரவூத் மற்றும் ஏ.கே.தாக்கூர் ஆகியோரே இத்தாக்குதலில் காயமடைந்திருக்கின்றனர்.

சம்பந்தப்பட்ட இந்திரா II ரக ராடரை இந்தியாவே இலங்கைக்கு வழங்கியிருந்தது என்பது தெரிந்ததே. அந்த ராடரை இயக்குவது மற்றும் பராமரிப்பது போன்ற பணியை இந்திய விமானப்படையைச் சேர்ந்த இந்த தொழில்நுட்பவியலாளர்களே கவனித்து வந்தனர் என்றும் ராடர் கட்டமைப்பு மீதான தாக்குதலில் அவர்கள் காயமடைந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

காயமடைந்த இருவரும் உடனடியாக விமானம் மூலம் கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டனர். கொழும்பில் அப்பலோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட இருவருக்கும் உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன என்றும், அவர்களது உயிருக்கு ஆபத்து ஏதுமில்லை என்றும் விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.

புலிகளின் விமானங்களின் பறப்பு நகர்வுகளைக் கண்காணிப்பதற்காக இந்தியா தனது இந்திரா II ரக ராடர்களை இலங்கைக்குக் கொடுத்துதவியது என்ற தகவல் முன்னர் வெளியாகியிருந்த போதிலும், அந்த ராடர்களை இந்திய விமானப் படையினரே நேரடியாகப் பிரசன்னமாகி இலங்கைத் தரப்புக்கு இயக்கி, தொழில்நுட்ப ஆலோசனை வழங்கி, பராமரித்து வருகின்றனர் என்பது வெளியே தெரிந்திருக்கவில்லை.

புலிகளின் நேற்றைய தாக்குதல் இந்த விடயத்தில் குட்டைப் போட்டு உடைக்கச் செய்துவிட்டது எனச் சுட்டிக்காட்டும் செய்தி வட்டாரங்கள், புலிகளுக்கு எதிரான இலங்கைப் படைகளின் போரில் இந்தியப் படையினர் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கின்றமை இந்தத் தாக்குதலினால் அம்பலமான நிலையில் இந்த விவகாரம் இலங்கையிலும், இந்தியாவிலும், புலம்பெயர் தமிழர்கள் வாழும் பிரதேசங்களிலும் பலத்த அதிர்ச்சி அலைகளைத் தோற்றுவிக்கும் என்றும் தெரிவித்தன.

புலிகளின் நேற்றைய தாக்குதல் தொடர்பான விடயம் நேற்று நண்பகல் கொழும்பில் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலும் எதிரொலித்தது.

வவுனியாத் தளம் மீதான புலிகளின் தாக்குதலில் வெளிநாட்டவர்கள் யாரும் காயமடைந்தனரா? அவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டதா? என்று செய்தியாளர் ஒருவர் அங்கு கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார இராணுவ முகாமுக்குள் வெளிநாட்டவர்கள் எப்படி வருவார்கள்? என்று பதில் கேள்வி கேட்டு சமாளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

uthayan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.